எதனை பரிசென தருவது?

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.

‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…

என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…

உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…

இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.

காதலும் கடைசியுமாக

பார்வைகளை எனக்களித்துவிட்டு
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?

எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
‘சண்டை போடலாமா?’ என்று கேட்டால்…
‘சண்டையெல்லாம் கூடாது’ என்று சண்டைக்கு வராமல்
அதற்கும் ‘சரி’யென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?

என்ன சொல்ல.. என்ன சொல்ல.!

மழலைத் தமிழ் பேசுகிற போது
தமிழ்ச் சோலை மலர்த்தோட்டத்துள்
கொய்து குவித்து வைத்துள்ள
பூக்கள் மேல் புரண்டெழும் உணர்வு.

நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

உன் சிரிப்பலையில்-என்
சிந்தனை அமிழ்ந்து போகும்.

உன் பார்வை ஒன்று போதும்
பனித்துகள்களாய் நான் மாற.

உன் முத்தப்பதிப்பில்-என்
கருப்பை உன் சுகம் அறியும்.

உன் மென்மையான அம்மா எனும்
உதட்டசைவில் என் மேனியில்
கோடி முத்தங்கள் பதிந்தெழும் உணர்வு.

மனசின் வழி..

இரவின் நிழலாய்
நீள்கிறது விழிப்பு.

கதவுகளற்ற
யன்னல் கம்பிகளினூடே
ஒளிரும் விழிகளுடன்
கரும் பூனை ஒன்று
பாய்ந்து மறைகிறது.

கண்களை மூடுகையில்
இனம்காணமுடியா
சின்னதும் பெரியதுமாய்
மீன்குஞ்சுகள்
நீந்திப்பரவுகிறது.

குருவி ஒன்றின்
கீத ஒலி
ஸ்வரசச்ரமாய்
இறங்குகிறது உடலுள்.

உணர்வுகள் தோறும்
மெதுமெதுவாய்
பூக்கள் முகையவிழும் ஓசை

எரிவுடன்
விழிவழியே
திரள்கிறது கண்ணீர்.

போர்வையை
ஒருக்கழித்து எழும்புகையில்
வானத்தில் விடிவெள்ளி.

வைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்

கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி அழிக்க, புதிதாக, டிஜிட்டல் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.என்ன வியப்பாக இருக்கிறதா, உண்மை தான். கம்ப்யூட்டர் உலகில் எதுவும் சாத்தியம் தான்.

இதுகுறித்து, கணினி அறிவியல் துறை பேராசிரியர் எரின் பல்ப் கூறியதாவது:

சாதாரணமாக, ஒரு இடத்தில் உணவுப் பொருட்களை கண்டறிந்தால், அந்த இடத்தில், எறும்புகள் அனைத்தும், கூட்டாக ஒன்று சேர்ந்து விடும். அதேபோல், ஆபத்து என்றாலும், அந்த இடத்தில் கூட்டமாக சேர்ந்து, தங்கள் எதிரியை அழித்துவிடும் இயல்பு கொண்டது எறும்புகள்.இந்த டெக்னிக்கை பாதுகாப்புக்காக, கம்ப் யூட்டர் துறையிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.அந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானது தான், டிஜிட்டல் எறும்புகள்.கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் ஏற்படும், அச்சுறுத்தல்களை சமாளிக்க, பல்வேறு வகையான டிஜிட்டல் எறும்புகள் உருவாக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, விஞ் ஞானி கிளென் பிங்க் கூறுகையில்,

"டிஜிட்டல் எறும்புகள், கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் நகர்ந்து செல்லும் போது, டிஜிட்டல் அடையாளங் களை விட்டு செல்லும். இந்த டிஜிட்டல் அடையாளங்கள் மூலம், எறும்புகள் ஒன்றன் பின், மற்றொன்று என பின்பற்றி செல்லும்."எறும்புகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அமைப்பு, வழக்கமான பாதுகாப்பு முறையை விட வேகமாக செயல்படும். இவை, புதிய தொற்றுக்களை கண்டறியும் வகையில் முறையான இடைவெளியில், அடிக்கடி மேம்படுத்தப்படும்."இது கம்ப்யூட்டரில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் வகையில், புரோக்கிராம் செய்யப் பட்டது' என்றார்.

'நானோ தொழில் நுட்பத்தினால் மரணத்தை வெல்ல முடியும்'

இன்னும் 20 ஆண்டுகளில், நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும், என பிரிட்டன் விஞ் ஞானி தெரிவித்துள்ளார்.

தற்போது எந்த துறையை எடுத்தாலும், நானோ டெக்னாலஜி பற்றி பேசப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும். முடிவில் மரணமே ஏற்படாமல் செய்யவும் முடியும், என்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி ரே குர்ஸ்வீல்.ரத்தத்தில் உள்ள செல்களின் பரப்பளவு கொண்ட "நானோ போட்' என்ற பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நானோபோட்டை பயன்படுத்தி கட்டியை அழிக்கலாம்; உடம்பில் துளையிடாமலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்; ரத்தம் உறைவதை தடுக்கலாம்.

இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் மரணமே ஏற்படாதவாறு செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தினால் மூளையின் திறனையும் அதிகரிக்க செய்ய முடியும். ஒரு நிமிடத்தில் ஒரு புத்தகத்தை முழுவதுமாக படிக்கவும் முடியும்.நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை கண்களும், செயற்கை உறுப்புகளும் கூட உருவாக்க முடியும், என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ரே குர்ஸ்வீல் தெரிவித்துள்ளார்.

'மிஸ்டு கால்...!'கொடுப்பவரா நீங்கள்; உஷார்: உளவுத்துறை கண்காணிக்கும்

மொபைல் போனில் "மிஸ்டு கால்' தரும் பழக்கம் உள்ளவரா, இனி உஷாராக இருங்கள்; உளவுத்துறை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், பாக்., பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டுபிடித்து, அவர்களின் சதித் திட்டங்களை உடனுக்குடன் ஒடுக்க, மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சதி திட்டங்களை செயல்படுத்துகின்றனர். தகவல் தொடர்புகளை துண்டித் தாலே, பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி விட முடியும் என்று, உளவுத்துறை நம்புகிறது. மொபைல் போன், இன்டர்நெட் மூலம் பயங்கரவாதிகள் தொடர்பு கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டது. இன்டர்நெட் மூலம் பயங்கரவாதிகள் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்காணிக்க, உள வுத்துறை ஏற்பாடு செய்துள் ளது. இதனால், இன்டர்நெட் வழியாக சதித் திட்டங்களை தீட்டுவதை ஓரளவு முறியடித்து வருகிறது.

மொபைல் போன் மூலம், பயங்கரவாதிகள் தொடர்பு கொள் வதைத் தடுக்க, ஏற்கனவே நடவடிக்கை எடுக்க உளவுத்துறை ஆரம் பித்து விட்டது. முதல் கட்டமாக, போலி மொபைல் போன்கள் விற்பனை செய்வதை தடுத்தது. அடுத்து,போலி மொபைல் போன் இணைப்புகளையும் துண்டிக்க திட்டமிட்டு உள்ளது. மொபைல் போன்களில், "இன்டர்நேஷனல் மொபைல் எக்விப்மென்ட் ஐடென்டிபிகேஷன்' (ஐ.எம்.இ.ஐ.,) என்ற எண் இருக்கும். இந்த எண், ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனித்தனியாக இருக்கும். இதை வைத்துத் தான் குறிப்பிட்ட மொபைல் போனில் இருந்து தகவல் பரிமாறப்பட்டுள்ளது என்பதை, கண்காணிக்க முடியும்.

ஆனால் சீனா, தென் கொரியாவில் இருந்து போலி மொபைல் போன்கள், இந்தியாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக் கான போன்களுக்கு, ஒரே ஐ.எம். இ.ஐ., எண் தரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி ஒரே எண், பல மொபைல் போன்களுக்கு அளிக் கப்படுவது, பயங்கரவாதிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. சீன, கொரிய மொபைல் போன்களை பயன் படுத்திய பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க முடியாமல் போனதால், உளவுத்துறை இதற்கு தடை விதித்தது. இந்த தடை வரும் டிசம்பர் 1ல் இருந்து அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், அடுத்த அதிரடியாக "மிஸ்டு கால்'களை எல் லாம் கண்காணிக்க உளவுத்துறை முடிவு செய்துள்ளது.

எல்லா "மிஸ்டு கால்'களையும் பதிவு செய்து அளிக்கும்படி, அரசு மற்றும் தனியார் மொபைல் இணைப்பு நிறுவனங்களுக்கு உத் தரவு அனுப்பும்படி, தொலைபேசித்துறையை கேட்டுக்கொண்டது. மொபைல் போனில் பேசினால் தான் காசு வசூலிக்க முடியும். அதனால், அந்த அழைப்புகளை மட்டும், எல்லா மொபைல் நிறுவனங்களும் பதிவு செய்து வருகின்றன. ஆனால், "மிஸ்டு கால்'களுக்கு காசு வசூலிக்கப்படுவதில்லை என்பதால், அவற்றை நிறுவனங்கள் பதிவு செய்வதில்லை. மொபைல் போனில் "மிஸ்டு கால்' விடுவோர் தான் அதிகம்.

100 அழைப்புகளில் 80 அழைப்புகள் "மிஸ்டு கால்' தான். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கடைக்காரர்கள், விற்பனை பிரதிநிதிகள், டிரைவர்கள் போன்றவர்களும் "மிஸ்டு கால்' அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு "மிஸ்டு கால்' அனுப்பினால், தங்களுக்கு செலவு மிச்சம் என்று இப்படி செய்கின்றனர். "இப்படி 80 சதவீத "மிஸ்டு கால்'களை பதிவு செய்தால், அதற்கான டிஜிட்டல் சாதன செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும். இதனால், நிறுவனத்துக்கு இழப்பு தான்' என்று, தனியார் மொபைல் இணைப்பு நிறுவனங்கள் புலம்புகின்றன.

உளவுத்துறைக்கு தொலைபேசித்துறையும் இது தொடர்பாக விளக்கி, "சந்தேகப்படும்படியான மிஸ்டு கால்களை சொன்னால், உடனே பதிவு செய்வதாக நிறுவனங்கள் உறுதி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.எனினும், "எல்லா மிஸ்டு கால் களையும் பதிவு செய்தால் தான் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்' என்று, உளவுத்துறை வலியுறுத்தி வருகிறது. "மிஸ்டு கால்'களை பதிவு செய்வது விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

தினமும் அரை கிலோ மண்: தியாகதுருகம் வாலிபரின் உணவு

கள்ளக்குறிச்சி: "நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25); காய்கறி வியாபாரி. மூன்று வயதில் மண்ணை சாப்பிட ஆரம்பித்தவர் தற்போது 25 வயதிலும் மண் சாப்பிட்டு வருகிறார். இடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். தினமும் அரை கிலோவுக்கு மேலாக மண்ணை உணவாக உட்கொள்கிறார். எப்போது பார்த்தாலும் இவர் பேண்ட் பாக்கெட்களில் குறைந்த பட்சம் கால் கிலோவிற்கு மண்ணை சேமித்து வைத்து நாள் முழுவதும் சாப்பிட்டு வருகிறார்.

மணலை சாப்பிடும் போது மணலில் பெரிய கற்கள் இருந்தால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுகிறார். ஏரி களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின், தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன். இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, மண்ணை சாப்பிட்டு கொண்டே கூலாக தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரையில் சொத்துத் தகராறு காரணமாக, ஐ.டி.ஐ., படித்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு ஆயுள் சிறை தண்டனை, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

மதுரை புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விவசாயி ராசுத்தேவர். புதுப்பட்டி கொட்டகைமேட்டை சேர்ந்தவர் விவசாயி மாயாண்டி (63). ராசுத்தேவருக்கு சொந்தமான ஏழரை சென்ட் நிலம், கொட்டகைமேட்டில் உள்ளது. இந்த நிலம் தனக்கு சொந்தமானது என, மாயாண்டி பிரச்னை செய்தார். இவ்வழக்கு மதுரை முன்சீப் கோர்ட்டில் நடந்தது. ராசுத்தேவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மாவட்ட கோர்ட்டில் மாயாண்டி அப்பீல் செய்தார்.

இதிலும் ராசுத்தேவருக்கு ஆதரவாக தீர்ப்பானது. இதையடுத்து, நிலத்தை சுத்தம் செய்து விட்டு 2006 செப்., 14ல், பகல் 12 மணியளவில் ராசுத்தேவர், அவரது மகன் பன்னீர்செல்வம் (22) (ஐ.டி.ஐ., படித்தவர்) மற்றும் உறவினர்கள் இரண்டு ஆட்டோ, பைக்கில் வீடு திரும்பினர். புதுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, ஆட்டோவை வழிமறித்த மாயாண்டி, அவரது மகன்கள் சந்தானம் (36), ராஜா (28), மூர்த்தி (27), கண்ணன் (23), சந்தானம் மனைவி சித்ரா (33), ராஜா மனைவி முத்துமாரி (23), மாயாண்டி மனைவி அம்மாசி (58) ஆகியோர், பன்னீர்செல்வத்தை அரிவாளால் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் பஸ் ஸ்டாப் அருகில் இருந்த பாண்டி என்பரின் டீ கடைக்குள் தஞ்சம் புகுந்தார். உள்ளே புகுந்து பன்னீர்செல்வத்தை வெட்டிக் கொன்றனர். ராசுத்தேவர் புகார்படி மாயாண்டி, அவரது மனைவி, மகன்கள், மருமகள்களை ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கைது செய்தார்.இவ்வழக்கு, மதுரை இரண்டாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் பி. அன்புசெல்வன் ஆஜரானார். மாயாண்டி, சந்தானம், ராஜா, மூர்த்தி, கண்ணன், சித்ரா, முத்துமாரி, அம்மாசி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை, 44 ஆயிரம் ரூபாய் அபராதம், அபராதத் தொகையில் 20 ஆயிரம் ரூபாயை ராசுத்தேவருக்கு வழங்கும்படி நீதிபதி ஆர். ராதா உத்தரவிட்டார்.

அது மட்டுமே காதல்

அது மட்டுமே காதல்!

நம் பிரிவின்
கடைசி புள்ளியில்
ஆரம்பிக்கிறது
அடுத்த சந்திப்பிற்கான
ஆயுத்தம்!

