மலையன்

இனிப்பும் நெருப்பும் கலந்த கதை. கந்தக பூமியான சிவகாசியை களமாக்கியிருப்பது இன்னும் பொருத்தம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிற பொட்டல் வெளியில், பூ பூத்த மாதிரி விரிந்து கிடக்கிற கரண்-ஷம்மு காதல் இனிப்பு என்றால், வில்லன், வெடிகுண்டு, விரக்தி கூச்சல் என்று அங்கங்கே அடிக்கிறது அக்னி மழை!

பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும் கரணுக்கும், பக்கத்து ஊர் ஷம்முவுக்கும் காதல். ஜெயிப்பார் என்று நம்பி கரண் மேல் பெட் கட்டும் ஷம்மு ஏமாந்து போக, வழிப்பறி கொள்ளைக்காரியாக ஒவ்வொன்றாக லவட்டுகிறார் கரணிடமிருந்து. ஏய்ய்ய்ய்... என்ற ஷம்முவின் ஒரே அதட்டலுக்கு, கப்சிப் ஆகிற கரண் ஒரு சந்தர்ப்பத்தில் காதலாகி கசிய... ஷம்முவின் மனசிலும் மத்தாப்பூ! கல்யாணத்து நாள் குறிக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே ஷம்மு காலி. அதுவும் கரணின் பட்டாசு ஆலை விபத்தில்! இது விபத்தல்ல. சதி என்பது தெரியவர, கரண் என்கிற எமன் எடுக்கிற பாசக்கயிறு, எவனை பதம் பார்க்கிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் கூட, அதிலும் ஒரு நடிப்புக் கல்லு£ரிக்கே தீனி போடுகிற அளவுக்கு சிலபஸ்சை கக்கும் கரண், இந்த படத்திலும் தனது வேலையை செவ்வனே செய்திருக்கிறார். ஷம்முவிடம் தனது சைக்கிளையும் பறிகொடுத்துவிட்டு கேட் ஏறி குதித்து ரகளை அடிக்கிற இடம் கலகலப்பு என்றால், அதே ஷம்முவின் பிணத்தை பார்த்து கதறுகிற காட்சியில் நொறுங்கிப் போக வைக்கிறார் ரசிகர்களின் மனசை. இவருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகளில் முதன்முறையாக பொருட்செலவும் பிரமாண்டமும் வெளிப்பட்டிருக்கிறது. அடுத்த ஸ்டெப்பை தைரியமா எடுத்து வைங்க பாஸ§!

ஆம்பளை பசங்க மாதிரி ஷம்மு அடிக்கிற லு£ட்டி என்ன? அப்பன் மேலேயே இடித்துக் கொண்டு போகும் அசால்ட் என்ன? அழகை து£க்கி அந்த பக்கம் போடுங்க. தமிழ்சினிமாவில் நடிக்க தெரிந்த இன்னொரு நடிகை வந்தாச்சு. ருசியை விடுங்கள், ஊறுகாயின் நெடி கூட அடிக்கவில்லை உதயதாராவிடம். மொத்தத்தில் ஜூ.ஆ அவ்வளவு நல்லவராக வரும்போதே தெரிகிறது. இவர்தான் வில்லனாக இருப்பார் என்று. சரத்பாபுவின் வில்லத்தனத்தில் செயற்கையே அதிகம். கஞ்சா கருப்பு, மயில்சாமி என்று கலகலப்புக்கும் கியாரண்டி இருக்கிறது.

பட்டாசு கம்பெனி வாரிசாக நடித்திருக்கும் சக்தி குமார், விரும்பினால் வெற்றிப்பட வில்லனாக ஒரு சுற்று வரலாம்.

தினாவின் இசையில் தெரிஞ்சா சொல்லுங்க அசத்தல். பொட்டல் பட்டி, உன்னைப்போல இரண்டும் மனசை அள்ளிக் கொண்டு போகிற ட்யூன்கள். பின்னணி இசைதான் வழக்கம் போல தப்பட்டை!

அனல் அரசுவின் சண்டைகள் ஒவ்வொன்றும் சிவகாசி சரவெடி.

மலைக்க வைத்திருக்கிறான் மலையன்

வேலு பிரபாகரனின் "காதல் கதை "


சொத சொதன்னு கதை சொல்றவங்களுக்கு மத்தியிலே, வேலு பிரபாகரன் சொல்ற இந்த காதல் கதை இருக்கே, \'கண் கொள்ளா(?)\' மிரட்சி.

குளோஸ் அப்பில் வந்து அவுத்து போடுவதை பற்றி லெக்சர் அடிக்கும் வேலு பிரபாகரன், \"ஆம்பளைங்க இதையெல்லாம் பார்த்துதான் காமுர்றான்...\" என்று கவலைப்படும்போது க்ளுக்கென்று சிரிப்பு வருகிறது. படத்தில் வரும் மூன்று பெண்களும், ஐயனாருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆடு மாதிரியே அசைவ விருந்துக்கு தயாராகியிருக்கிறார்கள். அதிலும் இவர்கள் காட்டும் சதை புரட்சி, \'போன்லெஸ்\' கொண்டாட்டம்.

ஷெர்லிதாஸ், சரத் செந்தில் இருவரின் காதலையும் மையப்படுத்திதான் கதையை எடுத்திருப்பார் போலிருக்கிறது. பின்பு இடைச்செருகலாக வேலு பிரபாகரனும் நடித்திருக்கணும். தாமரை இல்லை தண்ணீர் போல தனித்தனியாக ஒட்டாமல் இருக்கிறது இவ்விரு கதைகளும். அதெல்லாமா முக்கியம்? வாங்குன காசுக்கு மேலே காட்றாங்கப்பா... என்ற காமெண்ட்தானே!

ஷெர்லிதாசின் மற்றவைகளை விட அந்த கண்கள் மிரட்டல். துணியை பற்றி கவலைப்படாத துணிச்சல்காரியாக இருக்கிறார். தமிழ்சினிமா வரலாற்றிலேயே... என்று எவராவது எழுத முன் வந்தால், அதில் கட்டாயம் ஷெர்லி இருப்பார். இவர் முன்னாள் எம்எல்ஏ பையனை காதலித்துவிட்டு அநியாயமாக செத்துப் போவது பரிதாபம். இன்னொரு விருந்து, வாத்தியார் -வேலைக்காரி இடையேயான காதல். ஒரு வாத்தியார் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார் இவர். வேலைக்காரியை மடக்க இவர் போடும் தேள் கடி திட்டம், தேக்கடிக்கு விசிட் அடித்த மாதிரி அத்தனை கூல்!

கோவாவில் நின்று கொண்டு, \"அங்க பாருங்க. அந்த பெண்கள் எல்லாம் திறந்து போட்டுட்டு நிக்கிறாங்க. பக்கத்திலே இருக்கிற ஆண்கள் எதைப் பற்றியாவது கவலைப்படுறாங்களா? அவங்க பாட்டுக்கு விளையாடிட்டு இருக்காங்க பாருங்க\" என்று வேலு பிரபாகரன் வசனம் பேசுகிற புண்ணியத்தில் வெள்ளைக்காரிங்க மேலேயும் கேமிரா மேய்ந்திருக்கிறது.

ஆண்களை போலவே பெண்களும் அரை நிர்வாண கோலத்தில் அலையணும் என்கிற வேலுபிரபாகரனின் கொள்கை திகைக்க வைக்கிறது. சே, இப்படியா ஆபாசமா திரியுறது? என்று சில போட்டோக்களை போட்டு அவற்றை கண்டிப்பது போல வியாபாரம் செய்யும் சஞ்சிகை தந்திரங்களில் ஒன்றுதான் இதுவும்.

நாலே நாலு கேள்வி கேட்பதற்குள் வேலுபிரபாகரன் மேல் காதல் வயப்படும் அந்த நிருபியும், அவருக்கான பிரபாகரனின் பதிலும் தியேட்டரில் பெருஞ்சிரிப்பை வரவழைக்கிறது.

வேதா செல்வத்தின் ஒளிப்பதிவில் நிரம்ப \'ஏ\'க்கம். அக்கம் பக்கம் பார்க்காமல் இளையராஜா அவரது வேலையை அசத்தலாக செய்து முடித்திருக்கிறார்.

