தமிழ்ச் சோலை மலர்த்தோட்டத்துள்
கொய்து குவித்து வைத்துள்ள
பூக்கள் மேல் புரண்டெழும் உணர்வு.
நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.
உன் சிரிப்பலையில்-என்
சிந்தனை அமிழ்ந்து போகும்.
உன் பார்வை ஒன்று போதும்
பனித்துகள்களாய் நான் மாற.
உன் முத்தப்பதிப்பில்-என்
கருப்பை உன் சுகம் அறியும்.
உன் மென்மையான அம்மா எனும்
உதட்டசைவில் என் மேனியில்
கோடி முத்தங்கள் பதிந்தெழும் உணர்வு.
No comments:
Post a Comment