கடைசிவரை
பேசவதற்காக எடுத்து வந்த
வார்த்தைகள் பேசப்படமலேயே
திரும்புகின்றன;
நம் சந்திப்புகளில்!

பூங்காவின் வாசலில்
உனக்காக பூ வாங்க
அரைமுழம் அதகமாய்
அளக்கிறாள் பூக்காரகிழவி!

மூச்சு முட்டும்
தொலைவில் நாம்
சந்தித்துக் கொள்ளும்பொழுது
நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்;
நான் மூர்ச்சையாகிறேன்!

மேல் விழுந்து தங்கும்
இலைகளை தட்டிவிடாதே!
நம் சந்திப்பிற்கு
அதனடியை தேர்ந்ததற்கு
நன்றி பகன்று
ஆசிர்வதிக்கிறது அம்மரம்!

அரசியல்

நாடறிந்த கொள்ளையின்
நவின பெயர் - அரசியல் !

வார்த்தைகளை வீசி
வாக்குகளை பெற்று
மக்களின் வரி பணத்தில்
வலம் சேர்க்கும் திருட்டு
கும்பலின் நிஜ முகம் -அரசியல் !

உடன் பிறப்பே !ரத்தத்தின் ரத்தமே !
கண்மணிகளே !என வெற்று
வார்த்தை ஜாலங்களால் ..
வானுயர மாளிகைகளும் ,
பல கோடி வணிக நிறுவனங்களையும்,
கட்டுக்குள் வைத்துக்கொண்டு
கண்ணீர் விடும் -குள்ள நரித்தனத்தின்
மறுபெயர் அரசியல் !

இன்று ஒரு பேச்சு !
நாளை ஒரு பேச்சு !
இவர்கள் குடித்தது தாய் பாலல்ல
மதுவென்றே சொல்லதோன்றும்
உண்மை குடி மகன்களின்
உறைவிடம் -அரசியல் !

நாட்டின் சாபமே
வரமென நாம் நினைக்கும்
விந்தையின் மறுபெயர்-அரசியல் !

காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி

நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்த‍வையா?
உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.
இரண்டுக்கும் ப‌ய‌ந்து
உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!

தொலைதூர பயணங்களில்
காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍
செல்பேசி உரையாடல்களை
கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!

குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.
கண்ணுக்கு மையை
அதிகமாய் தீட்டிவிட்டாயோ?

செல்பேசியில் என‌து பேச்சு
இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.
இதயத்திலிருந்து வருவதால்
‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!

தேர்தல் திருவிழா!

ஆயிரங்களை வைத்து
லட்சத்தைப் பிடிக்கலாம்.
லட்சத்தைப் போட்டால்
கோடியை எடுக்கலாம்.
கொள்ளையடிப்பதற்கு யாருடனும்
கூட்டுச் சேரலாம்..
லாபத்தை வைத்தே
தேர்தல் திருமணத்தில்
சம்பந்தியாகலாம்..
கொள்கையைப் பற்றியெல்லாம்
கனவு கூடக் காண்பதில்லை.
அந்த நேரத்திலும்
அகப்பட்டதை சுருட்டும்
திட்டங்களுக்குத் தான் முதலிடம்.

தொகுதியில் ஒன்று
தொக்கி நின்றாலும்,
கொள்கை மாறிப் பின்
கோஷங்களும் மாறிவிடும்.

கல்வியறிவு, நாளுக்கு நாள்
அதிமானாலும்
ஏமாறுவதும்
அதற்கேற்றார் போல்
ஏற்றம் கண்டுவிடுகிறது.

எதை மறந்தாலும்
ஐந்து வருடத்திற்கொரு முறை
ஏமாறுவதற்கு,,
மக்கள் மறக்காமலிருக்கும் வரை
ஆயுதங்கள் தான் ஆட்சி செய்யும்.
அராஜகங்கள் தான் சட்டமாகும்.
சொந்தங்களிடம் தான்
சொத்துக்கள் குவியும்.
சோதனை என்பது
பொதுவில் மக்களிடம் மட்டும் சேரும்

இருப்பது ஒன்று ...

ஊழல் வாதிகளை ஊதித் தள்ளப் போகிறோம் என
சந்து முனையில் சிந்து பாடும் விஜய காந்து !

இந்த பழங்கள் புளிக்குமென திராவிட திராட்சையை
வீச மாட்டார்களா - ஏங்கும் பாஜக !

வீரம் என்னும் பெயரில் சர்வாதிகாரம் செய்யும்
வரட்டு பிடிவாதம் கொண்ட அதிமுக !

இன்னொரு வாய்பு வேண்டி, வயதான காலத்தில்
சலுகை விலைபேசும் திமுக !

இவர்கள் எவருக்கு என் ஓட்டு ?
இருப்பது ஒன்று கொடுப்பது யாருக்கு ?
என எண்ணியபடி
வாக்கு சாவடிக்குச் சென்ற என்னிடம்
தேர்தல் அதிகாரி சொன்னார்,
சார்! உங்கள் ஓட்டு போட்டாகி விட்டதென !

விஜய.டி. ராஜேந்தர் - கே.பாக்யராஜ் திடீர் சந்திப்பு

சமீபத்தில் திமுகவை ஆதரித்து கள்ளக்குறிச்சி வந்த தி(க)ரைக்கதை மன்னன் கே. பாக்கியராஜும், அங்கு போட்டியிடுகின்ற விஜய.டி. ராஜேந்தர் மற்றும் அவர் மகன் சிம்பு ஆகியோர் சந்தித்து கொண்டார்கள். அவர்கள் பேச்சின் முழு விவரம் இதோ..

கே.பா : ஹலோ டி.ஆர் சௌக்கியமா. உங்களை பார்த்தும் ஒரு குட்டி கதை நினைவுக்கு வருது.. ஒரு காட்டிலே ஒரு கரடி..

டி.ஆர் : யோவ் நீ சொல்ற கதை குட்டி. அடிச்சா உடையும் உன் சோடா புட்டி.

கே.பா : சாரி என்ன தனியா நிக்கரிங்களே.. கூட்டணி தேறலையா?

டி.ஆர் : அம்மா,அய்யா ரெண்டு பேரையும் பார்த்தேன். நாற்பது தொகுதியில் எனக்கு செல்வாக்கு உண்டு. அதில் முப்பத்திஒன்பதாவது தரணும்னு சொன்னேன். தரல. இவன் சிங்கம். சிங்கிளா தான் நிப்பான்

கே.பா (மனதிற்குள்) : உனக்கு ஓட்டும் சிங்கிளா தான் விழும்.

கே.பா : ஆனா இந்த தடவ திமுகதான் ஜெய்க்கும். நாங்க கலர் டிவி தரோம். புழுத்த ச்சே பழுத்த அரிசி தரோம். இவ்ளோ எதற்கு. மதுரை பக்கம் இருக்கிற குடும்பங்களோட ஒரு மாசம் மொத்த செலவையும் நாங்க பாத்துகிறோம்.

டி.ஆர் : ஓசி தருவர் எல்லாம் வெற்றி அடையார். கள்ளக்குறிச்சியில் நான் பெரும் படை உடையார். காரணம், நான் விஜய.டி. ராஜேந்திர உடையார்.

(அப்போது சிம்பு அங்கு வந்தார்)

சிம்பு : ஹாய் டாடி. யாரு இவரு

கே.பா : ஐயோ. என்னை யாருன்னு தெரியலையா.

சிம்பு : எனக்கு அரசியலில் நாலு பேரைத்தான் தெரியும். கருணாநிதி தாத்தா. கனிமொழி ஆத்தா. சின்ன மாமா ஸ்டாலின், பெரிய மாமா அழகிரி, சின்ன அங்கிள் தயாநிதி,பெரிய அங்கிள் கலாநிதி.. தட்ஸ் ஆல்.

கே.பா : கண்ணா இப்படியெல்லாம் பேசினா திமுகவில் சீட் கிடைக்காது.

சிம்பு : ஓய நாட்?

கே.பா : உன் பெயர் சிலமபரசன்னு தமிழ்லே இருக்கு. அதை ஜெ.கே.சிம்பிஷ் ன்னு மாத்திக்கணும். இப்போ நீ நடிக்கறத விட இன்னும் கேவலமா நடிக்கணும். அதை நூறு பேர பாக்கவிட்டு, அவங்களுக்கு பிரியாணி போடணும்.

சிம்பு : சாரி அங்கிள். எனக்கு அரசியல் வேண்டம். நான் சின்ன பையன்.

கே.பா : நீ சின்ன பையனா. உன் சமாசாரம் எல்லாம் ஊரே பார்த்தாச்சு. நயந்தாரா உதட்டை எதோ சாம்பார்ல போட்ட முருங்கைக்காய் மாதிரி...

சிம்பு(கோவத்துடன்) : ஸ்டாப் இட். நானும், நயனும் எவ்ளோ புனிதமா, உன்னதமா வாழ்ந்தோம். எங்க அந்தரங்கத்தை பத்தி பேசறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. வேணும்னா நெட்ல ஸ்டில்ஸ் போட்டிருக்கேன். போய் பார்த்துகோங்க. எதோ அப்பா நல்லது செய்வாருன்னு இங்க பேசவந்தேன்,

கே.பா : இதுவரைக்கும் அப்படி என்ன நல்லது செஞ்சுஇருக்கார் உங்க அப்பா டி.ஆர்.

சிம்பு : மும்தாஜை நம்ம ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கார். இத விட பெருசா என்ன செய்யணும்.

கே.பா : நல்ல பாயிண்ட்டு. கலைஞர் எனக்கு சீட் தருவாருன்னு பார்த்தா, கடைசியிலே பேண்ட்டு போட்ட வெற்றிகொண்டான் மாதிரி ஆக்கிடாங்க. நானும் உங்க கட்சியில சேர்ந்துவிடுகிறேன்.

டி.ஆர் : மன்சூர் எனக்கு போர்வாள். நீங்க எனக்கு அருவாள்.

கே.பா : நான் ஒரு குட்டிகதை சொல்றேன். சிம்பு, அப்படி பாக்காதே. குட்டி அப்படினா பொண்ணு இல்லை. சின்ன கதைனு அர்த்தம்.ஒரு நாட்டுலே ஒரு ராஜா, அவனுக்கு ரெண்டு மகன்கள்...

சிம்பு : டாடி, இவர் அருவாள் இல்லை. அறுவை வாள். எஸ்கேப்

(அப்பாவும், மகனும் தலை தெறிக்க ஓடியவர்கள்தான், இன்னமும் தொகுதிபக்கம் திரும்பவில்லையாம், பிழைத்தனர் கள்ளக்குறிச்சி மக்கள்)

பி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி

பி.வாசு கன்னடத்தில் பொல்லாதவனை எடுக்க போகிறாராம்.

எப்படி வரும்?

1) கன்னட படங்கறதால கொஞ்சம் பட்ஜெட் பார்த்து தான் எடுப்பாரு. அதனால பல்ஸருக்கு பதிலா, பிளாட்டினா.

2) கமர்ஷியலுக்காக ஒரிஜினல்ல இருக்குற தேவையில்லாத சீனை பெரிதாக்குவார். தேவையான சீனை சுருக்கிவிடுவார். அதன்படி, இந்த படத்தில் முதல் பாதி முழுக்க ஹீரோவும், ஹீரோயினும் லவ் பண்ணுவார்கள், நண்பர்கள் காமெடி பண்ணுவார்கள். கிளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி ஹீரோ பைக்க தொலைப்பார்.

3) தொலைந்த பைக்கை ஹீரோ பெங்களூர் ஹார்பரில்(!) போயி தேடுவார்.

4) வில்லனை சுத்தி இருக்குற ரவுடிகளுக்கு வெள்ளை சட்டையும் மடிச்சு கட்டின வேட்டியும் தான் யூனிப்பார்ம்.

5) தனுஷ் அப்பா ஆஸ்பிட்டலில் இருக்கும் போது, “அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே” என்ற அப்பா செண்டிமெண்ட் பாடல் நிச்சயம்.

6) கிஷோர் இறந்தபின் அஞ்சு அழும் காட்சியை, குங்குமம், வளையல், வெள்ளை புடவை என்று இன்னும் மெருக்கேற்றுவார்.

7) பத்து வருஷம் முன்னாடி எடுத்திருந்தாங்கன்னா, செட்டு போட்டு இரண்டு பாட்டும், ஊட்டில ரெண்டு பாட்டு எடுத்திருக்கலாம். அவரோட, தற்போதைய ரேஞ்ச் படி ரெண்டு பாட்டு பாரின்ல தான்.

8) "எங்கேயும், எப்போதும்" ரீ-மிக்ஸ்க்கு பதிலாக ஒரு பழைய ராஜ்குமார் பாடலை ரீ-மிக்ஸ் பண்ணுவார்கள். படம் - வெள்ளி விழாதான். மெஜஸ்டிக் பக்கமிருக்குற ஒரு தியேட்டருல.

இந்த படம் மட்டும் கன்னடத்தில வெற்றியடைஞ்சுதுன்னா, அப்புறம் அதே டீம வச்சி அதே மாதிரி ஒரு படம் எடுப்பாரு. அப்படி இல்லாட்டி, அவர் பையனை அங்க இறக்கி விடுவாரு. அது கண்டிப்பா ஊத்திக்கும்.

இவ்ளோ சொன்னாலும், பி.வாசு படங்களில் இருந்த ஒரு நல்ல விஷயம், அவர் நகைச்சுவை நடிகர்களை பயன்படுத்திய விதம். முக்கியமாக, கவுண்டமணி. இவர் படங்களில் கவுண்டமணி, ஒரு சுதந்திர பறவை. வாசு இயக்கத்தில் கவுண்டமணி பேசிய வசனங்கள் ரொம்ப பிரபலம்.

IPLலில் மொள்ளமாரித்தனம்

நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.

எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

மொள்ளமாரித்தனங்கள்:

1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க

2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க

3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.

4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)

5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.

உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா? நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.

நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். ஸ்ரீவி வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:

புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???