வேலுபிரபாகரனின் காதல் \'சதை!\'

குப்பையை அள்ளுவது நீயா, நானா போட்டியில்

குப்பை அள்ளுவது நீயா? நானா? போட்டியில் தீர்வு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அள்ள பொறியியல் பிரிவுக்கு சில வார்டுகள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன.
சென்னையில் மாநகராட்சி குப்பைகளை அகற்ற பொறியியல் பிரிவில் தனி பிரிவு (திடக்கழிவு மேலாண்மை) உள்ளது. இதை வைத்து குப்பைகளை பொறியியல் பிரிவு அள்ள வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. நடைமுறையில் இது மற்ற மாநகராட்சிகளில் அமல்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் குப்பைகளை அள்ளுவது நீயா? நானா? என சென்ற மாதம் மதுரை மாநகராட்சியில் சர்ச்சை ஏற்பட்டது. ""குப்பைகளை பொறியியல் பிரிவு தான் அள்ள வேண்டும். இனிமேல் நாங்கள் அள்ள மாட்டோம்"" என சுகாதார ஆய்வாளர்கள் அறிவித்தனர்.
""எங்களுக்கு ஏற்கனவே வேலைப்பளு அதிகம். குப்பையை எப்படி அள்ளுவது?'" என பொறியியல் பிரிவினர் பதில் கேள்வி எழுப்பினர். ""எப்போதோ வெளிவந்த அரசாணையை வைத்துக் கொண்டு பேசக் கூடாது. குப்பைகளை சுகாதார பிரிவினர் தான் அள்ள வேண்டும்'" என கமிஷனர் செபாஸ்டின் அறிவித்தார்.
இதுவரை ஒரு சுகாதார ஆய்வாளர் மூன்று அல்லது நான்கு வார்டுகளை கவனித்து வந்தார். வேலைப்பளு அதிகம் இருந்தது. இந்த சர்ச்சைக்கு முடிவு காணும் விதத்தில் சில வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சில வார்டுகளில் குப்பைகளை அள்ளும் பொறுப்பு பொறியியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள்:

வடக்கு மண்டலம்:
சுகாதார ஆய்வாளர் வார்டு எண்
1.ஜேம்ஸ்ஜான் பெர்க்மான்ஸ்  - 1, 21
2.ரெகுநாதன்  - 18, 20
3.சண்முகநாதன்  - 15, 14, 17
4.சிவசுப்பிரமணியன்  - 11, 12, 13
5.முத்துராயர்  - 3, 5
6.சரவணன்  - 6, 7, 8, 16
7.சேதுராம்  - 9,10, ஜி.எச்.,
8.இளங்கோ  - 2, 19
9.சுரேந்திரன்  -4,  பிறப்பு/இறப்பு பதிவு
தெற்கு மண்டலம்:
10.ஜெகதீசன்  - 32, 33, 34
11.அர்ச்சுணன்  - 38, 39, 43
12.ராஜா  - 35, 36, 37
13.ராஜ்கண்ணன்  - 60, 61
14.கோபால்  - 41, 63, 64, 65
15.மனோகரன்  - 42, 62
16.ராமலிங்கம்  - 31, 40
கிழக்கு மண்டலம்:
17.முத்துச்சாமி  - 44, 45
18.ரத்தினகுமார்  - 48
19.சந்திரன்  - 46, 56, 57
20.தாமஸ் பாஸ்கர லீலன்  - 47, 49
21.வெங்கடசாமி  - 50, 51, 54
22.முரளிதரன்  - 52, 53, 55
23.ஆறுமுகம்  - 58, 59
மேற்கு மண்டலம்:
24.தங்கப்பாண்டியன்  - 22, 23
25.விஜயகுமார்  - 24, 26, 27
26.முருகன்  - 29, 30
27.சந்திரமோகன்  - 28
28.வீரன்  - 66, 67, 68
29.ராமகிருஷ்ணன்  - 69, 70
30.ரமேஷ்  - 71, 71
31. அப்பாஸ் அலி  - 25
32.நாகராஜன்  -தலைமையிட பிறப்பு/இறப்பு பதிவாளர்
இளநிலை பொறியாளர்/வார்டுகள்
33.பாலையா  - 15
34.தியாகராஜன்  - 13
35.சந்தானம்  - 8
36.சோனை  - 10
37.ஆறுமுகம்  - 24
38.துர்காதேவி  - 34
39.சுரேஷ்குமார்  - 43
40.ஆர்.முருகன்  - 36
41.அருள் சகாய சேவியர்  - 41
42.மயிலேறிநாதன்  - 65
43.பி.மணி  - 50
44.மல்லிகா  - 52
45.முனீர் அகமது  - 56
46.பாபு  - 68
""தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்களும், மற்ற வார்டுகளில் பொறியியல் பிரிவினரும் திடக்கழிவு மேலாண்மையை கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது'" என மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை அள்ளப்படவில்லை என்றால் பொதுமக்கள் இவர்களை அணுகலாம்.

அரசியலில் கலக்க நடிகர் விஜய் ஆசை



நடிகர் விஜய் பேச்சு: சமூக சிந்தனை, அக்கறைகளை வளர்ப்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. எனக்கும் அரசியலில் கலக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான அஸ்திவாரம் தான், "மக்கள் இயக்கம்!'

பள்ளிக்கு வந்தால் தினம் ஒரு ரூபாய் 'பாக்கெட் மணி!

பள்ளிக்கு வந்தால் தினமும் ஒரு ரூபாய் "பாக்கெட் மணி' கிடைக்கும். ஆம், தலித் குழந்தைகளை படிக்க வைக்க பீகாரில் உள்ள நிதிஷ்குமார் அரசு இப்படி ஒரு நூதன திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை எட்டு கோடியே 30 லட்சம்; இதில், 15 சதவீதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏழைக்குழந்தைகள் 25 லட்சம் பேர், பள்ளி பக்கமே தலைவைத்துக்கூட படுக்காமல் இருந்தனர். அவர்களுக்கு இலவச கல்வி தான் என்றாலும், படிக்க வைக்க தேவையான மற்ற செலவுகளை ஈடுகட்ட ஏழை பெற்றோர்களிடம் பணம் இல்லை. கூலி வேலைக்கு அனுப்பவே விரும்பினர். மூன்றாண்டுக்கு முன், பீகார் ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த முதல்வர் நிதிஷ்குமார், ஏழை குழந்தைகள் படிக்க திட்டம் வகுத்தார். கிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலையை போக்கினார். அதையடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகளை ஊக்குவிக்க ஏற்பாடு செய்தார்.



இப்படி 15 லட்சம் ஏழைக் குழந்தைகளை பள்ளிப்படிப்பில் ஈடுபடுத்தியதாக பீகார் அரசு சொல்கிறது. இப்போது 10 லட்சம் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றரை லட்சம் குழந்தைகளை படிக்க வைக்க புதுமையான சலுகை திட்டத்தை தீட்டினார். அது தான், ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் "பாக்கெட் மணி' அளிக்கும் திட்டம். விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும்."ஒரு ரூபாய் என்பது, ஒரு சிறிய தொகை தான், இதில் ஒன்று அல்லது இரண்டு மிட்டாய்கள் தான் வாங்க முடியும், எனினும் குழந்தைகளை இத்திட்டம் பள்ளிகளுக்கு கண்டிப்பாக ஈர்க்கும்' என்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜித்தன் ராம் மான்ஜி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் தலித் மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடும்ப செலவை சமாளிக்க குழந்தைகளை கூலிவேலைக்கு அனுப்புகின்றனர். எலித்தொல்லையை ஒடுக்க சலுகை திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், எலி பிடிக்கவும் குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். நிறைய தலித் குடும்பங்கள் தங்கள் பசியை எலியின் மூலமே போக்குகின்றனர். "எலி பிடித்த தலித் குழந்தைகளை, எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்து, "மவுஸ்'பிடிக்க வைப்போம்' என்று அமைச்சர் மான்ஜி சிரித்தபடியே கூறினார்.

இனி எஸ்.எம்.எஸ்., மூலம் ஆரோக்கிய குறிப்புகள்

"வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், மொபைல் போன் உபயோகிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யுனிவர்செல், "மெடி அலர்ட்' எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது' என, யுனிவர் செல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரமேஷ் பரத் கூறினார். மொபைல் போன் மூலம் ஆரோக்கிய குறிப்புகளை அனுப்பும் சேவையான, "மெடி அலர்ட்' சேவை துவக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

ரமேஷ் பரத் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும், மொபைல் போன் உபயோகிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், "மெடி அலர்ட்' எனும் புதிய சேவையை யுனிவர் செல் தொடங்கி உள்ளது. இதன் மூலம் மருத்துவ பரிசோதனை, உடற்பயிற்சி, நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் போன்றவை எஸ்.எம்.எஸ்., மூலம் அவ்வப்போது நினைவுபடுத்தப்படும். வயதான பெற்றோர் மற்றும் சிறு குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். ஒரு நாளுக்கு 55 காசு வீதம் ஆறு மாதத்திற்கு 99 ரூபாய் கட்டணமாக பெறப்படும்.

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் இவை மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள் ளிட்ட தென் மாநிலங்களில் யுனிவர்செல் தனி முத்திரை பதித்துள்ளது. அதே போல் விரைவில் இந்தியா முழுவதும் தனது சேவையை விரிவாக்கும். தற்போது, மாதத்திற்கு ஒரு லட்சம் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த புதிய சேவையின் மூலம் விற்பனை மேலும் உயரும். இவ்வாறு ரமேஷ் பரத் கூறினார். இந்நிகழ்ச்சியில் பர்பிள்டீல் தலைமை அதிகாரி நாராயண ராம், யுனிவர்செல் நிறுவனத்தின் முதன்மை தலைமை அலுவலர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல்,பழநி வனப்பகுதியில் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிவீடுகள்


கொடைக்கானல்,பழநி வனப்பகுதியில் ஆக்கிரமிப்பாக உள்ள தனி வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் நக்சலைட்களை தேடும் வேட்டையில் டி.ஐ.ஜி.,சந்தீப் மித்தல் தலைமையிலான போலீசார், வனத்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள பீதியை தவிர்க்கவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுகிறது.இது தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
சோதனை நடத்தும் பகுதியில் ஆக்கிரமிப்பாக ஆங்காங்கே குடிசைகள் உள்ளது. ஆடு மேய்ப்பவர்கள் தங்குவதற்காகவும், பல கி.மீ., நடந்து செல்லும் போது ஓய்வெடுக்கவும் இத்தகைய குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருந்தபோதும் அடையாளம் தெரியாத நபர்கள் இங்கு தங்கி வேட்டையாடுவது தெரிய வந்துள்ளது. இதற்கு உதாரணம் தான் பொருந்தலாறு அருகே உள்ள தனிக்குடிசை பகுதியில் நடந்த துப்பாக்கி வெடிவிபத்து.