2 நிமிடம் கழித்து
கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:
கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட? மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்? (சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி? லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

கும்மாளம் பொறியியல் கல்லூரி

ஆரம்பம் “கும்மாளம் பொறியியல் கல்லூரி” சிறப்பம்சங்கள்

1. மாணவர்கள் தேர்வுகளில் பிட் அடிக்க அனுமதிக்கப்படுவார்கள்

2. பிட் அடித்து / காப்பி அடித்து / அடுத்தவர் லாக் இன் ஐடியை பயன்படுத்து பிடிபடும் மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காது

3. மாணவர்களும், மாணவிகளும் கூடி கும்மாளம் அடிக்க வசதி செய்தி தரப்படும்

4. ஸ்பெஷல் க்ளாஸ் என்ற பெயரில் மாணவ மாணவியர் இரவு 11 மணிக்கு கூட ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வரலாம்

5. கல்லூரி பேரூந்தில் படியில் தொங்கிக்கொண்டு வர வேண்டும்

இப்படி ஒரு கல்லூரி இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை சேர்ப்பீர்களா அல்லது கீழே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் கல்லூரியில் சேர்ப்பீர்களா

ஒரு கல்லூரியை பற்றி கூறப்படும் “குற்றச்சாட்டுகள்”

“சார் நாங்க மாணவர்களா, கைதிகளான்னு தெரியல. அந்த அளவுக்கு எங்கள இங்க அடக்கி வைக்கிறாங்க. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இங்க பேசிக்கக்கூடாது. சும்மா ஒரு ஹலோ சொன்னா கூட பெற்றோரை உடனே வரச்சொல்லி ஒரு வாரம் அலைய விடுவாங்க. காலேஜ் பஸ்ல படியில நிக்கக்கூடாது.மீறுனா ஒரு வாரத்திற்கு அந்த ஸ்டாப்புல பஸ் நிக்காது. அடுத்த ஸ்டாப்புக்கு போயிதான் ஏறனும்

பிட் அடிக்கிறது தப்புத்தான். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அப்படி செஞ்சா, இண்டர்னல் மார்க் இருபதையும் கட் பண்ணிடுவாங்க. அப்புற்ம் இங்க மாடல் எக்சாம் எழுத முடியாது. நேரடியாக யுனிவர்சிடி எக்சாமைத்தான் எழுதனும். தினம் தினம் செத்து பிழைக்கிறோம் சார்”

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”
“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”
“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”
“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு
வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”
“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”
“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."

கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன


வருகிற ஆகஸ்ட் வந்தால் கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆம்... பல ஏற்ற இறங்கங்களைக் கண்ட தனது நடிப்பு வாழ்க்கையின் பொன்விழா ஆண்டில் இருக்கிறார் கமல் இப்போது.

5 வயது சிறுவனாக "களத்தூர் கண்ணம்மா” மூலம் தமிழில் அறிமுகமானவர் கமல். அதன் பிறகு சிறுவனாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைய, உதவி இயக்குநர், நடன உதவியாளர், ஸ்டன்ட் உதவியாளர் என பல வேலைகளை தனது 20 வயதுக்குள் பார்த்துவிட்டார் கமல். நிறைய நிறைய கற்றுக் கொண்டார்.

அதன் பிறகுதான் பாலச்சந்தரின் பொறுப்பில் வந்தார். துக்கடா வேடங்கள், வில்லன், எதிர்மறை நாயகன் என பல வேடங்கள் போட்டவர், அபூர்வ ராகங்களில் கதையின் நாயகனாக நடித்தார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் திரையுலக வரலாற்றுப் பக்கங்களில் நிச்சயம் மறைக்க முடியாத சாதனைகள்தான்.

இப்போது திரையுலகில் 50வது ஆண்டை நிறைவு செய்யப் போகிறார் கமல்.

இந்த பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்புத் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருப்பதுதான் அவரது 'உன்னைப்போல் ஒருவன்'.

கலங்காதே காதலனே

அன்பின் அர்த்தம் சொன்னாய்
ஆயுதம் இன்றி எனை வென்றாய்
தீராத காதல் சொன்னாய்
தினமும் தித்திக்க செய்தாய்

இதயத்தை இடம் மாற்றினாய்
இரவுகளை இனிதாக்கினாய்
உறங்கும் எனை எழுப்பினாய்
உள்ளத்தின் உணர்வை உளறினாய்

செல்லமாய் செல்லம் என்றாய்
சென்று வருவேன் காத்திரு என்றாய்
பிரிவின் துயரை புரியவைத்தாய்
பிரிந்தே சேர்வோம் என்றாய்

கண்ணீரே வேண்டாம்
கலங்காதே என்றாய்
கண்ணீரை நீ சுமந்து
கண்களால் விடை பெற்றாய்

தொலைவில் இருந்தும்
தொலைபேசியில் அழைக்கிறாய்
தொலைந்த இதயத்தை
தொட்டுச் செல்கிறாய்

தொடர்கிறது நம் காதல்
காலங்கள் சென்றாலும்
காத்திருப்பேன் காதலனே
கலங்காதே…………….!

எல்லாமே நீதான்...

எந்தன் வாழ்வின் இன்பங்கள் நீயே
எந்தன் வாழ்வின் துன்பங்கள் நீயே
இரண்டையும் எனக்கு தந்தவள் நீயே
உன்னோடு நானும் வாழ்கையில் தானே
எந்தன் வாழ்வின் இன்பத்தை கண்டேன்
நீ என்னை பிரிந்ததன் பின்னே
எந்தன் வாழ்வில் துன்பத்தை உணர்ந்தேன்

எந்தன் வாழ்வின் இன்பங்களெல்லாம்
எனக்கு சொல்லி தந்தவள் நீயே
எந்தன் வாழ்வின் துன்பங்களெல்லாம்
எனக்கு உணர்த்தி சென்றதும் நீயே

பட்டாம் பூச்சி இறக்கையில் என்னை
வானில் பறக்க செய்தவள் நீயே
எந்தன் இறக்கையை பறித்துக்கொண்டு
வானில் பறக்க சொன்னதும் நீயே

உந்தன் செல்ல பேச்சை கேட்க
மணிக்கொருமுறை போண் எடுத்ததும் நானே
உந்தன் குரலே வேண்டாம் என்று எந்தன் போணை
உடைத்தவனும் நானே.....

உன்னை பார்த்த எந்தன் உணர்வை
கம்பன் கூட எழுத மாட்டான்
உன்னை பிரிந்த எந்தன் இதயத்தை படிக்க இங்கு
கவிஞன் எவனும் பிறக்கவும் இல்லை.

காத்திருக்கிறேன்

வாழ்வின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
என்னை நீதான்
அடையாளப்படுத்தினாய்

உன் மௌனத்தின்
வேர்களில் பூத்திருக்கிறது
என் காதல் பூ

பனித்துளியை பேட்டி
காணும் மேகங்கள்
விண்மீனைப் பிடிக்கும்
மூங்கில்களில் அவசரம்..

இப்படியான என்
கனவுகளின் தொடர்ச்சியில்
அலைகள் மறந்த
கடலுக்குள் நாம்...
என நீட்சித்தது

என்னைத் தோற்கடிப்பதாய்
உனக்குள்ளே சந்தோஷப்படும்
தருணங்களில் தானடி
நினைக்கிறேன் தோற்காத
நம்முடைய காதலை...........!

மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..

அன்றைய மழை
இன்றுவரை விடாமல்........
காத்திருக்கிறேன்
குடை தருவாயென!

வங்கியில் கொள்ளையன்- நகைச்சுவை

ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.

உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.

பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.

தம்பதிகளின் விருப்பம்-நகைச்சுவை

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்

காதல் எ‌ன்பது... ச‌ை‌ச்‌சி‌ள் போ‌ன்றது!

காதல் எ‌ன்பது... ச‌ை‌ச்‌சி‌ள் போ‌ன்றது!

காதல்ங்கறது சைக்கிள் மாதிரி கல்யாணங்கறது கப்பல் மாதிரி!

அது எ‌ப்படிடா ம‌ச்சா‌‌ன்?

நமக்கு சைக்கிள் பிடிக்கல்லேன்னா இறங்கிடலாம், நடுக்கடலுக்கு போன பிறகு கப்பல் பிடிக்கலன்னு இறங்க முடியாது பாரு!

எனக்கு கப்பல் வேண்டாம் சைக்கிள் போதும்.

இருத்தல்

பத்திரமாய் படிந்திருக்கிறது
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள்
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில்

இதுவே போதுமானது
உயிரைப்பிழியும் என் தனிமையை
வரைதலில் எடுத்துரைக்க

ஜன்னல் கண்ணாடியில்
மங்கிய வெளிச்சத்தில்
எனதென ஊகிக்ககூடியதாய்
ஒரு பிம்பம்
அனுமதிப்பதில்லை
தனிமைக்கான என் சித்திரத்தை

தனிமையிலேனும்
உண்டாகிறது
எனக்கான என் இருத்தல்

காதல் இனிமை


நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!

தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?

காதல் நோய் தொற்றிக் கொண்டதா?


இது காதல்தானா? நாம் காதல் வயப்பட்டுள்ளோமா? காதலுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

எப்படியும் நம் காதல் உணர்வை முதலில் நண்பர்களிடம் கூறியிருப்போம். ஆனால் ஒரு சில நண்பர்கள் நம்மைக் குழப்பி குட்டையில் தள்ளியிருப்பார்கள். ஏன் என்று கெட்டால் குட்டையைக் குழம்பினால்தான் மீன் பிடிக்க முடியும் என்று காரணம் வேறு கூறுவார்கள்.

இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று நினைப்பவரா நீங்கள்?

முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை எப்படி உறுதி செய்வது என்பது உங்களது கேள்வி?

ஒருவரைப் பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அவரது பேச்சும், பழக்கமும் சந்தோஷம் தருகின்றன என்றாலும் இப்போதே இதனை காதல் என்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களா?

உங்களுக்கு ஒரு அறிகுறிகள் இருக்கும். அவற்றை இங்கே பரிசோதித்துக் கொள்ளுங்கள்

சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டுதல்

படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பது

நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் குறைவது

கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவழிப்பது

சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டாமை

விரும்புபவரை பார்க்க நேர்ந்தல் இதயம் அதிகப்படியாக துடிப்பது

உடை உடுத்துவதில் அதிக அக்கறை எடுப்பது

தனிமையை அதிகம் விரும்புவது

யாராவது காதலித்தால், அவர்களைப் பற்றியும், அவர்கள் காதலை சொன்ன விதத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது

இசையை மிகவும் ரசிப்பது, நள்ளிரவில் தூக்கத்தை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது

நகம் கடிப்பது போன்ற புதிய பழக்க வழக்கங்கள் வருவது

நாம் விரும்புபவரின் நட்பு வட்டாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பது

காதல் திரைப்படங்கள் மற்றும் காதல் இசைப் பாடல்களை மீது அதிக விருப்பம்

எதையும் ரசிக்கும் தன்மை அதிகரிக்கும்.

நீங்கள் விரும்பி வாங்கிய புத்தகத்தைக் கூட படிக்க முடியாமல் ஒரு திணறல் ஏற்படுவது

பொது விழாவில் கலந்து கொள்வது, அதிகமாக வெளியே செல்ல விரும்புவது

இந்த அறிகுறிகளில் பாதியாவது தற்போதுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அது காதல்தான்.

காதல் மனதுக்குள் பூத்துவிட்டால் ஏதோவொரு சந்தோஷம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்.

ஆனால் காதலைப் பற்றிய ஒரு பழமொழியை இங்கே நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.

காதல் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷமாக இருக்க விடாது.

சரி அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம்.

பாரிய 478 காரட் வைரம் கண்டுபிடிப்பு


ஆபிரிக்க நாடான லெஸோதாவில் பாரிய புதிய ரக வைரக்கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டை தீட்டப்படும் பட்சத்தில் மிகப் பெரிய பட்டை தீட்டப்பட்ட வைரமாக இது விளங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த 478 காரட் வைரமானது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அடர்த்தியான வைரங்களின் வரிசையில் 20ஆவது மிகப்பெரிய வைரமாக இது விளங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

லெட்ஸெங் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரத்தை பல மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்ய முடியும் என கூறப்படுகிறது. பிரித்தானிய அரச ஆபரணங்களில் அங்கம் வகிக்கும் வட்ட வடிவமான 105 காரட் வைரத்தை விட இந்த வைரம் பெரியதாகும்.

இதுவரை இந்த வைரத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.

4500 அடி உயரத்திலிருந்து மயங்கிய நிலையில் விழுந்து உயிர் பிழைத்த நபர்


தரையிலிருந்து 4500 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்த வேளை அவ்விமானத்தின் வால் பகுதியில் அடிபட்டு சுயநினைவிழந்த வான் சாகச நிபுணர் ஒருவர், இலேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பிய அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஜமி ரொபேர்ட்ஸன் என்ற இந்த 57 வயது வான சாகச நிபுணர் மயங்கிய நிலையில் நிலத்தை அண்மித்த வேளை, அவரது பாரசூட் அபூர்வமான முறையில் தானாகவே விரிந்தமை காரணமாகவே அவர் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சுய நினைவுக்கு திரும்பிய ஜமி ரொபேர்ட்ஸனுக்கு, தான் உயிருடன் இருப்பøதப் பார்த்து பெரும் வியப்பு. விமானத்தின் வால் பகுதியில் அடிபட்டு வீசப்பட்ட சமயம் தன்னுடைய கதை அத்துடன் முடிந்தது என்ற உணர்வே தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

சர்க்கரை மூலம் காரையும் இயக்கலாம்

காபியில் போடும் சர்க்கரை மூலம் காரை ஓட்டலாம்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். காரை இயக்க தேவைப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை, சர்க்கரையில் இருந்து உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். அமெரிக்காவில், வெர்ஜினியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பெர்சிவால் ஜாங் தலைமையிலான குழுவினர், இந்த ஆய்வில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இது குறித்து ஜாங் கூறியதாவது: ஆய்வு கூடத்தில், 13 வகையான என்சைம்கள் (புளிக்க செய்யும் பொருள்), தண்ணீர் மற்றும் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை ஆகியவற்றை ஒன்று சேர்த்து, 86 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் சூடேற்றிய போது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடிந்தது.

ஹைட்ரஜனை கொண்டு கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்க முடியும். ஆனால், குறைந்த செலவில், ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது எப்படி?, சேமித்து வைப்பது எப்படி?, வினியோகம் செய்வது எப்படி போன்ற கேள்விகளுக்கு தான் இதுநாள் வரை பதில் கிடைக்கவில்லை. தற்போது குறைந்த செலவில், சர்க்கரையை கொண்டு, ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புரட்சிகரமான கண்டுபிடிப்பு.

ஆனால், ஆய்வு கூடத்தில், குறைந்த அளவு ஹைட்ரஜனை தான் உற்பத்தி செய்ய முடிந்தது. வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் வகையில், அதிக அளவில் உற்பத்தி செய்யும் வழிவகை இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. அதே போல, ஹைட்ரஜனை கொண்டு இயக்கப்படும் வாகனம் எந்த அளவுக்கு வேகத்தில் செல்லும் என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், சர்க்கரையால் உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருளை கொண்டு, காரை இயக்குவது பாதுகாப்பானது; சுற்று சூழலுக்கு அதிக கேடும் ஏற்படுத்தாது . பெட்ரோல் மற்றும் டீசலை விட, ஹைட்ரஜன் விலை குறைவாகவே இருக்கும். இவ்வாறு விஞ்ஞானி ஜாங் கூறினார்.

நட்பு மொழிகள்

ந‌ட்‌பி‌ல் இரு‌ந்துதா‌ன் காத‌ல் ‌பிற‌க்‌கிறது. ‌சில காத‌ல்களை‌த் த‌விர.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை ‌விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க் கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

ந‌‌ண்பனு‌க்காக உ‌யிரை‌க் கொடு‌ப்பதை ‌விட, உ‌யிரை‌க் கொடு‌க்கு‌ம் அள‌வி‌ற்கு ந‌ண்ப‌ன் ‌கிடை‌ப்பதுதா‌ன் அ‌ரிது.

நா‌ன் உ‌ன் மு‌ன்னா‌ல் நட‌‌‌ந்து வ‌ழிகா‌ட்டியாக இரு‌க்க மா‌ட்டே‌ன், உ‌ன் ‌பி‌ன்னா‌ல் வ‌ந்து உ‌ன்னை‌க் க‌ண்கா‌ணி‌க்க மா‌ட்டே‌ன். உ‌ன் ப‌க்க‌த்‌தி‌ல் நட‌க்‌கிறே‌ன் ந‌ண்பா உ‌ன் துணையாக.

ந‌ண்ப‌ர்க‌ள் காதல‌ர்களாகலா‌ம். ஆனா‌ல் காதல‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்களாக‌க் கூடாது.

உ‌ன் ந‌ண்ப‌ர்களை அ‌றிமுக‌ப்படு‌த்‌தி வை. ‌உ‌‌ங்க‌ள் ந‌ட்பு ஒரு வளைய‌ம் ஆகு‌ம்.

பூமிக்கு ஆபத்தா? வானத்தில் தோன்றிய 40 அதிசய ஒளி


வானில் அவ்வப்போது இயற்கைக்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 11 நாட்களுக்கு முன்பு வானில் 40 வகையான புதிய வெளிச்சம் தோன்றியுள்ளது. இதை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.

இந்த வெளிச்சம் (ஒளி) மிகப்பெரிய சக்தி உடையதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இத்தகைய ஒளி தோன்றியிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஜெர்மனி முனிஞ்ச்-ல் உள்ள இ.எஸ்.ஓ. என்ற வான ஆராய்ச்சி அமைப்பு இதுபற்றி ஆய்வு செய்து வருகிறது.

இந்த 40 வகையான ஒளியும் பூமியில் விழுந்தால் ஒரே நாளில் ஒட்டு மொத்த உலகமும் அழிய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்.

11 நாட்களாக இந்த ஒளி அவ்வப்போது தோன்றி மறைகிறதாம். இதன்மூலம் பூமியில் பெரிய விளைவுகள் ஏற்படுமோ என்ற புதிய அச்சம் உருவாகி உள்ளது.

செல்போனில் நடந்த நூதன திருமணம்

நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப திருமணங்கள் பல் வேறு விதமாக நடக்கிறது. ஒருவரையொருவர் பார்க்காமலேயே இன்டர்நெட் முலம் திருமணம் செய்தல் உள்பட பல வழிகளில் திருமணம் நடந்ததை கேள்விப் பட்டிருக்கலாம்.

தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:

அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருமணநாளில் அதற்கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்த தால் அவரால் செல்ல முடியவில்லை. இதனால் திருமணத்தை வேறு தேதியில் நடத்தலாமா என்று மணமகளின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதர் சோம்நாத் ஐடியா ஒன்றை கொடுத்தார். செல்போன் மூலம் திருமணம் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.

இதை தொடர்ந்து 3 செல்போன்கள் மூலம் இந்த திருமணம் நடந்தது. ஒரு செல்போனில் புரோகிதர் மந்திரம் சொல்ல இன்னொரு செல்போனில் மணமகளும் அசாமில் இருக்கும் மணமகன் மற்றொரு செல்போனில் திருப்பிச் சொல்ல திருமணம் நடந்தது.

40 நிமிடங்கள் புரோகிதர் முன்னிலையில் இந்த செல்போன் நூதன திருமணம் நடந்து முடிந்தது. மறுநாளே மணமகள் தேவஸ்ரீí அசாம் புறப்பட்டு சென்றார்.

அந்தோனி – யார்?

அன்னம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் சி.விஜயகுமார் தயா‌ரித்திருக்கும் படம் அந்தோனி - யார்? இயற்கை படத்துக்குப் பிறகு ஷாம் நடித்திருக்கும் கடல் சார்ந்த கதைக்களம் இந்தப் படம்.

மீனவ இளைஞனாக நடித்திருக்கிறார் ஷாம். அவரது காதலியாக மல்லிகா கபூர். இவர்களுடன் காமெடிக்கென்று சேர்க்கப்பட்டிருப்பவர் விவேக்.

படத்தின் ஆ‌க்சன் காட்சிகளை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சி அமைத்திருப்பவர் தளபதி தினேஷ். ஷாம் டூப் போடாமல் ஆ‌க்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

ஒரு காட்சியில் குவியலாக மீன்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து மீன்களை வாங்கி காட்சி முடிந்ததும் அப்பகுதியில் மக்களுக்கு இலவசமாக மீனை கொடுத்திருக்கிறார்கள்.

ஒருமுறை கடலில் படப்பிடிப்பு நடந்தபோது கட்டுமரத்திலிருந்து தவறி மல்லிகா கபூர் கடலில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக உடனே காப்பாற்றியதால் ஆபத்தில்லாமல் தப்பித்தார்.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். தினா இசையமைத்துள்ளார். பழனிபாரதி, சினேகன், கிருதயா தலா ஒரு பாடல்கள் எழுதியுள்ளனர். யுகபாரதி மூன்று பாடல்கள் எழுதியுள்ளார்.

சி.டி.பாண்டி படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு சான்டோனியோ, எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

மலையன்

இனிப்பும் நெருப்பும் கலந்த கதை. கந்தக பூமியான சிவகாசியை களமாக்கியிருப்பது இன்னும் பொருத்தம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிற பொட்டல் வெளியில், பூ பூத்த மாதிரி விரிந்து கிடக்கிற கரண்-ஷம்மு காதல் இனிப்பு என்றால், வில்லன், வெடிகுண்டு, விரக்தி கூச்சல் என்று அங்கங்கே அடிக்கிறது அக்னி மழை!

பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும் கரணுக்கும், பக்கத்து ஊர் ஷம்முவுக்கும் காதல். ஜெயிப்பார் என்று நம்பி கரண் மேல் பெட் கட்டும் ஷம்மு ஏமாந்து போக, வழிப்பறி கொள்ளைக்காரியாக ஒவ்வொன்றாக லவட்டுகிறார் கரணிடமிருந்து. ஏய்ய்ய்ய்... என்ற ஷம்முவின் ஒரே அதட்டலுக்கு, கப்சிப் ஆகிற கரண் ஒரு சந்தர்ப்பத்தில் காதலாகி கசிய... ஷம்முவின் மனசிலும் மத்தாப்பூ! கல்யாணத்து நாள் குறிக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே ஷம்மு காலி. அதுவும் கரணின் பட்டாசு ஆலை விபத்தில்! இது விபத்தல்ல. சதி என்பது தெரியவர, கரண் என்கிற எமன் எடுக்கிற பாசக்கயிறு, எவனை பதம் பார்க்கிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் கூட, அதிலும் ஒரு நடிப்புக் கல்லு£ரிக்கே தீனி போடுகிற அளவுக்கு சிலபஸ்சை கக்கும் கரண், இந்த படத்திலும் தனது வேலையை செவ்வனே செய்திருக்கிறார். ஷம்முவிடம் தனது சைக்கிளையும் பறிகொடுத்துவிட்டு கேட் ஏறி குதித்து ரகளை அடிக்கிற இடம் கலகலப்பு என்றால், அதே ஷம்முவின் பிணத்தை பார்த்து கதறுகிற காட்சியில் நொறுங்கிப் போக வைக்கிறார் ரசிகர்களின் மனசை. இவருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகளில் முதன்முறையாக பொருட்செலவும் பிரமாண்டமும் வெளிப்பட்டிருக்கிறது. அடுத்த ஸ்டெப்பை தைரியமா எடுத்து வைங்க பாஸ§!

ஆம்பளை பசங்க மாதிரி ஷம்மு அடிக்கிற லு£ட்டி என்ன? அப்பன் மேலேயே இடித்துக் கொண்டு போகும் அசால்ட் என்ன? அழகை து£க்கி அந்த பக்கம் போடுங்க. தமிழ்சினிமாவில் நடிக்க தெரிந்த இன்னொரு நடிகை வந்தாச்சு. ருசியை விடுங்கள், ஊறுகாயின் நெடி கூட அடிக்கவில்லை உதயதாராவிடம். மொத்தத்தில் ஜூ.ஆ அவ்வளவு நல்லவராக வரும்போதே தெரிகிறது. இவர்தான் வில்லனாக இருப்பார் என்று. சரத்பாபுவின் வில்லத்தனத்தில் செயற்கையே அதிகம். கஞ்சா கருப்பு, மயில்சாமி என்று கலகலப்புக்கும் கியாரண்டி இருக்கிறது.

பட்டாசு கம்பெனி வாரிசாக நடித்திருக்கும் சக்தி குமார், விரும்பினால் வெற்றிப்பட வில்லனாக ஒரு சுற்று வரலாம்.

தினாவின் இசையில் தெரிஞ்சா சொல்லுங்க அசத்தல். பொட்டல் பட்டி, உன்னைப்போல இரண்டும் மனசை அள்ளிக் கொண்டு போகிற ட்யூன்கள். பின்னணி இசைதான் வழக்கம் போல தப்பட்டை!

அனல் அரசுவின் சண்டைகள் ஒவ்வொன்றும் சிவகாசி சரவெடி.

மலைக்க வைத்திருக்கிறான் மலையன்

வேலு பிரபாகரனின் "காதல் கதை "


சொத சொதன்னு கதை சொல்றவங்களுக்கு மத்தியிலே, வேலு பிரபாகரன் சொல்ற இந்த காதல் கதை இருக்கே, \'கண் கொள்ளா(?)\' மிரட்சி.

குளோஸ் அப்பில் வந்து அவுத்து போடுவதை பற்றி லெக்சர் அடிக்கும் வேலு பிரபாகரன், \"ஆம்பளைங்க இதையெல்லாம் பார்த்துதான் காமுர்றான்...\" என்று கவலைப்படும்போது க்ளுக்கென்று சிரிப்பு வருகிறது. படத்தில் வரும் மூன்று பெண்களும், ஐயனாருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆடு மாதிரியே அசைவ விருந்துக்கு தயாராகியிருக்கிறார்கள். அதிலும் இவர்கள் காட்டும் சதை புரட்சி, \'போன்லெஸ்\' கொண்டாட்டம்.

ஷெர்லிதாஸ், சரத் செந்தில் இருவரின் காதலையும் மையப்படுத்திதான் கதையை எடுத்திருப்பார் போலிருக்கிறது. பின்பு இடைச்செருகலாக வேலு பிரபாகரனும் நடித்திருக்கணும். தாமரை இல்லை தண்ணீர் போல தனித்தனியாக ஒட்டாமல் இருக்கிறது இவ்விரு கதைகளும். அதெல்லாமா முக்கியம்? வாங்குன காசுக்கு மேலே காட்றாங்கப்பா... என்ற காமெண்ட்தானே!

ஷெர்லிதாசின் மற்றவைகளை விட அந்த கண்கள் மிரட்டல். துணியை பற்றி கவலைப்படாத துணிச்சல்காரியாக இருக்கிறார். தமிழ்சினிமா வரலாற்றிலேயே... என்று எவராவது எழுத முன் வந்தால், அதில் கட்டாயம் ஷெர்லி இருப்பார். இவர் முன்னாள் எம்எல்ஏ பையனை காதலித்துவிட்டு அநியாயமாக செத்துப் போவது பரிதாபம். இன்னொரு விருந்து, வாத்தியார் -வேலைக்காரி இடையேயான காதல். ஒரு வாத்தியார் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார் இவர். வேலைக்காரியை மடக்க இவர் போடும் தேள் கடி திட்டம், தேக்கடிக்கு விசிட் அடித்த மாதிரி அத்தனை கூல்!

கோவாவில் நின்று கொண்டு, \"அங்க பாருங்க. அந்த பெண்கள் எல்லாம் திறந்து போட்டுட்டு நிக்கிறாங்க. பக்கத்திலே இருக்கிற ஆண்கள் எதைப் பற்றியாவது கவலைப்படுறாங்களா? அவங்க பாட்டுக்கு விளையாடிட்டு இருக்காங்க பாருங்க\" என்று வேலு பிரபாகரன் வசனம் பேசுகிற புண்ணியத்தில் வெள்ளைக்காரிங்க மேலேயும் கேமிரா மேய்ந்திருக்கிறது.

ஆண்களை போலவே பெண்களும் அரை நிர்வாண கோலத்தில் அலையணும் என்கிற வேலுபிரபாகரனின் கொள்கை திகைக்க வைக்கிறது. சே, இப்படியா ஆபாசமா திரியுறது? என்று சில போட்டோக்களை போட்டு அவற்றை கண்டிப்பது போல வியாபாரம் செய்யும் சஞ்சிகை தந்திரங்களில் ஒன்றுதான் இதுவும்.

நாலே நாலு கேள்வி கேட்பதற்குள் வேலுபிரபாகரன் மேல் காதல் வயப்படும் அந்த நிருபியும், அவருக்கான பிரபாகரனின் பதிலும் தியேட்டரில் பெருஞ்சிரிப்பை வரவழைக்கிறது.