ஆள் நடமாட்டம் இல்லாத வனத்துறைபகுதி துவங்கும் இடத்தில் பல ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த போஸ் குடிசை அமைத்துள்ளார். மின்வசதி, குடிநீர் வசதியில்லாமல் இங்கு தங்கியிருந்தவர் வனத்துறை, போலீசார் கண்களில் படாதது ஆச்சரியமே. கள்ளத்துப்பாக்கியை சர்வ சாதாரணமாக பயன்படுத்தியதை இப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத வனம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தனியாக ஆக்கிரமிப்பாக உள்ள குடிசைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

நாகேஷ், விஜயா, பக்கோடா காதர் காமெடி:

ஏ.சுபைதா, விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: திரைப்படம் ஒன்றில் கிளைமாக்ஸ் சீனில் ஒருதலைக் காதலராக இருந்த நடிகர் நாகேஷிடம், தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லி அழும் நடிகை கே.ஆர்.விஜயாவை, சமாதானப்படுத்தும் நடிகர் நாகேஷ், கைதட்டி தன் உதவியாளரை அழைப்பார். உதவியாளராக நடித்த பக்கோடா காதர், ஒரு கிளாசில் ஜூஸ் எடுத்து வந்து நீட்டுவார். அதைப் பார்த்த நாகேஷ், "ஜூஸ் கொடுப்பவன் எப்படி இருக்கிறான்; குடிக்கிற நான் எப்படி இருக்கிறேன் பார்' என்று, தன் ஒல்லியான உடம்பை, ஒடிந்து போகிற அளவுக்கு வளைத்துக் காட்டி, கதாநாயகி கே.ஆர்.விஜயாவை கலகலவென சிரிக்க வைப்பார். மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக சட்டசபைக்குச் சென்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கம், சம்பள உயர்வையும், தொகுதிநிதி உயர்வையும், இரண்டரை கிரவுண்டு வீட்டு மனையை ஒதுக்க, கோரிக்கை வைத்து இருப்பதைப் பார்த்த பொதுமக்கள், தங்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் நிலை, திரைப்படத்தில் வந்த பக்கோடா காதரைப் போன்று கொழு கொழுவென்று இருப்பதைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு ஒன்றும் செய்ய இயலாது. அதிலும், காங்கிரஸ் ஞானசேகரன் எம்.எல்.ஏ., வீட்டு மனை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, கடந்த மூன்றரை ஆண்டாக அவ்வப்போது, தலைபோகிற பிரச்னையைப் போல சட்டசபையில் எழுப்பி, அதில் வெற்றியும் கண்டுள்ளார். தாராள தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கும், கோரிக்கைகளை ஏற்று, வாரி வாரி வழங்கும் கடைஏழு வள்ளலைப் போன்றாகி விட்டார். ஆனால், பொதுமக்களின் பாடுதான் திண்டாட்டம். இன்னமும் கிராமங்களில் வாழும் அடித்தட்டு மக்கள் படும் வாழ்க்கைப்பாடு சொல்லி மாளாது. பாதிக்கும் அதிகமானவர்களுக்கு, இரண்டு வேளை தான் உணவு; அதுவும் வயிறாரக் கிடைப்பதில்லை. சம்பள உயர்வு கேட்டு சென்னைப் பட்டினத்தில் ஊர்வலம் போகும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மடிப்புக் கலையாத உடையோடும், தாங்க முடியாத நகைகளை அணிந்து, கோஷம் எழுப்பி, ஒய்யார ஊர்கோலம் போவதை தொலைக்காட்சியில் பார்க்கையில், பாமர பொதுமக்களின் வயிறு பற்றி எரிகிறது. காலை ஆறு மணிக்கெல்லாம் விவசாயக் கூலிகளாய் செல்லும் பெண்களுக்கு, கிழியாத உள்பாவாடை கட்டக்கூட வழியில்லை. கடுமையான விலை ஏற்றத்தால், நல்ல சோறு என்பது, அமாவாசை விரதத்தின் போதுதான். காமராஜர் வளர்த்த காங்கிரஸ் பேரியக்கத்தில் இருக்கும் ஞானசேகரன் போன்றவர்கள், இதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். வறுமையில் வாடி வதங்கும் ஏழைகளின் வாழ்க்கை நிலை உயர, சட்டசபையில் குரல் எழுப்பட்டும். எதிர்கால ஏழைச் சமுதாயம், என்றும் நன்றியோடு இவர்களைக் கையெடுத்துக் கும்பிடும்.

மொபைல் போனை தொடர்ந்து பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகளில் காது செவிடாகும் அபாயம்


புதுடில்லி : மொபைல் போனில் தொடர்ந்து பேசுவதால் இரண்டு ஆண்டுகளில் செவிட்டு தன்மை ஏற்படுகிறது, என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இது குறித்து, அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: மொபைல்போனில் தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பேசினால் இரண்டு ஆண்டுகளில் செவிட்டு தன்மை ஏற்படுகிறது. எனவே, ஒரு மணி நேரத்துக்கு மேல் மொபைல் போனில் தொடர்ந்து பேசாதீர்கள். அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்தும் சிலருக்கு காதில் மொபைல் போன் மணி ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. முதுகலை மருத்துவ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்பாட்டினால் வேறென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து ஆராயும் படி மருத்துவ கவுன்சிலிடம் கேட்டுள்ளோம். இதையடுத்து, அவர்கள் மொபைல் போன் பாதிப்பு குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த டாக்டர் வி.எம்.கட்டோச் குறிப்பிடுகையில், "மொபைல் போனிலிருந்து வெளிவரும் ரேடியோ அலைகளினால் மிருகங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்ததில் அவற்றின் மரபணு பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அவற்றின் விந்து உற்பத்தி திறனும் கடுமையாக பாதித்தது. "எனவே, இந்த பாதிப்பு மனிதனுக்கும் ஏற்படுமா? என்பது குறித்து இனி ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம். பெண்களுக்கு மாத விலக்கு சுழற்சி பாதிக்கப்படுமா? ஆண்களுக்கு ஆண்மை தன்மையில் கோளாறு ஏற்படுமா, மன அழுத்தம், தூக்கமின்மை ஏற்படுமா என்ற கோணத்திலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது' என்றார்.

மூணாறு அருகே பூத்து குலுங்கும் குறிஞ்சி பூக்கள்


மூணாறு: இடுக்கி மாவட்டம் பூப்பாறை பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு ராஜமலை, மறையூர், வட்டவடை போன்ற பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் காலம் தவறாமல் பூத்து வருகின்றன.

கடந்த 2006ல் மூணாறில் குறிஞ்சி பூக்கள் பூத்தபோது வனத்துறையினர் சார்பில் குறிஞ்சி விழா நடத்தப்பட்டது. அப்போது, ராஜமலையில் பூத்துக்குலுங்கிய நீலக்குறிஞ்சி பூக்களை ஒரு மாதத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், தற்போது பூப்பாறை அருகே கழுதைகுளம் மேட்டில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன. மூணாறு - குமுளி ரோட்டில் பூப்பாறையில் இருந்து 9 கி.மீ., தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது.

பிரியங்கா சோப்ராவின் லவ் லிஸ்ட்  



என்னை எனக்காக நேசிப்பவர் தான் எனது கணவராக முடியும் என பாலிவுட் புயல் பிரியங்கா சோப்ரா தனது வருங்கால கணவர் குறித்து கூறியுள்ளார். எனக்கு கணவராக வருபவருக்கு உண்மையான அன்பு செலுத்த தெரிந்தால் மட்டும் போதும். நான் முக்கியமானவள் என என்னை உணரச்செய்ய வேண்டும். அவரோடு இருக்கும் போது எனக்கு காற்றில் மிதப்பது போல் தோன்ற வேண்டும் . அன்பு... அன்பு... அன்பு இதை மட்டுமே காட்ட தெரிந்தவரே எனது கணவராக வர முடியும் என லவ் லிஸ்ட் கொடுத்துள்ளார் பிரியங்கா.

அண்மையில் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடிய குஷியில் இருக்கும் பிரியங்கா அளித்துள்ள பேட்டியில், பாலிவுட் இன்டஸ்ட்ரீயில் தன் பயணம் குறித்து சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன்பு, தான் ஒரு மோசமான நடிகையாக இருந்ததாகவும், குடும்பத்தாரின் ஆதரவும், தனது கடின உழைப்புமே தன்னை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளதாகவும் ‌பெருமிதம் பொங்க கூறியுள்ளார். ஆனால் இந்த 6 ஆண்டுகளில் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். இன்னமும் எனது பசி தீரவில்லை. தண்ணீரில் போட்ட ஸ்பாஞ் போல எப்போதும் பாடம் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். கிசுகிசுக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, கிசுகிசுக்களால் தான் நிச்சயமாக வருந்துவதாகவும், அ‌தே சமயத்தில் அவற்றால் தனது உத்வேகம் பாதிக்கப்படாது எனவும் ஸ்ட்ராங்காக கூறுகிறார் பிரியங்கா.