வேதா செல்வத்தின் ஒளிப்பதிவில் நிரம்ப \'ஏ\'க்கம். அக்கம் பக்கம் பார்க்காமல் இளையராஜா அவரது வேலையை அசத்தலாக செய்து முடித்திருக்கிறார்.

வேலுபிரபாகரனின் காதல் \'சதை!\'

குப்பையை அள்ளுவது நீயா, நானா போட்டியில்

குப்பை அள்ளுவது நீயா? நானா? போட்டியில் தீர்வு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அள்ள பொறியியல் பிரிவுக்கு சில வார்டுகள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன.
சென்னையில் மாநகராட்சி குப்பைகளை அகற்ற பொறியியல் பிரிவில் தனி பிரிவு (திடக்கழிவு மேலாண்மை) உள்ளது. இதை வைத்து குப்பைகளை பொறியியல் பிரிவு அள்ள வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. நடைமுறையில் இது மற்ற மாநகராட்சிகளில் அமல்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் குப்பைகளை அள்ளுவது நீயா? நானா? என சென்ற மாதம் மதுரை மாநகராட்சியில் சர்ச்சை ஏற்பட்டது. ""குப்பைகளை பொறியியல் பிரிவு தான் அள்ள வேண்டும். இனிமேல் நாங்கள் அள்ள மாட்டோம்"" என சுகாதார ஆய்வாளர்கள் அறிவித்தனர்.
""எங்களுக்கு ஏற்கனவே வேலைப்பளு அதிகம். குப்பையை எப்படி அள்ளுவது?'" என பொறியியல் பிரிவினர் பதில் கேள்வி எழுப்பினர். ""எப்போதோ வெளிவந்த அரசாணையை வைத்துக் கொண்டு பேசக் கூடாது. குப்பைகளை சுகாதார பிரிவினர் தான் அள்ள வேண்டும்'" என கமிஷனர் செபாஸ்டின் அறிவித்தார்.
இதுவரை ஒரு சுகாதார ஆய்வாளர் மூன்று அல்லது நான்கு வார்டுகளை கவனித்து வந்தார். வேலைப்பளு அதிகம் இருந்தது. இந்த சர்ச்சைக்கு முடிவு காணும் விதத்தில் சில வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சில வார்டுகளில் குப்பைகளை அள்ளும் பொறுப்பு பொறியியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள்:

வடக்கு மண்டலம்:
சுகாதார ஆய்வாளர் வார்டு எண்
1.ஜேம்ஸ்ஜான் பெர்க்மான்ஸ்  - 1, 21
2.ரெகுநாதன்  - 18, 20
3.சண்முகநாதன்  - 15, 14, 17
4.சிவசுப்பிரமணியன்  - 11, 12, 13
5.முத்துராயர்  - 3, 5
6.சரவணன்  - 6, 7, 8, 16
7.சேதுராம்  - 9,10, ஜி.எச்.,
8.இளங்கோ  - 2, 19
9.சுரேந்திரன்  -4,  பிறப்பு/இறப்பு பதிவு
தெற்கு மண்டலம்:
10.ஜெகதீசன்  - 32, 33, 34
11.அர்ச்சுணன்  - 38, 39, 43
12.ராஜா  - 35, 36, 37
13.ராஜ்கண்ணன்  - 60, 61
14.கோபால்  - 41, 63, 64, 65
15.மனோகரன்  - 42, 62
16.ராமலிங்கம்  - 31, 40
கிழக்கு மண்டலம்:
17.முத்துச்சாமி  - 44, 45
18.ரத்தினகுமார்  - 48
19.சந்திரன்  - 46, 56, 57
20.தாமஸ் பாஸ்கர லீலன்  - 47, 49
21.வெங்கடசாமி  - 50, 51, 54
22.முரளிதரன்  - 52, 53, 55
23.ஆறுமுகம்  - 58, 59
மேற்கு மண்டலம்:
24.தங்கப்பாண்டியன்  - 22, 23
25.விஜயகுமார்  - 24, 26, 27
26.முருகன்  - 29, 30
27.சந்திரமோகன்  - 28
28.வீரன்  - 66, 67, 68
29.ராமகிருஷ்ணன்  - 69, 70
30.ரமேஷ்  - 71, 71
31. அப்பாஸ் அலி  - 25
32.நாகராஜன்  -தலைமையிட பிறப்பு/இறப்பு பதிவாளர்
இளநிலை பொறியாளர்/வார்டுகள்
33.பாலையா  - 15
34.தியாகராஜன்  - 13
35.சந்தானம்  - 8
36.சோனை  - 10
37.ஆறுமுகம்  - 24
38.துர்காதேவி  - 34
39.சுரேஷ்குமார்  - 43
40.ஆர்.முருகன்  - 36
41.அருள் சகாய சேவியர்  - 41
42.மயிலேறிநாதன்  - 65
43.பி.மணி  - 50
44.மல்லிகா  - 52
45.முனீர் அகமது  - 56
46.பாபு  - 68
""தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்களும், மற்ற வார்டுகளில் பொறியியல் பிரிவினரும் திடக்கழிவு மேலாண்மையை கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது'" என மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை அள்ளப்படவில்லை என்றால் பொதுமக்கள் இவர்களை அணுகலாம்.

அரசியலில் கலக்க நடிகர் விஜய் ஆசை



நடிகர் விஜய் பேச்சு: சமூக சிந்தனை, அக்கறைகளை வளர்ப்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. எனக்கும் அரசியலில் கலக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான அஸ்திவாரம் தான், "மக்கள் இயக்கம்!'

பள்ளிக்கு வந்தால் தினம் ஒரு ரூபாய் 'பாக்கெட் மணி!

பள்ளிக்கு வந்தால் தினமும் ஒரு ரூபாய் "பாக்கெட் மணி' கிடைக்கும். ஆம், தலித் குழந்தைகளை படிக்க வைக்க பீகாரில் உள்ள நிதிஷ்குமார் அரசு இப்படி ஒரு நூதன திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை எட்டு கோடியே 30 லட்சம்; இதில், 15 சதவீதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏழைக்குழந்தைகள் 25 லட்சம் பேர், பள்ளி பக்கமே தலைவைத்துக்கூட படுக்காமல் இருந்தனர். அவர்களுக்கு இலவச கல்வி தான் என்றாலும், படிக்க வைக்க தேவையான மற்ற செலவுகளை ஈடுகட்ட ஏழை பெற்றோர்களிடம் பணம் இல்லை. கூலி வேலைக்கு அனுப்பவே விரும்பினர். மூன்றாண்டுக்கு முன், பீகார் ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த முதல்வர் நிதிஷ்குமார், ஏழை குழந்தைகள் படிக்க திட்டம் வகுத்தார். கிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலையை போக்கினார். அதையடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகளை ஊக்குவிக்க ஏற்பாடு செய்தார்.



இப்படி 15 லட்சம் ஏழைக் குழந்தைகளை பள்ளிப்படிப்பில் ஈடுபடுத்தியதாக பீகார் அரசு சொல்கிறது. இப்போது 10 லட்சம் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றரை லட்சம் குழந்தைகளை படிக்க வைக்க புதுமையான சலுகை திட்டத்தை தீட்டினார். அது தான், ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் "பாக்கெட் மணி' அளிக்கும் திட்டம். விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும்."ஒரு ரூபாய் என்பது, ஒரு சிறிய தொகை தான், இதில் ஒன்று அல்லது இரண்டு மிட்டாய்கள் தான் வாங்க முடியும், எனினும் குழந்தைகளை இத்திட்டம் பள்ளிகளுக்கு கண்டிப்பாக ஈர்க்கும்' என்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜித்தன் ராம் மான்ஜி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் தலித் மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடும்ப செலவை சமாளிக்க குழந்தைகளை கூலிவேலைக்கு அனுப்புகின்றனர். எலித்தொல்லையை ஒடுக்க சலுகை திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், எலி பிடிக்கவும் குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். நிறைய தலித் குடும்பங்கள் தங்கள் பசியை எலியின் மூலமே போக்குகின்றனர். "எலி பிடித்த தலித் குழந்தைகளை, எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்து, "மவுஸ்'பிடிக்க வைப்போம்' என்று அமைச்சர் மான்ஜி சிரித்தபடியே கூறினார்.

இனி எஸ்.எம்.எஸ்., மூலம் ஆரோக்கிய குறிப்புகள்

"வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், மொபைல் போன் உபயோகிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யுனிவர்செல், "மெடி அலர்ட்' எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது' என, யுனிவர் செல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரமேஷ் பரத் கூறினார். மொபைல் போன் மூலம் ஆரோக்கிய குறிப்புகளை அனுப்பும் சேவையான, "மெடி அலர்ட்' சேவை துவக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

ரமேஷ் பரத் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், மொபைல் போன் உபயோகிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், "மெடி அலர்ட்' எனும் புதிய சேவையை யுனிவர் செல் தொடங்கி உள்ளது. இதன் மூலம் மருத்துவ பரிசோதனை, உடற்பயிற்சி, நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் போன்றவை எஸ்.எம்.எஸ்., மூலம் அவ்வப்போது நினைவுபடுத்தப்படும். வயதான பெற்றோர் மற்றும் சிறு குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். ஒரு நாளுக்கு 55 காசு வீதம் ஆறு மாதத்திற்கு 99 ரூபாய் கட்டணமாக பெறப்படும்.

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் இவை மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள் ளிட்ட தென் மாநிலங்களில் யுனிவர்செல் தனி முத்திரை பதித்துள்ளது. அதே போல் விரைவில் இந்தியா முழுவதும் தனது சேவையை விரிவாக்கும். தற்போது, மாதத்திற்கு ஒரு லட்சம் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த புதிய சேவையின் மூலம் விற்பனை மேலும் உயரும். இவ்வாறு ரமேஷ் பரத் கூறினார். இந்நிகழ்ச்சியில் பர்பிள்டீல் தலைமை அதிகாரி நாராயண ராம், யுனிவர்செல் நிறுவனத்தின் முதன்மை தலைமை அலுவலர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல்,பழநி வனப்பகுதியில் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிவீடுகள்


கொடைக்கானல்,பழநி வனப்பகுதியில் ஆக்கிரமிப்பாக உள்ள தனி வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் நக்சலைட்களை தேடும் வேட்டையில் டி.ஐ.ஜி.,சந்தீப் மித்தல் தலைமையிலான போலீசார், வனத்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள பீதியை தவிர்க்கவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுகிறது.இது தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
சோதனை நடத்தும் பகுதியில் ஆக்கிரமிப்பாக ஆங்காங்கே குடிசைகள் உள்ளது. ஆடு மேய்ப்பவர்கள் தங்குவதற்காகவும், பல கி.மீ., நடந்து செல்லும் போது ஓய்வெடுக்கவும் இத்தகைய குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருந்தபோதும் அடையாளம் தெரியாத நபர்கள் இங்கு தங்கி வேட்டையாடுவது தெரிய வந்துள்ளது. இதற்கு உதாரணம் தான் பொருந்தலாறு அருகே உள்ள தனிக்குடிசை பகுதியில் நடந்த துப்பாக்கி வெடிவிபத்து.

ஆள் நடமாட்டம் இல்லாத வனத்துறைபகுதி துவங்கும் இடத்தில் பல ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த போஸ் குடிசை அமைத்துள்ளார். மின்வசதி, குடிநீர் வசதியில்லாமல் இங்கு தங்கியிருந்தவர் வனத்துறை, போலீசார் கண்களில் படாதது ஆச்சரியமே. கள்ளத்துப்பாக்கியை சர்வ சாதாரணமாக பயன்படுத்தியதை இப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத வனம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தனியாக ஆக்கிரமிப்பாக உள்ள குடிசைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

நாகேஷ், விஜயா, பக்கோடா காதர் காமெடி:

ஏ.சுபைதா, விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: திரைப்படம் ஒன்றில் கிளைமாக்ஸ் சீனில் ஒருதலைக் காதலராக இருந்த நடிகர் நாகேஷிடம், தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லி அழும் நடிகை கே.ஆர்.விஜயாவை, சமாதானப்படுத்தும் நடிகர் நாகேஷ், கைதட்டி தன் உதவியாளரை அழைப்பார். உதவியாளராக நடித்த பக்கோடா காதர், ஒரு கிளாசில் ஜூஸ் எடுத்து வந்து நீட்டுவார். அதைப் பார்த்த நாகேஷ், "ஜூஸ் கொடுப்பவன் எப்படி இருக்கிறான்; குடிக்கிற நான் எப்படி இருக்கிறேன் பார்' என்று, தன் ஒல்லியான உடம்பை, ஒடிந்து போகிற அளவுக்கு வளைத்துக் காட்டி, கதாநாயகி கே.ஆர்.விஜயாவை கலகலவென சிரிக்க வைப்பார். மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக சட்டசபைக்குச் சென்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கம், சம்பள உயர்வையும், தொகுதிநிதி உயர்வையும், இரண்டரை கிரவுண்டு வீட்டு மனையை ஒதுக்க, கோரிக்கை வைத்து இருப்பதைப் பார்த்த பொதுமக்கள், தங்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் நிலை, திரைப்படத்தில் வந்த பக்கோடா காதரைப் போன்று கொழு கொழுவென்று இருப்பதைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு ஒன்றும் செய்ய இயலாது. அதிலும், காங்கிரஸ் ஞானசேகரன் எம்.எல்.ஏ., வீட்டு மனை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, கடந்த மூன்றரை ஆண்டாக அவ்வப்போது, தலைபோகிற பிரச்னையைப் போல சட்டசபையில் எழுப்பி, அதில் வெற்றியும் கண்டுள்ளார். தாராள தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கும், கோரிக்கைகளை ஏற்று, வாரி வாரி வழங்கும் கடைஏழு வள்ளலைப் போன்றாகி விட்டார். ஆனால், பொதுமக்களின் பாடுதான் திண்டாட்டம். இன்னமும் கிராமங்களில் வாழும் அடித்தட்டு மக்கள் படும் வாழ்க்கைப்பாடு சொல்லி மாளாது. பாதிக்கும் அதிகமானவர்களுக்கு, இரண்டு வேளை தான் உணவு; அதுவும் வயிறாரக் கிடைப்பதில்லை. சம்பள உயர்வு கேட்டு சென்னைப் பட்டினத்தில் ஊர்வலம் போகும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மடிப்புக் கலையாத உடையோடும், தாங்க முடியாத நகைகளை அணிந்து, கோஷம் எழுப்பி, ஒய்யார ஊர்கோலம் போவதை தொலைக்காட்சியில் பார்க்கையில், பாமர பொதுமக்களின் வயிறு பற்றி எரிகிறது. காலை ஆறு மணிக்கெல்லாம் விவசாயக் கூலிகளாய் செல்லும் பெண்களுக்கு, கிழியாத உள்பாவாடை கட்டக்கூட வழியில்லை. கடுமையான விலை ஏற்றத்தால், நல்ல சோறு என்பது, அமாவாசை விரதத்தின் போதுதான். காமராஜர் வளர்த்த காங்கிரஸ் பேரியக்கத்தில் இருக்கும் ஞானசேகரன் போன்றவர்கள், இதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். வறுமையில் வாடி வதங்கும் ஏழைகளின் வாழ்க்கை நிலை உயர, சட்டசபையில் குரல் எழுப்பட்டும். எதிர்கால ஏழைச் சமுதாயம், என்றும் நன்றியோடு இவர்களைக் கையெடுத்துக் கும்பிடும்.

மொபைல் போனை தொடர்ந்து பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகளில் காது செவிடாகும் அபாயம்


புதுடில்லி : மொபைல் போனில் தொடர்ந்து பேசுவதால் இரண்டு ஆண்டுகளில் செவிட்டு தன்மை ஏற்படுகிறது, என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இது குறித்து, அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: மொபைல்போனில் தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பேசினால் இரண்டு ஆண்டுகளில் செவிட்டு தன்மை ஏற்படுகிறது. எனவே, ஒரு மணி நேரத்துக்கு மேல் மொபைல் போனில் தொடர்ந்து பேசாதீர்கள். அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்தும் சிலருக்கு காதில் மொபைல் போன் மணி ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. முதுகலை மருத்துவ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்பாட்டினால் வேறென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து ஆராயும் படி மருத்துவ கவுன்சிலிடம் கேட்டுள்ளோம். இதையடுத்து, அவர்கள் மொபைல் போன் பாதிப்பு குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த டாக்டர் வி.எம்.கட்டோச் குறிப்பிடுகையில், "மொபைல் போனிலிருந்து வெளிவரும் ரேடியோ அலைகளினால் மிருகங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்ததில் அவற்றின் மரபணு பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அவற்றின் விந்து உற்பத்தி திறனும் கடுமையாக பாதித்தது. "எனவே, இந்த பாதிப்பு மனிதனுக்கும் ஏற்படுமா? என்பது குறித்து இனி ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம். பெண்களுக்கு மாத விலக்கு சுழற்சி பாதிக்கப்படுமா? ஆண்களுக்கு ஆண்மை தன்மையில் கோளாறு ஏற்படுமா, மன அழுத்தம், தூக்கமின்மை ஏற்படுமா என்ற கோணத்திலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது' என்றார்.

மூணாறு அருகே பூத்து குலுங்கும் குறிஞ்சி பூக்கள்


மூணாறு: இடுக்கி மாவட்டம் பூப்பாறை பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு ராஜமலை, மறையூர், வட்டவடை போன்ற பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் காலம் தவறாமல் பூத்து வருகின்றன.

கடந்த 2006ல் மூணாறில் குறிஞ்சி பூக்கள் பூத்தபோது வனத்துறையினர் சார்பில் குறிஞ்சி விழா நடத்தப்பட்டது. அப்போது, ராஜமலையில் பூத்துக்குலுங்கிய நீலக்குறிஞ்சி பூக்களை ஒரு மாதத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், தற்போது பூப்பாறை அருகே கழுதைகுளம் மேட்டில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன. மூணாறு - குமுளி ரோட்டில் பூப்பாறையில் இருந்து 9 கி.மீ., தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது.

பிரியங்கா சோப்ராவின் லவ் லிஸ்ட்  



என்னை எனக்காக நேசிப்பவர் தான் எனது கணவராக முடியும் என பாலிவுட் புயல் பிரியங்கா சோப்ரா தனது வருங்கால கணவர் குறித்து கூறியுள்ளார். எனக்கு கணவராக வருபவருக்கு உண்மையான அன்பு செலுத்த தெரிந்தால் மட்டும் போதும். நான் முக்கியமானவள் என என்னை உணரச்செய்ய வேண்டும். அவரோடு இருக்கும் போது எனக்கு காற்றில் மிதப்பது போல் தோன்ற வேண்டும் . அன்பு... அன்பு... அன்பு இதை மட்டுமே காட்ட தெரிந்தவரே எனது கணவராக வர முடியும் என லவ் லிஸ்ட் கொடுத்துள்ளார் பிரியங்கா.

அண்மையில் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடிய குஷியில் இருக்கும் பிரியங்கா அளித்துள்ள பேட்டியில், பாலிவுட் இன்டஸ்ட்ரீயில் தன் பயணம் குறித்து சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன்பு, தான் ஒரு மோசமான நடிகையாக இருந்ததாகவும், குடும்பத்தாரின் ஆதரவும், தனது கடின உழைப்புமே தன்னை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளதாகவும் ‌பெருமிதம் பொங்க கூறியுள்ளார். ஆனால் இந்த 6 ஆண்டுகளில் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். இன்னமும் எனது பசி தீரவில்லை. தண்ணீரில் போட்ட ஸ்பாஞ் போல எப்போதும் பாடம் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். கிசுகிசுக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, கிசுகிசுக்களால் தான் நிச்சயமாக வருந்துவதாகவும், அ‌தே சமயத்தில் அவற்றால் தனது உத்வேகம் பாதிக்கப்படாது எனவும் ஸ்ட்ராங்காக கூறுகிறார் பிரியங்கா.

ஜோதா அக்பர் படத்துக்கு 7 விருது  

சீனாவில் உள்ள மகாவு நகரில் 10-வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஜோதா அக்பர் படத்துக்கு 7 விருது கிடைத்து உள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடகர், சிறந்த பாடலாசியர் என 7 விருது அந்த படத்துக்கு கிடைத்து உள்ளது. சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோசன் (ஜோதா அக்பர்) தேர்வு பெற்றார். சிறந்த நடிகையாக பிரியங்கா சோப்ரா (பேஷன்) தேர்வு பெற்றார். “ஜோதா அக்பர்” சிறந்த படமாக தேர்வு பெற்றது. சிறந்த டைரக்டருக்கான விருது அசுதோஸ் கவுரிகருக்கு (ஜோதா அக்பர்) கிடைத்தது.

இரட்டை ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருது கிடைத்தது. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை (ஜோதா அக்பர்) ஆகிய விருதுகள் கிடைத்தன. சிறந்த புதுமுக நடிகையாக அசின் (கஜினி) தேர்வு பெற்றார். சிறந்த பாடகருக்கான விருது ஜாவித் அக்தருக்கும், சிறந்த பாடகிக்கான விருது ஷிரேயா கோஷலுக்கும் (சிங்கிஸ்கிங்) கிடைத்தது. சிறந்த பாடலாசிரியராக ஜாவித் அக்தர் (ஜோதா அக்பர்) தேர்வு பெற்றார்.
 
நிகழ்சசியின்போது 10 ஆண்டின் சிறந்த விருதும் வழங்கப்பட்டது. இதில் சிறந்த படமாக லகான் தேர்வு பெற்றது. 10 ஆண்டின் சிறந்த நடிகராக ஷாருக்கான், நடிகையாக ஐஸ்வர்யாராய், டைரக்டராக ராகேஷ் ரோசன் தேர்வு பெற்றனர்.

ஜாக்சனின் மாஜி ஆலோசகரிடமிருந்து 27.50 கோடி ரூபாய் பணம் மீட்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பாதுகாப்பாகக் கொடுத்து வைத்திருந்த 27.50 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், சென்ற மாத இறுதியில் மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, 2002ம் ஆண்டு அவர் எழுதிய உயில் ஒன்று கிடைத்தது. இந்த உயில் செல்லுபடியாகுமா என்பதை கோர்ட் விரைவில் தீர்மானிக்க உள்ளது.இந்நிலையில், அந்த உயிலை செயல்படுத்துவதற்காக, ஜாக்சனால் நியமிக்கப்பட்ட ஜான் பிரான்கா மற்றும் ஜான் மெக்லெய்ன் என்ற இருவரை, ஜாக்சன் எஸ்டேட்டின் சிறப்பு நிர்வாகிகளாக, லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண கோர்ட் நீதிபதி மிட்செல் பெக்லாப் நியமித்துள்ளார்.இதற்கிடையில், மைக்கேல் ஜாக்சன் ஏராளமான கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவரின் முன்னாள் நிதி ஆலோசகர் ஒருவரிடமிருந்து 27.50 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக எஸ்டேட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரான்கா மற்றும் மெக்லெய்ன் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:நாங்கள் மைக்கேல் ஜாக்சனின் நிதி ஆலோசகர் ஒருவரிடமிருந்து, 27.50 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளோம். மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான எஸ்டேட்டின் மதிப்பு 2,500 கோடி ரூபாய். ஆனால், அவருக்கு இருக்கும் கடன் 2,000 கோடி ரூபாய் தான். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஜாக்சனின் எஸ்டேட் போன்றவை, கடனை அடைக்கத் தேவையானதை விட அதிகமாகவே உள்ளன. மைக்கேல் ஜாக்சனின் தாய் மற்றும் அவரது குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை குறிப்பிட்ட தொகையை வழங்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.ஆனால், அந்த மனுவில், மைக்கேல் ஜாக்சனின் பணத்தை வைத்திருந்த நிதி ஆலோசகர் யார், அவரிடமிருந்து எவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை.

வெங்காயத்தின் மூலம் மின்சாரம் தயாரிப்பு


லாஸ்ஏஞ்சல்ஸ் : வெங்காயத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும், என அமெரிக்க நிறுவனம் நிரூபித்துள்ளது.

கண்ணீரை வரவழைக்கக்கூடிய வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்லாது மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வெங்காயம் மின்சாரம் தயாரிக்கவும் உதவுவதாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "ஆக்ஸ்னார்டு' நிறுவனம் கண்டு பிடித் துள்ளது.

இதுகுறித்து, இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவன் கில் குறிப்பிடுகையில், " முதலில் வெங் காய தோல்களை மண்ணில் இட்டு உரமாக்கி அதிலிருந்து மின்சாரம் தயாரித்து வந்தோம். ஆனால், அந்த முறையில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. தற்போது, வெங்காயத்தை செடியில் இருந்து பறித்த உடனே, அரைத்து சாறு எடுத்து விடுகிறோம். இந்த சாற்றில் சர்க்கரை சத்து உள்ளதால் பாக்டீரியாக்களால் வேதி பொருளாக மாறுகிறது. இந்த வெங்காய சாற்றிலிருந்து மீதேன் வாயு உருவாகிறது. இதை 300 கிலோ வாட் பேட்டரியில் பயன்படுத்தினால் 460 வீடுகளுக்கு பயன்படுத்தும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இந்த முறையில் உருவாக்கப்பட்ட மின்சாரத்தினால், எங்கள் நிறுவனத்தின் 40 சதவீத தேவையை பூர்த்தி செய்து கொள்கிறோம்' என்றார்.

சிறுநீர் மூலம் கார் இயங்கும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

நியூயார்க் : சிறுநீர் மூலம் காரை இயக்கமுடியும், என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள், சிறுநீரிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்கி அதன் மூலம் காரை இயக்க முடியும், என சோதனை செய்துள்ளனர்.

இது குறித்து, இந்த பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஜெரார்டைன் போட் குறிப்பிடுகையில், "சிறுநீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் நிக்கல் எலெக்ரோடு வைத்து மின்சாரத்தை பாய்ச்சினால் அதிலிருந்து ஹைட்ரஜன் கிடைக்கிறது. இந்த முறையில் பேட்டரியை இயக்க முடியும். நாலரை லிட்டர் சிறுநீரை கொண்டு 144 கிலோ மீட்டர் வரை காரை இயக்க முடியும்' என்றார்.ஜார்ஜியா பல்கலைகழக பேராசிரியர் ஜான் ஸ்டிக்னி குறிப்பிடுகையில், "யூரியா மற்றும் சிறுநீரை கொண்டு வேறென்ன செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே, கால்நடை மற்றும் மனித கழிவுகள் விளை நிலங்களில் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் உள்ள அனைத்து கால்நடை மற்றும் மனித கழிவுகளை முழுவதுமாக பயன்படுத்தினாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இந்த கழிவுகளை கொண்டு எரிபொருள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு உபயோகப்படுத்தினால் மனித கழிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விடும்' என்றார்.

தீ வைத்தால் பற்றி எரியும் ஆப்பிள்


கோபிசெட்டிபாளையம்: புற்றுநோயை எளிதாக வரவழைக்கும் மெழுகு தடவிய ஆப்பிள் கோபி பகுதி பழக்கடைகளில் கன ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் அலட்சியமாக உள்ள கோபி நகராட்சி நிர்வாகம், மக்கள் நலன் காப்பதிலும் கும்பகர்ணனாக தூங்குகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரை, காஃபி தூள், தேயிலை, மிளகு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் நூதன முறையில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. உணவில் கலப்படம் செய்தால் சம்பந்தபட்டவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கும் சட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

சீஸன் காலங்களில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழம், அன்னாசி, மாதுளை மற்றும் வாழைப்பழங்களை பழுக்க வைக்க, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பைட் கற்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவ்வப்போது சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் திடீர் ஆய்வின்போது இவை பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். இதுபோன்ற ஆய்வு அடிக்கடி நடப்பதில்லை. அதிகாரிகளின் மெத்தனத்தால் உணவு பொருட்களில் கலப்படம் மற்றும் பழங்களை வேதியியல் பொருட்களை கொண்டு பழுக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்கிறது. சமீப காலமாக ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், பளபளப்பாக இருக்கவும் அவற்றின் மீது மெழுகு தடவி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

பல மாவட்டங்களில் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, மெழுகு தடவப்பட்ட ஆப்பிள் பழங்களை கைப்பற்றினர். கோபி நகராட்சி பகுதியிலும் சென்ற வாரம் மெழுகு தடவிய ஆப்பிள் பழங்களை சுகாதார அலுவலர் ஆறுமுகம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கைப்பற்றினர். ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோபி - சத்தி சாலையில் உள்ள பெரிய நவீன பழக்கடைகள், பஸ் ஸ்டாண்டு மற்றும் மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் புற்றுநோயை வரவழைக்கும் மெழுகு தடவிய ஆப்பிள் பழங்கள் வெகு ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் பழத்தின் மேல் பகுதியை சுரண்டினால் வெள்ளை நிறத்தில் மெழுகு தடவப்பட்டுள்ளது நன்றாக தெரிகிறது. பழத்தை தீயிட்டு கொளுத்தினால் நன்றாக பற்றி எரிகிறது. இத்தகைய ஆப்பிள் பழங்களை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய், சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்று கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.கோபி நகராட்சி பகுதிகளில் சாலைப்பணி, புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளில் போதிய கவனம் செலுத்தாமல் ஆமை வேகத்தில் செயல்படும் நகராட்சி நிர்வாகம், மக்கள் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் உணவுப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கவும் தயங்கி வருகிறது. 