ஜோதா அக்பர் படத்துக்கு 7 விருது  

சீனாவில் உள்ள மகாவு நகரில் 10-வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஜோதா அக்பர் படத்துக்கு 7 விருது கிடைத்து உள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடகர், சிறந்த பாடலாசியர் என 7 விருது அந்த படத்துக்கு கிடைத்து உள்ளது. சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோசன் (ஜோதா அக்பர்) தேர்வு பெற்றார். சிறந்த நடிகையாக பிரியங்கா சோப்ரா (பேஷன்) தேர்வு பெற்றார். “ஜோதா அக்பர்” சிறந்த படமாக தேர்வு பெற்றது. சிறந்த டைரக்டருக்கான விருது அசுதோஸ் கவுரிகருக்கு (ஜோதா அக்பர்) கிடைத்தது.

இரட்டை ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருது கிடைத்தது. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை (ஜோதா அக்பர்) ஆகிய விருதுகள் கிடைத்தன. சிறந்த புதுமுக நடிகையாக அசின் (கஜினி) தேர்வு பெற்றார். சிறந்த பாடகருக்கான விருது ஜாவித் அக்தருக்கும், சிறந்த பாடகிக்கான விருது ஷிரேயா கோஷலுக்கும் (சிங்கிஸ்கிங்) கிடைத்தது. சிறந்த பாடலாசிரியராக ஜாவித் அக்தர் (ஜோதா அக்பர்) தேர்வு பெற்றார்.
 
நிகழ்சசியின்போது 10 ஆண்டின் சிறந்த விருதும் வழங்கப்பட்டது. இதில் சிறந்த படமாக லகான் தேர்வு பெற்றது. 10 ஆண்டின் சிறந்த நடிகராக ஷாருக்கான், நடிகையாக ஐஸ்வர்யாராய், டைரக்டராக ராகேஷ் ரோசன் தேர்வு பெற்றனர்.

ஜாக்சனின் மாஜி ஆலோசகரிடமிருந்து 27.50 கோடி ரூபாய் பணம் மீட்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பாதுகாப்பாகக் கொடுத்து வைத்திருந்த 27.50 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், சென்ற மாத இறுதியில் மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, 2002ம் ஆண்டு அவர் எழுதிய உயில் ஒன்று கிடைத்தது. இந்த உயில் செல்லுபடியாகுமா என்பதை கோர்ட் விரைவில் தீர்மானிக்க உள்ளது.இந்நிலையில், அந்த உயிலை செயல்படுத்துவதற்காக, ஜாக்சனால் நியமிக்கப்பட்ட ஜான் பிரான்கா மற்றும் ஜான் மெக்லெய்ன் என்ற இருவரை, ஜாக்சன் எஸ்டேட்டின் சிறப்பு நிர்வாகிகளாக, லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண கோர்ட் நீதிபதி மிட்செல் பெக்லாப் நியமித்துள்ளார்.இதற்கிடையில், மைக்கேல் ஜாக்சன் ஏராளமான கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவரின் முன்னாள் நிதி ஆலோசகர் ஒருவரிடமிருந்து 27.50 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக எஸ்டேட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரான்கா மற்றும் மெக்லெய்ன் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:நாங்கள் மைக்கேல் ஜாக்சனின் நிதி ஆலோசகர் ஒருவரிடமிருந்து, 27.50 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளோம். மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான எஸ்டேட்டின் மதிப்பு 2,500 கோடி ரூபாய். ஆனால், அவருக்கு இருக்கும் கடன் 2,000 கோடி ரூபாய் தான். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஜாக்சனின் எஸ்டேட் போன்றவை, கடனை அடைக்கத் தேவையானதை விட அதிகமாகவே உள்ளன. மைக்கேல் ஜாக்சனின் தாய் மற்றும் அவரது குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை குறிப்பிட்ட தொகையை வழங்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.ஆனால், அந்த மனுவில், மைக்கேல் ஜாக்சனின் பணத்தை வைத்திருந்த நிதி ஆலோசகர் யார், அவரிடமிருந்து எவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை.

வெங்காயத்தின் மூலம் மின்சாரம் தயாரிப்பு


லாஸ்ஏஞ்சல்ஸ் : வெங்காயத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும், என அமெரிக்க நிறுவனம் நிரூபித்துள்ளது.

கண்ணீரை வரவழைக்கக்கூடிய வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்லாது மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வெங்காயம் மின்சாரம் தயாரிக்கவும் உதவுவதாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "ஆக்ஸ்னார்டு' நிறுவனம் கண்டு பிடித் துள்ளது.

இதுகுறித்து, இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவன் கில் குறிப்பிடுகையில், " முதலில் வெங் காய தோல்களை மண்ணில் இட்டு உரமாக்கி அதிலிருந்து மின்சாரம் தயாரித்து வந்தோம். ஆனால், அந்த முறையில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. தற்போது, வெங்காயத்தை செடியில் இருந்து பறித்த உடனே, அரைத்து சாறு எடுத்து விடுகிறோம். இந்த சாற்றில் சர்க்கரை சத்து உள்ளதால் பாக்டீரியாக்களால் வேதி பொருளாக மாறுகிறது. இந்த வெங்காய சாற்றிலிருந்து மீதேன் வாயு உருவாகிறது. இதை 300 கிலோ வாட் பேட்டரியில் பயன்படுத்தினால் 460 வீடுகளுக்கு பயன்படுத்தும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இந்த முறையில் உருவாக்கப்பட்ட மின்சாரத்தினால், எங்கள் நிறுவனத்தின் 40 சதவீத தேவையை பூர்த்தி செய்து கொள்கிறோம்' என்றார்.

சிறுநீர் மூலம் கார் இயங்கும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

நியூயார்க் : சிறுநீர் மூலம் காரை இயக்கமுடியும், என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள், சிறுநீரிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்கி அதன் மூலம் காரை இயக்க முடியும், என சோதனை செய்துள்ளனர்.

இது குறித்து, இந்த பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஜெரார்டைன் போட் குறிப்பிடுகையில், "சிறுநீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் நிக்கல் எலெக்ரோடு வைத்து மின்சாரத்தை பாய்ச்சினால் அதிலிருந்து ஹைட்ரஜன் கிடைக்கிறது. இந்த முறையில் பேட்டரியை இயக்க முடியும். நாலரை லிட்டர் சிறுநீரை கொண்டு 144 கிலோ மீட்டர் வரை காரை இயக்க முடியும்' என்றார்.ஜார்ஜியா பல்கலைகழக பேராசிரியர் ஜான் ஸ்டிக்னி குறிப்பிடுகையில், "யூரியா மற்றும் சிறுநீரை கொண்டு வேறென்ன செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே, கால்நடை மற்றும் மனித கழிவுகள் விளை நிலங்களில் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் உள்ள அனைத்து கால்நடை மற்றும் மனித கழிவுகளை முழுவதுமாக பயன்படுத்தினாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இந்த கழிவுகளை கொண்டு எரிபொருள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு உபயோகப்படுத்தினால் மனித கழிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விடும்' என்றார்.

தீ வைத்தால் பற்றி எரியும் ஆப்பிள்


கோபிசெட்டிபாளையம்: புற்றுநோயை எளிதாக வரவழைக்கும் மெழுகு தடவிய ஆப்பிள் கோபி பகுதி பழக்கடைகளில் கன ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் அலட்சியமாக உள்ள கோபி நகராட்சி நிர்வாகம், மக்கள் நலன் காப்பதிலும் கும்பகர்ணனாக தூங்குகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரை, காஃபி தூள், தேயிலை, மிளகு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் நூதன முறையில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. உணவில் கலப்படம் செய்தால் சம்பந்தபட்டவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கும் சட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

சீஸன் காலங்களில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழம், அன்னாசி, மாதுளை மற்றும் வாழைப்பழங்களை பழுக்க வைக்க, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பைட் கற்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவ்வப்போது சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் திடீர் ஆய்வின்போது இவை பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். இதுபோன்ற ஆய்வு அடிக்கடி நடப்பதில்லை. அதிகாரிகளின் மெத்தனத்தால் உணவு பொருட்களில் கலப்படம் மற்றும் பழங்களை வேதியியல் பொருட்களை கொண்டு பழுக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்கிறது. சமீப காலமாக ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், பளபளப்பாக இருக்கவும் அவற்றின் மீது மெழுகு தடவி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

பல மாவட்டங்களில் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, மெழுகு தடவப்பட்ட ஆப்பிள் பழங்களை கைப்பற்றினர். கோபி நகராட்சி பகுதியிலும் சென்ற வாரம் மெழுகு தடவிய ஆப்பிள் பழங்களை சுகாதார அலுவலர் ஆறுமுகம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கைப்பற்றினர். ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோபி - சத்தி சாலையில் உள்ள பெரிய நவீன பழக்கடைகள், பஸ் ஸ்டாண்டு மற்றும் மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் புற்றுநோயை வரவழைக்கும் மெழுகு தடவிய ஆப்பிள் பழங்கள் வெகு ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் பழத்தின் மேல் பகுதியை சுரண்டினால் வெள்ளை நிறத்தில் மெழுகு தடவப்பட்டுள்ளது நன்றாக தெரிகிறது. பழத்தை தீயிட்டு கொளுத்தினால் நன்றாக பற்றி எரிகிறது. இத்தகைய ஆப்பிள் பழங்களை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய், சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்று கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.கோபி நகராட்சி பகுதிகளில் சாலைப்பணி, புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளில் போதிய கவனம் செலுத்தாமல் ஆமை வேகத்தில் செயல்படும் நகராட்சி நிர்வாகம், மக்கள் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் உணவுப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கவும் தயங்கி வருகிறது. 

கழுதை மீது ஏறி 'காமெடி'

உத்தமபாளையம்: கம்பம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கழுதை மீது ஏறி வந்தவர், மூன்று நிமிடம் தாமதமானதால் மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார். தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாவட்ட பொதுச்செயலர் சேகர்ஜீ(44). இவர் கம்பம் தொகுதியில் மனு தாக்கல் செய்ய நேற்று உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு கழுதை மேல் ஏறி வந்தார். தேர்தல் அலுவலர், ""மனு தாக்கல் நேரம் முடிந்துவிட்டது'' என்று கூறினார். கழுதையை மினிடோர் வாகனத்தில் ஏற்றி அனுப்பி விட்டு இவர் பைக்கில் வீடு திரும்பினார்.

வாதாட மட்டுமல்ல; விளையாடவும் தெரியும் : வக்கீல்கள் ஆடும் வாலிபால் போட்டி

கோவை: வக்கீல்கள் மட்டும் பங்கேற்கும் மாநில அளவிலான, "பார் அசோசியேஷன் டிராபி' வாலிபால் போட்டி, ஆகஸ்ட் 15ல் கோவையில் நடக்கிறது.கோவை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில், முதன்முதலாக வக்கீல்கள் பங்கேற்கும் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடக்கிறது. போட்டிகளின் துவக்க விழா, ஆக., 15ல், கோர்ட் வளாகத்தில் உள்ள வாலிபால் விளையாட்டு மையத்தில் நடக்கிறது. மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம் தலைமை வகித்து, போட் டியை துவக்கி வைக்கிறார்.ஆக., 16ல், அரையிறுதி போட்டிகள் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடக்கிறது. இறுதி போட்டி மாலை 3.00 மணிக்கு நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கும் விழா, மாலை 5.00 மணிக்கு நடக்கிறது.

வெற்றி பெறும் அணி மற்றும் வீரர்களுக்கு, அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட நீதிபதிகள் சொக்கலிங்கம்(கோவை), முருகன்(நீலகிரி), கலெக்டர் உமாநாத், எம்.பி., நடராஜன் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.வெற்றி பெறும் அணிக்கு சுழல் கோப்பை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது. அடுத்து வரும் அணிக்கு கேடயத்துடன் 10 ஆயிரம் ரூபாயும், மூன் றாவது இடம் பிடிக்கும் அணிக்கு கேடயம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இப் போட்டியை கோவை வக்கீல்கள் வாலிபால் கிளப் நடத்துகிறது.இத்தகவலை கோவை வக்கீல்கள் சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் மாதவன் ஆகியோர் தெரிவித்தனர்.

4 வயது சிறுவன் வேகமாக கார் ஓட்டலாமா? அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை:சாதனை என்கிற பெயரில் ஆபத்தான செயல்களை மாணவர்களிடம் ஊக்குவிக்கக் கூடாது என அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை புதுபெருங்களத்தூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:

கடந்த 15ம் தேதி வெளியான "தினமலர்' நாளிதழில், நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் அதிவேகத்தில் காரை ஓட்டியதாக செய்தி வெளியாகி உள்ளது. வத்தலகுண்டு அருகில் உள்ள முத்தாளபுரத்தைச் சேர்ந்த மாணவன் நவீன்குமார். ஜெயசீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.பள்ளி வளாகத்தில் இண்டிகா, ஸ்கார்பியோ, டவேரா மாடல் கார்களை, மாணவர்கள் மற்றும் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் மத்தியில் ஓட்டிக் காண்பித்துள்ளான்.

100ல் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை வத்தலகுண்டு ரோட்டில் காரை அதிவேகமான ஓட்டிச் சென்றுள்ளான். "கார் பந்தயம் பார்த்து, அதிவேகத்தில் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பந்தயத்தில் கலந்துகொள்வேன்' என நவீன்குமார் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.ஒருவருக்கு 18 வயது நிரம்பிய பிறகு தான், ஓட்டுனர் உரிமத்தை அரசு வழங்குகிறது.

எனவே, காரை நவீன்குமார் ஓட்டியது சட்டத்திற்கு எதிரானது. முறையான உரிமம் பெறாமல், ஒரு சிறுவன் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளான். விபத்தின் விளைவுகள், போக்குவரத்து விதிகள் அவனுக்கு தெரியாது.ஓட்டுனர் உரிமம் கோரி ஒருவர் விண்ணப்பித்தால், முதலில் பழகுனர் உரிமம் தான் வழங்கப்படும். அதன்பின் தான், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயதுக்கு குறைவானவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற தகுதி இல்லை. அவர்கள் சாலைகளில் வாகனத்தை ஓட்டக் கூடாது.பள்ளி அதிகாரிகளின் செயல் சட்டவிதிகளை மீறியதாக உள்ளது.

மேலும், 18 வயதுக்கு குறைவான மாணவர்களை காரை ஓட்ட தூண்டுவதாக உள்ளது. போக்குவரத்து விதிகள் தெரியாமல் காரை ஓட்டுவதால், மற்றவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படக்கூடும். இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நிறுத்தப்பட வேண்டும்.எனவே, தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி தொடர்பாக கல்வித்துறை செயலர், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் விசாரணை நடத்தி, சட்டத்தை மீறியிருந்தால் ஜெயசீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரை கண்டிக்க வேண்டும்.

சாதனை என்கிற பெயரில் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி கல்வித் துறை மற்றும் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

ஹாலிவுட் தரத்தில் யோகி : அமீர் பெருமிதம்


சுப்பிரமணியசிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் யோகி படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக டைரக்டரும், நடிகருமான அமீர் பெருமிதம் பொங்க கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி:

சென்னையில் உள்ள குடிசை பகுதிதான் யோகி படத்தின் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி இளைஞனின் உணர்வுகள்தான் கதை. சென்னைவாசிகள் பற்றி இதற்கு முன் சில படங்கள் வந்திருந்தாலும் யோகியில் பார்க்கப்போகும் களம் புதுசாக இருக்கும். எட்டுக்கு எட்டு அறையில் அவர்கள் நடத்தும் வாழ்க்கையே தனி படமாக எடுக்கும் அளவுக்கு சுவாரஸ்யம் இருக்கிறது. பசி எடுக்குதுன்னு ‌தெரிஞ்சா சூழ்நிலை, சுற்றியிருக்கும் மனிதர்கள் என எதையும் யோசிக்காமல் அடித்து, பிடுங்கி சாப்பிடும் கேரக்டர்தான் யோகி.

இயக்குனரா கேமராவுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த எனக்கு கேமராவுக்கு முன்னாடி நிக்குற அனுபவம் புதுசாத்தான் தெரிந்தது. எல்லாத்தையும் வேலை வாங்கியபோது நடிகர்களின் சிரமங்கள் அவ்வளவா தெரியாது. இப்போ நானே களத்தில் நின்றபோதுதான் அதில் உள்ள கஷ்டங்கள் புரிந்தது.

யோகிக்காக உடல் ரீதியா நிறைய சிரமங்களை எடுத்துருக்கேன். மூணு வேளையும் அசைவம் சாப்பிடுற ஆளு நான். யோகிக்காக தினமும் பச்சை காய்கறி, அவித்த முட்டையில் வெள்ளை கரு மட்டும்னு என்னோட மெனு பத்தியமாகி, மூலிகை வைத்தியர் வீட்டுல இருக்கிறமாதிரி பீலிங் வந்திடுச்சு. ஜிம்முக்கு போய் உடலை இறுக்கிக் கிட்டேன். ஹாலிவுட் தரத்துக்கு சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளோம். இரண்டு சண்டை காட்சிகளை மட்டும் படமாக்குறதுக்கு 51 நாட்கள் ஆனது. டூப் போடாமல் நடித்ததால் 2 தடவை அடி பட்டிடுச்சு.

படத்துல இன்னொரு ஹைலைட்டா யுவனோட இசையை சொல்லலாம். என்னுடை படங்களுக்கு இசையமைக்கும்போது மட்டும் மாடர்ன் இளையராஜாவா மாறிடுவார் யுவன். யோகி படத்துல மொத்தம் நாலு பாட்டு. அதில் ஒன்று பிரமோஷன் பாட்டு. நானும் ஒரு பாட்டு பாடிருக்கேன். யோகி படம் வந்த பிறகு டைரக்டர் சுப்பிரமணிய சிவா இன்னொரு கோணத்தில் தெரிவார். அந்த அளவுக்கு யோகி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.