கழுதை மீது ஏறி 'காமெடி'

உத்தமபாளையம்: கம்பம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கழுதை மீது ஏறி வந்தவர், மூன்று நிமிடம் தாமதமானதால் மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார். தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாவட்ட பொதுச்செயலர் சேகர்ஜீ(44). இவர் கம்பம் தொகுதியில் மனு தாக்கல் செய்ய நேற்று உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு கழுதை மேல் ஏறி வந்தார். தேர்தல் அலுவலர், ""மனு தாக்கல் நேரம் முடிந்துவிட்டது'' என்று கூறினார். கழுதையை மினிடோர் வாகனத்தில் ஏற்றி அனுப்பி விட்டு இவர் பைக்கில் வீடு திரும்பினார்.

வாதாட மட்டுமல்ல; விளையாடவும் தெரியும் : வக்கீல்கள் ஆடும் வாலிபால் போட்டி

கோவை: வக்கீல்கள் மட்டும் பங்கேற்கும் மாநில அளவிலான, "பார் அசோசியேஷன் டிராபி' வாலிபால் போட்டி, ஆகஸ்ட் 15ல் கோவையில் நடக்கிறது.கோவை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில், முதன்முதலாக வக்கீல்கள் பங்கேற்கும் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடக்கிறது. போட்டிகளின் துவக்க விழா, ஆக., 15ல், கோர்ட் வளாகத்தில் உள்ள வாலிபால் விளையாட்டு மையத்தில் நடக்கிறது. மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம் தலைமை வகித்து, போட் டியை துவக்கி வைக்கிறார்.ஆக., 16ல், அரையிறுதி போட்டிகள் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடக்கிறது. இறுதி போட்டி மாலை 3.00 மணிக்கு நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கும் விழா, மாலை 5.00 மணிக்கு நடக்கிறது.

வெற்றி பெறும் அணி மற்றும் வீரர்களுக்கு, அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட நீதிபதிகள் சொக்கலிங்கம்(கோவை), முருகன்(நீலகிரி), கலெக்டர் உமாநாத், எம்.பி., நடராஜன் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.வெற்றி பெறும் அணிக்கு சுழல் கோப்பை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது. அடுத்து வரும் அணிக்கு கேடயத்துடன் 10 ஆயிரம் ரூபாயும், மூன் றாவது இடம் பிடிக்கும் அணிக்கு கேடயம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இப் போட்டியை கோவை வக்கீல்கள் வாலிபால் கிளப் நடத்துகிறது.இத்தகவலை கோவை வக்கீல்கள் சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் மாதவன் ஆகியோர் தெரிவித்தனர்.

4 வயது சிறுவன் வேகமாக கார் ஓட்டலாமா? அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை:சாதனை என்கிற பெயரில் ஆபத்தான செயல்களை மாணவர்களிடம் ஊக்குவிக்கக் கூடாது என அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை புதுபெருங்களத்தூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:

கடந்த 15ம் தேதி வெளியான "தினமலர்' நாளிதழில், நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் அதிவேகத்தில் காரை ஓட்டியதாக செய்தி வெளியாகி உள்ளது. வத்தலகுண்டு அருகில் உள்ள முத்தாளபுரத்தைச் சேர்ந்த மாணவன் நவீன்குமார். ஜெயசீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.பள்ளி வளாகத்தில் இண்டிகா, ஸ்கார்பியோ, டவேரா மாடல் கார்களை, மாணவர்கள் மற்றும் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் மத்தியில் ஓட்டிக் காண்பித்துள்ளான்.

100ல் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை வத்தலகுண்டு ரோட்டில் காரை அதிவேகமான ஓட்டிச் சென்றுள்ளான். "கார் பந்தயம் பார்த்து, அதிவேகத்தில் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பந்தயத்தில் கலந்துகொள்வேன்' என நவீன்குமார் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.ஒருவருக்கு 18 வயது நிரம்பிய பிறகு தான், ஓட்டுனர் உரிமத்தை அரசு வழங்குகிறது.

எனவே, காரை நவீன்குமார் ஓட்டியது சட்டத்திற்கு எதிரானது. முறையான உரிமம் பெறாமல், ஒரு சிறுவன் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளான். விபத்தின் விளைவுகள், போக்குவரத்து விதிகள் அவனுக்கு தெரியாது.ஓட்டுனர் உரிமம் கோரி ஒருவர் விண்ணப்பித்தால், முதலில் பழகுனர் உரிமம் தான் வழங்கப்படும். அதன்பின் தான், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயதுக்கு குறைவானவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற தகுதி இல்லை. அவர்கள் சாலைகளில் வாகனத்தை ஓட்டக் கூடாது.பள்ளி அதிகாரிகளின் செயல் சட்டவிதிகளை மீறியதாக உள்ளது.

மேலும், 18 வயதுக்கு குறைவான மாணவர்களை காரை ஓட்ட தூண்டுவதாக உள்ளது. போக்குவரத்து விதிகள் தெரியாமல் காரை ஓட்டுவதால், மற்றவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படக்கூடும். இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நிறுத்தப்பட வேண்டும்.எனவே, தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி தொடர்பாக கல்வித்துறை செயலர், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் விசாரணை நடத்தி, சட்டத்தை மீறியிருந்தால் ஜெயசீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரை கண்டிக்க வேண்டும்.

சாதனை என்கிற பெயரில் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி கல்வித் துறை மற்றும் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

ஹாலிவுட் தரத்தில் யோகி : அமீர் பெருமிதம்


சுப்பிரமணியசிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் யோகி படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக டைரக்டரும், நடிகருமான அமீர் பெருமிதம் பொங்க கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி:

சென்னையில் உள்ள குடிசை பகுதிதான் யோகி படத்தின் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி இளைஞனின் உணர்வுகள்தான் கதை. சென்னைவாசிகள் பற்றி இதற்கு முன் சில படங்கள் வந்திருந்தாலும் யோகியில் பார்க்கப்போகும் களம் புதுசாக இருக்கும். எட்டுக்கு எட்டு அறையில் அவர்கள் நடத்தும் வாழ்க்கையே தனி படமாக எடுக்கும் அளவுக்கு சுவாரஸ்யம் இருக்கிறது. பசி எடுக்குதுன்னு ‌தெரிஞ்சா சூழ்நிலை, சுற்றியிருக்கும் மனிதர்கள் என எதையும் யோசிக்காமல் அடித்து, பிடுங்கி சாப்பிடும் கேரக்டர்தான் யோகி.

இயக்குனரா கேமராவுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த எனக்கு கேமராவுக்கு முன்னாடி நிக்குற அனுபவம் புதுசாத்தான் தெரிந்தது. எல்லாத்தையும் வேலை வாங்கியபோது நடிகர்களின் சிரமங்கள் அவ்வளவா தெரியாது. இப்போ நானே களத்தில் நின்றபோதுதான் அதில் உள்ள கஷ்டங்கள் புரிந்தது.

யோகிக்காக உடல் ரீதியா நிறைய சிரமங்களை எடுத்துருக்கேன். மூணு வேளையும் அசைவம் சாப்பிடுற ஆளு நான். யோகிக்காக தினமும் பச்சை காய்கறி, அவித்த முட்டையில் வெள்ளை கரு மட்டும்னு என்னோட மெனு பத்தியமாகி, மூலிகை வைத்தியர் வீட்டுல இருக்கிறமாதிரி பீலிங் வந்திடுச்சு. ஜிம்முக்கு போய் உடலை இறுக்கிக் கிட்டேன். ஹாலிவுட் தரத்துக்கு சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளோம். இரண்டு சண்டை காட்சிகளை மட்டும் படமாக்குறதுக்கு 51 நாட்கள் ஆனது. டூப் போடாமல் நடித்ததால் 2 தடவை அடி பட்டிடுச்சு.

படத்துல இன்னொரு ஹைலைட்டா யுவனோட இசையை சொல்லலாம். என்னுடை படங்களுக்கு இசையமைக்கும்போது மட்டும் மாடர்ன் இளையராஜாவா மாறிடுவார் யுவன். யோகி படத்துல மொத்தம் நாலு பாட்டு. அதில் ஒன்று பிரமோஷன் பாட்டு. நானும் ஒரு பாட்டு பாடிருக்கேன். யோகி படம் வந்த பிறகு டைரக்டர் சுப்பிரமணிய சிவா இன்னொரு கோணத்தில் தெரிவார். அந்த அளவுக்கு யோகி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.

இவ்வாறு அமீர் கூறினார்.

படத்துல மெசேஜ் ஏதும் சொல்றீங்களா? என்று அமீரிடம் கேட்டதற்கு, மெசேஜ் சொல்றதுக்காக சினிமா எடுக்கக் கூடாது. இது ஒரு பொழுதுபோக்கு அம்சம். இதில் அட்வைஸ் சொல்லக்கூடாது, என்று மினி லெட்ஜரே எடுத்து விட்டார்.

அமெரிக்க நிறுவனம் அப்துல் கலாமை சோதனை செய்தது மாபெரும் குற்றம்: எம்.பி.,க்கள் கொதிப்பு; நடவடிக்கை எடுக்க அரசு உறுதி

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்ற போது, அவரை டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், "கான்டினென்டல் ஏர்லைன்ஸ்' அதிகாரிகள் சோதனை நடத்திய விவகாரம் பார்லிமென்டில் நேற்று எதிரொலித்தது. "கலாமை பாதுகாப்பு பரிசோதனைக்கு ஆட்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மிக முக்கியமான வி.ஐ.பி., பட்டியலில் உள்ளவர்கள். அதனால், அவர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களின் உடலை தடவி சோதனை நடத்தக் கூடாது. இதுவே விதிமுறை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த ஏப்ரல் 24ம் தேதி, "கான்டினென்டல் ஏர்லைன்ஸ்' விமானத்தில் அமெரிக்காவின் நீவார்க் நகருக்கு பயணம் மேற் கொண் டார். அப்போது, விமானத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் உடலைத் தடவி பரிசோதனை மேற் கொண்டனர். அத்துடன் அவரின் ஷூவையும் கழற்றி காண்பிக்கக் கூறினர். அப்துல் கலாம் இதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, கலாமின் மொபைல் போன், கையேடு மற்றும் கைப்பை போன்றவையும் ஒரு கூடையில் போடப் பட்டு எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டன. "முன் னாள் ஜனாதிபதியை பாதுகாப்பு பரிசோதனைக்கு ஆட்படுத்தக் கூடாது' என்ற விதிமுறையை மீறி, இந்த சோதனை நடத்தப் பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் ராஜ்யசபாவில் நேற்று எழுப்பப்பட்டது. கலாமிடம் சோதனை நடத்தியதற்கு எம்.பி.,க்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத் திய விவகாரம் மன்னிக்க முடியாத குற்றம். அந்தத் தவறை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரச்னை தொடர்பாக, நான் தனிப்பட்ட முறையில் கலாமை சந்தித்து வருத்தம் தெரிவிப்பேன். அவரிடம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விவரிப்பேன். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு, எந்த தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்படவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தான் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளனர். நாட்டின் உயரிய தலைவர்களில் ஒருவரான கலாமை, பரிசோதனை செய்தது தவறானது. தேசிய தலைவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டிக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டிக் குறிப்புகளை மீறி செயல்பட்டவர்கள் மீது, சிவில் விமானப் போக்குவரத்து சட்டம் விதி எண் 11ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், அன் னிய நாட்டு விமான நிறுவனமும் சம்பந்தப்பட்டுள்ளதால், வெளியுறவு அமைச்சர் கிருஷ் ணாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதை அவர் உறுதி செய்வார். இவ்வாறு அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.

ஆனால், ராஜ்யசபாவில் காங்கிரஸ் உட்பட எல்லா எம்.பி.,க் களும் இவ்விஷயத்தில் கொதித்துப் போய் பேசியதாவது:

ஜெயந்தி நடராஜன்-காங்: சோதனையை அனுமதித்த அதிகாரியை அந்த விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அதுவரை அந்த நிறுவன சர்வீசை இந்தியாவில் நிறுத்த வேண்டும்.

சிவா - தி.மு.க: இளைஞர்களின் நாயகன் கலாம். அவரை அவமதித்த விமானத்தை இங் கே இயக்க அனுமதிக்கக் கூடாது.

அருண் ஜெட்லி-பா.ஜ: வெளிநாட்டுத் தலைவர் இங்கே வந் தால், அவரை விமானம் வரை சென்று அழைத்து வர நடைமுறைகள் உள்ளன. ஆனால், நம் நாட்டைச் சேர்ந்தவர் என்றால் சோதனை நடக்கிறது; இது கொடுமையானது. கெட்ட நோக்கத்துடன் செயல்படுத்தப் பட்டது. என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை, இதை அனுமதிக்கக் கூடாது.

"யாருக்கும் விதிவிலக்கு கிடையாது': "வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி.,களுக்கு என, விசேஷ பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் இல்லை. மற்றவர்களை பரிசோதிப்பது போன்று தான் கலாமையும் நாங்கள் பரிசோதித்தோம்' என, கான்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த ஏர்லைன்ஸ் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கு விமானங்களை இயக்கும் மற்ற நிறுவனங்கள் பின்பற்றும் விதிமுறைகளைத் தான், கான்டினென்டல் நிறுவனமும் பின்பற்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமே எங்களின் இந்த சேவையில் திருப்தி அடைந்திருப்பார் என்று நம்புகிறோம். அவரை எங்களின் வாடிக்கையாளராக கொண்டிருப்பதில் பெருமைப்படுகிறோம். எங்கள் விமானத்தில் பறந்ததற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய பரிசோதனை இவர்களுக்கு இல்லை...: விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனை செய்வதிலிருந்து விலக்கு பெற்றுள்ளவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் உள்ளது. இதைமீறி, டில்லியில் அமெரிக்க விமான நிறுவன அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்தது, மத்திய சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணானது. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் தலாய்லாமா ஆகிய இருவருக்கும் விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே, அரசு பதவி ஏதுமில்லாத, அதே சமயம் பரிசோதனை விலக்கு பெற்றுள்ள நபர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. விமான நிலைய விதிமுறைகளின் படி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர், கேபினட் அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், தூதர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், கேபினட் செகரட்டரி, முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள், சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) பாதுகாப்பு அளிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனையிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.

தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம்: சென்னையில் வீடு கட்ட மனை ஒதுக்கீடு

சென்னை: எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுடன், அவர்களுக்கு சென்னைக்கு அருகே வீட்டு மனை ஒதுக்கவும் அரசு சம்மதித்துள்ளது.

சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் கூறியதாவது: ஊதிய நிர்ணயத்தில் சில முரண்பாடுகளை அரசு ஊழியர் சங்கங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து, முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபையை அதிக நாட்கள் நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே சட்டசபையில் அதிக வாதங்கள் நடப்பது தமிழகத்தில் தான். அடுத்த ஆண்டு அதிக நாட்கள் நடத்த முயற்சிக்கப்படும். எம்.எல்.ஏ.,க்களுக்கு தற்போது 3,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அது 8,000 ரூபாயாக உயர்த்தப்படும். கடந்த ஏப்ரல் மாதம் எம்.எல்.ஏ.,க்களுக்கான வாகனப்படி 5,000 ரூபாயில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இது இன்னும் கிடைக்காதவர்களுக்கு விரைவில் கிடைக்கும்.

இதன்படி, எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 45 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயரும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 1.21 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கான ஓய்வூதியம், 8,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும். 4,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறும், ஒரு ஆண்டுக்கு குறைவாக எம்.எல்.ஏ., பதவி வகித்தவர்களுக்கும் இந்த உயர்வு நீட்டிக்கப்படும். இதனால் அரசுக்கு 2.25 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். மறைந்த எம்.எல்.ஏ.,க்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக 2,000, 3,000, 4,000 என மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. இந்த வேறுபாடுகளை போக்கி, அனைவருக்கும் ஒரே வீதத்தில் குடும்ப ஓய்வூதியமாக 5,000 ரூபாய் வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தும் போது, குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அதில் 50 சதவீதம் உயர்த்தப்படும். அரசு மருத்துவமனைகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதை போல, மறைந்த எம்.எல்.ஏ.,க்களின் வாரிசுகளுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்த சம்பள உயர்வுகள் அனைத்தும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.

சென்னைக்கு அருகே குறிப்பிட்ட இடத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்கு வீட்டுமனை வேண்டுமென ஞானசேகரன் கோரியிருந்தார். 105 எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்தை பெற்றுத் தந்துள்ளார். இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டுமனை ஒதுக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்க பரிசீலிக்கப்படும். வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டு, நிர்ணயிக்கும் விலையை எம்.எல்.ஏ.,க்கள் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கான தொகுதி நிதி, 1.50 கோடியில் இருந்து 1.70 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் பாராட்டிப் பேசினார். அப்போது முதல்வர் குறுக்கிட்டு, ""சட்டசபையில் அனைவரும் பாராட்டத்தக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டதற்கு ஞானசேகரன் நன்றி கூறுகிறார். அவர் காலனி கட்டும் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கிறார். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கான இதர அறிவிப்புகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஏன் வாய்மூடி இருக்கிறார்?'' என்று கேட்டார். இதற்கு அ.தி.மு.க.,வினர் யாரும் பதிலளிக்கவில்லை. மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி எழுந்து, ""முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியதற்கு நன்றி. ஆனால், தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை,'' என்றார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாலிவுட்டுக்கு போகிறார் நயன்தாரா!  


பாலிவுட் பக்கம் போன அசின் மீண்டும் கோலிவுட்டிற்கு தரிசனம் தர தயங்குகிறார். அவரைத் தொடர்ந்து ஜெனிலியாவும், த்ரிஷாவும் பாலிவுட் பக்கம் போயிருக்கிறார்கள். அவர்கள் மீண்டு(ம்) வருவார்களா என்பது தெரியவில்லை. இப்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவும் பாலிவுட் பக்கம் போகப்போகிறாராம். விரைவில் பிரபுதேவா இந்தியில் இயக்கப்போகும் படமொன்றில் நயன்தாராதான் நாயகி. நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார்.

தற்போது நயன்தாரா தமிழில் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து பிரபுதேவாவின் இந்தி படத்தில் நயன்தாரா நடிப்பார் என தெரிகிறது.

சானாகானுக்கு முதல் விருது!  

சிலம்பாட்டம் படத்தில் பிராமனப் பெண்ணாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தவர் சானாகான். இவருக்கு சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றில் விருது கிடைத்துள்ளது. இந்த விருது தனக்கு கிடைத்த முதல் விருது என பெருமிதம் பொங்க கூறியிருக்கும் சானாகான், பரத்துடன் ஜோடி சேர்ந்துள்ள தம்பிக்கு இந்த ஊரு படத்தில் துறுதுறு சுட்டிப் பெண்ணாக நடித்து வருவதாக கூறினார். இதனை தான் நடிக்கும் மூன்றாவது படமான சாந்துப்பொட்டில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருப்பதாகவும், தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்த சாந்துப்பொட்டு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார். படத்தில் டூப் இல்லாமல் சண்டை போட்டிருக்கும் சானா, பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக ரோப் ஷாட்டுகளிலும் கலக்கியிருக்கிறாராம். தமிழில் கைவசம் மூன்று படம் வைத்துள்ள அம்மனிக்கு , தெலுங்கில் ‌தடம் பதிக்க 2 வாய்ப்புகள் பரிசீலனையில் உள்ளனவாம்.

புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில் ஆண்டு இல்லாததால் குழப்பம்

அவலூர்பேட்டை: மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில், ஆண்டு குறிப்பிடாததால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். அரசர் காலங்களில் தங்கம், வெள்ளி, செப்பு, பித்தளை போன்ற உலோகங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் வழக்கம் இருந்தது. மக்களாட்சி துவங்கியதும், மத்திய அரசின் ஒப்புதலுடன் ரிசர்வ் வங்கி சார்பில், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

 நாணயங்கள், பித்தளை, நிக்கல், அலுமினியம் உலோகங்களில் அச்சிடப்படுகின்றன. ரூபாய் நோட்டுகள், காகிதங்களில் அச்சிடப்படுகின்றன. சமீபத்தில், புதிதாக ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் 10 ரூபாய் நாணயங்களை, மத்திய அரசு வெளியிட்டது. புதிய நாணயங்கள் மிக சிறிய அளவில் காணப்படுவதால், பழைய ஐம்பது காசுக்கும், புதிய ஐந்து ரூபாய்க்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளது. இது, பல பிரச்னைகளை உருவாக்குகிறது. மளிகைக் கடை முதல், பஸ் கண்டக்டர் வரை அனைவரிடமும் சண்டை போடும் நிலை ஏற்படுகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில், மகாத்மா பசவேஸ்வரா உருவம், பெயர் காணப்படுகிறது. அவரது உருவத்தைச் சுற்றி இந்தியில், "பக்தி காயத் தாசோக் சம்தா' என வாசகம் உள்ளது. எந்த காலத்தைச் சேர்ந்த நாணயமென அறிந்து கொள்ள, ஆண்டு குறிப்பிடுவது வழக்கம். ஆனால், இந்த நாணயத்தில் ஆண்டு குறிப்பிடாததால், பொதுமக்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர். எனவே, அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில், ஒன்றுக்கொன்று வித்தியாசங்களுடன் நாணயங்களை, மத்திய அரசு வெளியிட வேண்டும்.

காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து: காங்., 'பகீர்'

சென்னை : ""நிலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம் குற்றஞ்சாட்டினர்.

சட்டசபையில், காவல்துறை மானியத்தின் மீது, காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் சுதர்சனம் பேசியதாவது:மதுரையில் கூஜா வெடிகுண்டுகள் பிடிபட்டுள்ளன; வெடிகுண்டு கலாசாரம் பெருகினால், விபரீத விளைவுகள் ஏற்படும். காவல்துறை அதிகாரிகளின் திறமைக் குறைவுதான், நக் சல்கள் ஊடுருவ காரணம்.சென்னையில் ரயிலை கடத்திய தீவிரவாதி யார் என்பதை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்த வேண் டும். நிலம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. இது ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்படுத்துகிறது.சாலைகளில் பயணிக்கும் காவல் துறை வாகனங்கள், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. அவர்களின் வாகனங்கள், குடும்பத்தினருக்கு பயன்படுவதைத் தடுக்க வேண் டும்.பொதுமக்களை, வாகன ஓட்டிகளை மிரட்டி காவல்துறையினர் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும். இப்படி செய்பவர்களை காட்டிக் கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற பெயரில் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து காவலர்களுக்கு, "ரிஸ்க் அலவன்சை' அதிகரிக்க வேண்டும். வழக்குகள் உள்ளிட்டவற்றிற்காக சென்னை வரும் காவலர்கள் தங்க விடுதி கட்டி, குறைந்த வாடகையில் தர வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் காவல்துறையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை மையம் (நார்கோ லேப்) அமைய நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அந்த சோதனை மையத்தை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. 10 ஆயிரம் ரூபாய் கொடுத் தால் கூட கொலை செய்ய கும்பல் தயாராக இருக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. காவல்துறையில் நேர்மையாக செயல்படும் அதிகாரிக்கு, "கக்கன்' விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.இவ்வாறு சுதர்சனம் பேசினார்.

தேர்தலுக்குப் பின் அமைச்சரவை மாற்றம்! :

""அமைச்சரவை மாற்றம் உறுதியா இருக்கும் வே... ஆனா, இப்ப இல்லை...!'' என பேச ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""மத்திய அமைச்சரவையிலா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய். ""தமிழக அமைச்சரவை தான் வே... சட்டசபை முடிஞ்சதும் மாற்றம் இருக்கும்ன்னு பேச்சு இருந்தது... இடைத்தேர்தல் அறிவிச்சதால, அந்த முடிவு தள்ளிப் போவுது... தேர்தலுக்கு அப்பறம் தான் மாற்றம்ன்னு சொல்றாங்க... தேர்தல்ல ஜெயிச்சா, கோவை கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும்... முதல்வர்கிட்ட இருக்கும் பொதுப்பணித் துறை வேறு மூத்த அமைச்சருக்கு போவும்...
""துணை முதல்வர் அமெரிக்கா போகும் திட்டத்திலும் மாற்றம் இருக்குமாம்... அவர், 24ம் தேதி கிளம்பி, ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை வர்றதா இருந்தது... இடைத்தேர்தல் 18ம் தேதி நடக்குது... இடையில் 15ம் தேதி சுதந்திர தின விழா, 16ம் தேதி பிரசாரம் முடியறதால, துணை முதல்வர் பிரசாரம் செய்யும் வாய்ப்பு குறையுது... அதனால, அமெரிக்க பயணத்தை தள்ளி வைக்க அல்லது முன்கூட்டியே திரும்ப ஆலோசனை நடக்கு...'' என்றார் அண்ணாச்சி.

""சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் செய்யும் முடிவுல தீவிரமா இருக்காங்க...'' என அடுத்த தகவலுக்கு தாவினார் அந்தோணிசாமி.

""பாலாறு விவகாரத்திலா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

""அதில்லைங்க... சட்டசபையில் பி.டி.ஆர்., சபாநாயகரா இருந்தப்ப 18 பேரை தற்காலிகமா வேலைக்கு சேர்த்தார்... அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் அவங்களை வீட்டுக்கு அனுப்பினாங்க... கோர்ட்ல வழக்கு போட்டு, வேலையில சேர்ந்துட்டாங்க...

""அதே மாதிரி, காளிமுத்து சபாநாயகரா இருந்தப்ப 18 பேரை நியமிச்சார்... அவங்களை இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பியது... முந்தைய கோர்ட் தீர்ப்பை காட்டி, இவங்க வழக்கு போட்டாங்க... வேலையில் சேரச் சொல்லி ஐகோர்ட் தீர்ப்பளிச்சது... அதை எதிர்த்து அப்பீல் செய்தாங்க... அதிலும் ஊழியர்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்திருச்சுங்க... ஆனாலும், சுப்ரீம் கோர்ட்ல வழக்கு போட்டு, இவங்களை சேர்க்காம தடுக்க சட்டசபை செயலகம் தீவிரமா இருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.

""சினிமாகாரங்களுக்கு இனி முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க பா...'' என கட்சி விவகாரத்துக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.

""இந்த முடிவை எடுத்தது யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

""அ.தி.மு.க.,வுல தான் இந்த முடிவை எடுத்திருக்காங்க பா... அந்த கட்சியில நிறைய சினிமா பிரமுகர்கள் இருக்காங்க... கட்சிக்கு விசுவாசமா இருக்கறவங்க ஒரு சிலர் தான்... மத்தவங்க எல்லாம் பதவி கிடைச்சா தான் தங்கள் விசுவாசத்தை காட்டறாங்க... இதுகுறித்து கட்சிக்கு நிறைய புகார் போயிருக்கு...

""தி.மு.க.,வுல பேச்சாளரா இருந்த ராதாரவி இங்க வந்ததும் எம்.எல்.ஏ., ஆனாரு... தேர்தல்ல சீட் கிடைக்கலைன்னு தெரிஞ்சதும் தி.மு.க.,வுக்கு தாவிட்டாரு... சரத்குமார், ராதிகா தனிக்கட்சி ஆசையில வெளியில போயிட் டாங்க... இந்த வரிசையில எஸ்.வி.சேகர், முரளி எல்லாரும் விலகி போ யிட்டு இருக்கறதா கட்சி மேலிடத்துக்கு புகார் போயிருக்கு பா... அதனால இனி எந்த நடிகருக்கும் கட்சியில முக்கியத் துவம் கொடுக்க வேண் டாம்னு கட்சி மேலிடம் முடிவெடுத்திருக்காம் பா...'' எனக் கூறிவிட்டு கிளம்பினார் அன்வர்பாய்; பெஞ்சில் அமைதி திரும்பியது.