இவ்வாறு அமீர் கூறினார்.

படத்துல மெசேஜ் ஏதும் சொல்றீங்களா? என்று அமீரிடம் கேட்டதற்கு, மெசேஜ் சொல்றதுக்காக சினிமா எடுக்கக் கூடாது. இது ஒரு பொழுதுபோக்கு அம்சம். இதில் அட்வைஸ் சொல்லக்கூடாது, என்று மினி லெட்ஜரே எடுத்து விட்டார்.

அமெரிக்க நிறுவனம் அப்துல் கலாமை சோதனை செய்தது மாபெரும் குற்றம்: எம்.பி.,க்கள் கொதிப்பு; நடவடிக்கை எடுக்க அரசு உறுதி

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்ற போது, அவரை டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், "கான்டினென்டல் ஏர்லைன்ஸ்' அதிகாரிகள் சோதனை நடத்திய விவகாரம் பார்லிமென்டில் நேற்று எதிரொலித்தது. "கலாமை பாதுகாப்பு பரிசோதனைக்கு ஆட்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மிக முக்கியமான வி.ஐ.பி., பட்டியலில் உள்ளவர்கள். அதனால், அவர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களின் உடலை தடவி சோதனை நடத்தக் கூடாது. இதுவே விதிமுறை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த ஏப்ரல் 24ம் தேதி, "கான்டினென்டல் ஏர்லைன்ஸ்' விமானத்தில் அமெரிக்காவின் நீவார்க் நகருக்கு பயணம் மேற் கொண் டார். அப்போது, விமானத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் உடலைத் தடவி பரிசோதனை மேற் கொண்டனர். அத்துடன் அவரின் ஷூவையும் கழற்றி காண்பிக்கக் கூறினர். அப்துல் கலாம் இதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, கலாமின் மொபைல் போன், கையேடு மற்றும் கைப்பை போன்றவையும் ஒரு கூடையில் போடப் பட்டு எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டன. "முன் னாள் ஜனாதிபதியை பாதுகாப்பு பரிசோதனைக்கு ஆட்படுத்தக் கூடாது' என்ற விதிமுறையை மீறி, இந்த சோதனை நடத்தப் பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் ராஜ்யசபாவில் நேற்று எழுப்பப்பட்டது. கலாமிடம் சோதனை நடத்தியதற்கு எம்.பி.,க்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத் திய விவகாரம் மன்னிக்க முடியாத குற்றம். அந்தத் தவறை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரச்னை தொடர்பாக, நான் தனிப்பட்ட முறையில் கலாமை சந்தித்து வருத்தம் தெரிவிப்பேன். அவரிடம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விவரிப்பேன். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு, எந்த தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்படவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தான் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளனர். நாட்டின் உயரிய தலைவர்களில் ஒருவரான கலாமை, பரிசோதனை செய்தது தவறானது. தேசிய தலைவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டிக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டிக் குறிப்புகளை மீறி செயல்பட்டவர்கள் மீது, சிவில் விமானப் போக்குவரத்து சட்டம் விதி எண் 11ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், அன் னிய நாட்டு விமான நிறுவனமும் சம்பந்தப்பட்டுள்ளதால், வெளியுறவு அமைச்சர் கிருஷ் ணாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதை அவர் உறுதி செய்வார். இவ்வாறு அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.

ஆனால், ராஜ்யசபாவில் காங்கிரஸ் உட்பட எல்லா எம்.பி.,க் களும் இவ்விஷயத்தில் கொதித்துப் போய் பேசியதாவது:

ஜெயந்தி நடராஜன்-காங்: சோதனையை அனுமதித்த அதிகாரியை அந்த விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அதுவரை அந்த நிறுவன சர்வீசை இந்தியாவில் நிறுத்த வேண்டும்.

சிவா - தி.மு.க: இளைஞர்களின் நாயகன் கலாம். அவரை அவமதித்த விமானத்தை இங் கே இயக்க அனுமதிக்கக் கூடாது.

அருண் ஜெட்லி-பா.ஜ: வெளிநாட்டுத் தலைவர் இங்கே வந் தால், அவரை விமானம் வரை சென்று அழைத்து வர நடைமுறைகள் உள்ளன. ஆனால், நம் நாட்டைச் சேர்ந்தவர் என்றால் சோதனை நடக்கிறது; இது கொடுமையானது. கெட்ட நோக்கத்துடன் செயல்படுத்தப் பட்டது. என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை, இதை அனுமதிக்கக் கூடாது.

"யாருக்கும் விதிவிலக்கு கிடையாது': "வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி.,களுக்கு என, விசேஷ பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் இல்லை. மற்றவர்களை பரிசோதிப்பது போன்று தான் கலாமையும் நாங்கள் பரிசோதித்தோம்' என, கான்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த ஏர்லைன்ஸ் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கு விமானங்களை இயக்கும் மற்ற நிறுவனங்கள் பின்பற்றும் விதிமுறைகளைத் தான், கான்டினென்டல் நிறுவனமும் பின்பற்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமே எங்களின் இந்த சேவையில் திருப்தி அடைந்திருப்பார் என்று நம்புகிறோம். அவரை எங்களின் வாடிக்கையாளராக கொண்டிருப்பதில் பெருமைப்படுகிறோம். எங்கள் விமானத்தில் பறந்ததற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய பரிசோதனை இவர்களுக்கு இல்லை...: விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனை செய்வதிலிருந்து விலக்கு பெற்றுள்ளவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் உள்ளது. இதைமீறி, டில்லியில் அமெரிக்க விமான நிறுவன அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்தது, மத்திய சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணானது. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் தலாய்லாமா ஆகிய இருவருக்கும் விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே, அரசு பதவி ஏதுமில்லாத, அதே சமயம் பரிசோதனை விலக்கு பெற்றுள்ள நபர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. விமான நிலைய விதிமுறைகளின் படி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர், கேபினட் அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், தூதர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், கேபினட் செகரட்டரி, முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள், சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) பாதுகாப்பு அளிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனையிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.

தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம்: சென்னையில் வீடு கட்ட மனை ஒதுக்கீடு

சென்னை: எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுடன், அவர்களுக்கு சென்னைக்கு அருகே வீட்டு மனை ஒதுக்கவும் அரசு சம்மதித்துள்ளது.

சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் கூறியதாவது: ஊதிய நிர்ணயத்தில் சில முரண்பாடுகளை அரசு ஊழியர் சங்கங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து, முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபையை அதிக நாட்கள் நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே சட்டசபையில் அதிக வாதங்கள் நடப்பது தமிழகத்தில் தான். அடுத்த ஆண்டு அதிக நாட்கள் நடத்த முயற்சிக்கப்படும். எம்.எல்.ஏ.,க்களுக்கு தற்போது 3,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அது 8,000 ரூபாயாக உயர்த்தப்படும். கடந்த ஏப்ரல் மாதம் எம்.எல்.ஏ.,க்களுக்கான வாகனப்படி 5,000 ரூபாயில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இது இன்னும் கிடைக்காதவர்களுக்கு விரைவில் கிடைக்கும்.

இதன்படி, எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 45 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயரும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 1.21 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கான ஓய்வூதியம், 8,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும். 4,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறும், ஒரு ஆண்டுக்கு குறைவாக எம்.எல்.ஏ., பதவி வகித்தவர்களுக்கும் இந்த உயர்வு நீட்டிக்கப்படும். இதனால் அரசுக்கு 2.25 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். மறைந்த எம்.எல்.ஏ.,க்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக 2,000, 3,000, 4,000 என மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. இந்த வேறுபாடுகளை போக்கி, அனைவருக்கும் ஒரே வீதத்தில் குடும்ப ஓய்வூதியமாக 5,000 ரூபாய் வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தும் போது, குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அதில் 50 சதவீதம் உயர்த்தப்படும். அரசு மருத்துவமனைகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதை போல, மறைந்த எம்.எல்.ஏ.,க்களின் வாரிசுகளுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்த சம்பள உயர்வுகள் அனைத்தும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.

சென்னைக்கு அருகே குறிப்பிட்ட இடத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்கு வீட்டுமனை வேண்டுமென ஞானசேகரன் கோரியிருந்தார். 105 எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்தை பெற்றுத் தந்துள்ளார். இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டுமனை ஒதுக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்க பரிசீலிக்கப்படும். வாரியத்தின் விதிகளுக்கு உட்பட்டு, நிர்ணயிக்கும் விலையை எம்.எல்.ஏ.,க்கள் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கான தொகுதி நிதி, 1.50 கோடியில் இருந்து 1.70 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் பாராட்டிப் பேசினார். அப்போது முதல்வர் குறுக்கிட்டு, ""சட்டசபையில் அனைவரும் பாராட்டத்தக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டதற்கு ஞானசேகரன் நன்றி கூறுகிறார். அவர் காலனி கட்டும் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கிறார். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கான இதர அறிவிப்புகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஏன் வாய்மூடி இருக்கிறார்?'' என்று கேட்டார். இதற்கு அ.தி.மு.க.,வினர் யாரும் பதிலளிக்கவில்லை. மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி எழுந்து, ""முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியதற்கு நன்றி. ஆனால், தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை,'' என்றார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாலிவுட்டுக்கு போகிறார் நயன்தாரா!  


பாலிவுட் பக்கம் போன அசின் மீண்டும் கோலிவுட்டிற்கு தரிசனம் தர தயங்குகிறார். அவரைத் தொடர்ந்து ஜெனிலியாவும், த்ரிஷாவும் பாலிவுட் பக்கம் போயிருக்கிறார்கள். அவர்கள் மீண்டு(ம்) வருவார்களா என்பது தெரியவில்லை. இப்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவும் பாலிவுட் பக்கம் போகப்போகிறாராம். விரைவில் பிரபுதேவா இந்தியில் இயக்கப்போகும் படமொன்றில் நயன்தாராதான் நாயகி. நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார்.

தற்போது நயன்தாரா தமிழில் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து பிரபுதேவாவின் இந்தி படத்தில் நயன்தாரா நடிப்பார் என தெரிகிறது.

சானாகானுக்கு முதல் விருது!  

சிலம்பாட்டம் படத்தில் பிராமனப் பெண்ணாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தவர் சானாகான். இவருக்கு சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றில் விருது கிடைத்துள்ளது. இந்த விருது தனக்கு கிடைத்த முதல் விருது என பெருமிதம் பொங்க கூறியிருக்கும் சானாகான், பரத்துடன் ஜோடி சேர்ந்துள்ள தம்பிக்கு இந்த ஊரு படத்தில் துறுதுறு சுட்டிப் பெண்ணாக நடித்து வருவதாக கூறினார். இதனை தான் நடிக்கும் மூன்றாவது படமான சாந்துப்பொட்டில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருப்பதாகவும், தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்த சாந்துப்பொட்டு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார். படத்தில் டூப் இல்லாமல் சண்டை போட்டிருக்கும் சானா, பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக ரோப் ஷாட்டுகளிலும் கலக்கியிருக்கிறாராம். தமிழில் கைவசம் மூன்று படம் வைத்துள்ள அம்மனிக்கு , தெலுங்கில் ‌தடம் பதிக்க 2 வாய்ப்புகள் பரிசீலனையில் உள்ளனவாம்.

புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில் ஆண்டு இல்லாததால் குழப்பம்

அவலூர்பேட்டை: மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில், ஆண்டு குறிப்பிடாததால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். அரசர் காலங்களில் தங்கம், வெள்ளி, செப்பு, பித்தளை போன்ற உலோகங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் வழக்கம் இருந்தது. மக்களாட்சி துவங்கியதும், மத்திய அரசின் ஒப்புதலுடன் ரிசர்வ் வங்கி சார்பில், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

 நாணயங்கள், பித்தளை, நிக்கல், அலுமினியம் உலோகங்களில் அச்சிடப்படுகின்றன. ரூபாய் நோட்டுகள், காகிதங்களில் அச்சிடப்படுகின்றன. சமீபத்தில், புதிதாக ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் 10 ரூபாய் நாணயங்களை, மத்திய அரசு வெளியிட்டது. புதிய நாணயங்கள் மிக சிறிய அளவில் காணப்படுவதால், பழைய ஐம்பது காசுக்கும், புதிய ஐந்து ரூபாய்க்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளது. இது, பல பிரச்னைகளை உருவாக்குகிறது. மளிகைக் கடை முதல், பஸ் கண்டக்டர் வரை அனைவரிடமும் சண்டை போடும் நிலை ஏற்படுகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில், மகாத்மா பசவேஸ்வரா உருவம், பெயர் காணப்படுகிறது. அவரது உருவத்தைச் சுற்றி இந்தியில், "பக்தி காயத் தாசோக் சம்தா' என வாசகம் உள்ளது. எந்த காலத்தைச் சேர்ந்த நாணயமென அறிந்து கொள்ள, ஆண்டு குறிப்பிடுவது வழக்கம். ஆனால், இந்த நாணயத்தில் ஆண்டு குறிப்பிடாததால், பொதுமக்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர். எனவே, அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில், ஒன்றுக்கொன்று வித்தியாசங்களுடன் நாணயங்களை, மத்திய அரசு வெளியிட வேண்டும்.

காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து: காங்., 'பகீர்'

சென்னை : ""நிலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம் குற்றஞ்சாட்டினர்.

சட்டசபையில், காவல்துறை மானியத்தின் மீது, காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் சுதர்சனம் பேசியதாவது:மதுரையில் கூஜா வெடிகுண்டுகள் பிடிபட்டுள்ளன; வெடிகுண்டு கலாசாரம் பெருகினால், விபரீத விளைவுகள் ஏற்படும். காவல்துறை அதிகாரிகளின் திறமைக் குறைவுதான், நக் சல்கள் ஊடுருவ காரணம்.சென்னையில் ரயிலை கடத்திய தீவிரவாதி யார் என்பதை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்த வேண் டும். நிலம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. இது ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்படுத்துகிறது.சாலைகளில் பயணிக்கும் காவல் துறை வாகனங்கள், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. அவர்களின் வாகனங்கள், குடும்பத்தினருக்கு பயன்படுவதைத் தடுக்க வேண் டும்.பொதுமக்களை, வாகன ஓட்டிகளை மிரட்டி காவல்துறையினர் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும். இப்படி செய்பவர்களை காட்டிக் கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற பெயரில் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து காவலர்களுக்கு, "ரிஸ்க் அலவன்சை' அதிகரிக்க வேண்டும். வழக்குகள் உள்ளிட்டவற்றிற்காக சென்னை வரும் காவலர்கள் தங்க விடுதி கட்டி, குறைந்த வாடகையில் தர வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் காவல்துறையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை மையம் (நார்கோ லேப்) அமைய நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அந்த சோதனை மையத்தை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. 10 ஆயிரம் ரூபாய் கொடுத் தால் கூட கொலை செய்ய கும்பல் தயாராக இருக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. காவல்துறையில் நேர்மையாக செயல்படும் அதிகாரிக்கு, "கக்கன்' விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.இவ்வாறு சுதர்சனம் பேசினார்.

தேர்தலுக்குப் பின் அமைச்சரவை மாற்றம்! :

""அமைச்சரவை மாற்றம் உறுதியா இருக்கும் வே... ஆனா, இப்ப இல்லை...!'' என பேச ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""மத்திய அமைச்சரவையிலா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய். ""தமிழக அமைச்சரவை தான் வே... சட்டசபை முடிஞ்சதும் மாற்றம் இருக்கும்ன்னு பேச்சு இருந்தது... இடைத்தேர்தல் அறிவிச்சதால, அந்த முடிவு தள்ளிப் போவுது... தேர்தலுக்கு அப்பறம் தான் மாற்றம்ன்னு சொல்றாங்க... தேர்தல்ல ஜெயிச்சா, கோவை கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும்... முதல்வர்கிட்ட இருக்கும் பொதுப்பணித் துறை வேறு மூத்த அமைச்சருக்கு போவும்...
""துணை முதல்வர் அமெரிக்கா போகும் திட்டத்திலும் மாற்றம் இருக்குமாம்... அவர், 24ம் தேதி கிளம்பி, ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை வர்றதா இருந்தது... இடைத்தேர்தல் 18ம் தேதி நடக்குது... இடையில் 15ம் தேதி சுதந்திர தின விழா, 16ம் தேதி பிரசாரம் முடியறதால, துணை முதல்வர் பிரசாரம் செய்யும் வாய்ப்பு குறையுது... அதனால, அமெரிக்க பயணத்தை தள்ளி வைக்க அல்லது முன்கூட்டியே திரும்ப ஆலோசனை நடக்கு...'' என்றார் அண்ணாச்சி.

""சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் செய்யும் முடிவுல தீவிரமா இருக்காங்க...'' என அடுத்த தகவலுக்கு தாவினார் அந்தோணிசாமி.

""பாலாறு விவகாரத்திலா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

""அதில்லைங்க... சட்டசபையில் பி.டி.ஆர்., சபாநாயகரா இருந்தப்ப 18 பேரை தற்காலிகமா வேலைக்கு சேர்த்தார்... அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் அவங்களை வீட்டுக்கு அனுப்பினாங்க... கோர்ட்ல வழக்கு போட்டு, வேலையில சேர்ந்துட்டாங்க...

""அதே மாதிரி, காளிமுத்து சபாநாயகரா இருந்தப்ப 18 பேரை நியமிச்சார்... அவங்களை இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பியது... முந்தைய கோர்ட் தீர்ப்பை காட்டி, இவங்க வழக்கு போட்டாங்க... வேலையில் சேரச் சொல்லி ஐகோர்ட் தீர்ப்பளிச்சது... அதை எதிர்த்து அப்பீல் செய்தாங்க... அதிலும் ஊழியர்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்திருச்சுங்க... ஆனாலும், சுப்ரீம் கோர்ட்ல வழக்கு போட்டு, இவங்களை சேர்க்காம தடுக்க சட்டசபை செயலகம் தீவிரமா இருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.

""சினிமாகாரங்களுக்கு இனி முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க பா...'' என கட்சி விவகாரத்துக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.

""இந்த முடிவை எடுத்தது யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

""அ.தி.மு.க.,வுல தான் இந்த முடிவை எடுத்திருக்காங்க பா... அந்த கட்சியில நிறைய சினிமா பிரமுகர்கள் இருக்காங்க... கட்சிக்கு விசுவாசமா இருக்கறவங்க ஒரு சிலர் தான்... மத்தவங்க எல்லாம் பதவி கிடைச்சா தான் தங்கள் விசுவாசத்தை காட்டறாங்க... இதுகுறித்து கட்சிக்கு நிறைய புகார் போயிருக்கு...

""தி.மு.க.,வுல பேச்சாளரா இருந்த ராதாரவி இங்க வந்ததும் எம்.எல்.ஏ., ஆனாரு... தேர்தல்ல சீட் கிடைக்கலைன்னு தெரிஞ்சதும் தி.மு.க.,வுக்கு தாவிட்டாரு... சரத்குமார், ராதிகா தனிக்கட்சி ஆசையில வெளியில போயிட் டாங்க... இந்த வரிசையில எஸ்.வி.சேகர், முரளி எல்லாரும் விலகி போ யிட்டு இருக்கறதா கட்சி மேலிடத்துக்கு புகார் போயிருக்கு பா... அதனால இனி எந்த நடிகருக்கும் கட்சியில முக்கியத் துவம் கொடுக்க வேண் டாம்னு கட்சி மேலிடம் முடிவெடுத்திருக்காம் பா...'' எனக் கூறிவிட்டு கிளம்பினார் அன்வர்பாய்; பெஞ்சில் அமைதி திரும்பியது.

5 தொகுதிகளில் தி.மு.க.,-தே.மு.தி.க., நேரடி மோதல் ம.தி.மு.க., - பா.ம.க.,வும் புறக்கணிக்க முடிவு

அ.தி.மு.க.,வைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடக்கும் ஐந்து இடைத்தேர்தலையும் ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இடதுசாரி கட்சிகளும் போட்டியிடாது என்பதால், இத்தேர்தல், தி.மு.க.,வுக்கும் தே.மு.தி.க.,வுக்கும் நேரடி மோதலாக அமைய உள்ளது.தமிழகத்தில் நடக்கவுள்ள ஐந்து சட்டசபை இடைத்தேர்தலில், போட்டியிடுவதில்லை என, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

தங்கள் கட்சி நிலைப்பாடு பற்றி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்து, வெற்றி பெற முயற்சிக்கின்றனர். "பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை' என, தேர்தல் கமிஷனே ஒப்புக்கொள்கிறது. பின், இந்தத் தேர்தல் எதற்கு? தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது என் யோசனை. அ.தி.மு.க., போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறினார். போட்டியிடுவதில்லை என அ.தி.மு.க., முடிவெடுத்துவிட்டதால், பா.ம.க.,வும் புறக்கணிப்பது உறுதியாகி உள்ளது.

இதேபோல, தொண்டாமுத்தூர், கம்பம் என இரு தொகுதிகளில் எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டிருந்த ம.தி.மு.க.,வும், இடைத்தேர்தலைப் புறக்கணிக்க உள்ளது.

அக்கட்சி பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தேர்தல்களில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஊழலில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளிவீசி, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கிற வேலையை கணக்கச்சிதமாகத் திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்டு வெற்றியும் பெற்றார் கருணாநிதி. வாக்காளர்களின் ஓட்டு சீட்டுகளை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்குகிற இந்த அக்கிரமத்தை, இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியின் தலைமையும் இப்படி பட்டவர்த்தனமாகச் செயல்படுத்தியது கிடையாது.கங்கை வெள்ளமாகப் பாய்ந்த தி.மு.க.,வின் ஊழல் பணத்தையும், ஓட்டுச்சாவடி தில்லுமுல்லுகளையும் மீறித்தான், 12 லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தற்போது ஐந்து சட்டபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.திருமங்கலம் தொகுதியில் தி.மு.க., நடத்திய அராஜகம், ஜனநாயகப் படுகொலைதான் இந்த ஐந்து தொகுதிகளிலும் அரங்கேறக் காத்து இருக்கிறது. எனவே, இந்த இடைத்தேர்தல்களை ம.தி.மு.க., புறக்கணிக்கிறது.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

இதே முடிவைத்தான் இடதுசாரி கட்சிகளும் எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்த இடைத்தேர்தலில் களம் காண்பது என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இது குறித்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களுடன் மூன்று நாட்களாக ஆலோசனை நடத்தினார்.

அக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:இடைத்தேர்தலில் நாம் உறுதியாக போட்டியிட போகிறோம். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அச்சாரமாக நம்முடைய ஓட்டு வங்கி மற்றும் தொண்டர் பலத்தையும் காட்டுவதற்கு இதுதான் சந்தர்ப்பம். இந்தத் தேர்தல் மூலம் தே.மு.தி.க.,விற்கு மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.அதனால், மாவட்டச் செயலர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த வியூகங்கள் அடுத்த ஆலோசனை கூட்டத்தில் வகுக்கப்படும். அனைத்து மாவட்ட செயலர்களும் அக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.அத்தனை முக்கிய கட்சிகளும், இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ள நிலையில், அடுத்த மாதம் 18ம் தேதி, தி.மு.க.,வும் தே.மு.தி.க.,வும் நேரடியாக மோதிக்கொள்ளும் நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னம் மாற்றம்? "தே.மு.தி.க.,விற்கு முரசு சின்னம் ராசியில்லை; அந்தச் சின்னம், மக்கள் மனங்களில் அழுத்தமாக பதியவில்லை' என்ற கருத்து, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சிவியை போல சின்னத்தை மாற்ற வேண்டும் என்று விஜயகாந்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தே.மு.தி.க.,விற்கு "டிவி', தென்னை மரம், ரயில் இன்ஜின் ஆகிய சின்னங்களில் ஏதாவது ஒன்றை தேர்தெடுக்க வேண்டும் என மாநில நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

இளைய தளபதி விஜய் தற்சமயம் எல்லாப் படங்களிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பாலோ பண்ணுகிறார். சமீபத்தில் இமாலய வெற்றியடைந்த வில்லு படத்திலும் அதே பார்முலா தான். தற்போது உருவாகிவரும் அடுத்த பிரம்மாண்ட வெற்றிப் படமான வேட்டைக்காரன் படத்தின் தலைப்பிலிருந்தே தலைவரின் பாலோ அப்தான். சினிமாவில் கொடுக்கிற‌ இம்சை போதாதென்று இப்போது ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. எப்படியும் முதல்வராகிவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனும் ஆசையுடனுமே கட்சி துவங்க இருக்கிறார். அது மட்டுமின்றி அந்தக் கட்சியின் பெயரிலும் கொடியிலும் எம்ஜியார் இடம்பெறுவார் என அவரது அல்லக்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால அவங்க 2 பேருக்கும் இருக்குற வித்தியாசங்கள எடுத்துக்காட்டும் முயற்சி தான் இந்தப் பதிவு.
வித்தியாசம் 1:
எம்ஜிஆர்: இலங்கை கண்டியிலே பிறந்தார். சினிமாவில் நடிக்கவேண்டி தமிழகம் வந்து சாதித்தார். தமிழகத்திலே திருமணம் செய்தார்.
விஜய் : தமிழகத்திலே பிறந்தார். இலங்கையிலே பெண் எடுத்தார். தமிழக மக்களின் பொருமையைச் சோதிக்க வேண்டி சினிமா பீல்ட்டினைத் தேர்ந்தெடுத்தார்.
வித்தியாசம் 2:
எம்ஜிஆர்: சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நாடகங்களில் சின்ன சின்ன அதாவது பிட்டு பிட்டான வேடங்களில் நடித்து சினிமாவுக்குள் கதாநாயகனாகப் புகுந்தார்.
விஜய் : ஆரம்பம் முதலே பிட்டு படங்களில் தான் அறிமுகமானார். கேரளத்திலே ஷகிலா படம் எந்த அளவிற்கு போனதோ அந்த அளவிற்கு அதிரிபுதிரியாய் தமிழ்நாட்டில் ஓடியது இவரது படங்கள். அதன் முழு வேலையையும் அவரது தந்தைதான் கவனித்துக்கொண்டார் என்பது தான் இங்கே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.
வித்தியாசம் 3:
எம்ஜிஆர்: படங்களில் விதவிதமான வேடங்கள் போட்டு நடித்தார். நிறைய படங்களில் மாறுவேசம் போட்டுக்கொண்டு முகத்தில் மரு வைத்துக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டே வந்து உளவு பார்ப்பார். அந்த திரிலிங்கை ரசிக்காதவர்களே இருக்க முடியாது .
விஜய் : மாறுவேசம் தேவையில்லை. சொந்த வேசத்தில் நடித்தாலே மக்களுக்கு சிரிப்பு தான் வரும். சரி செஞ்சி தான் பாப்பமே அப்டின்னு “போக்கிரி” படத்துல போட்ட ஒரு போலீஸ் வேசத்த பாத்துட்டு, சிரிச்சி சிரிச்சி சிரிப்ப‌ நிறுத்த முடியாம ஏர்வாடிக்கு போன ரசிக கண்மனிகள் இன்னும் திரும்பவேயில்லை.
வித்தியாசம் 4:
எம்ஜிஆர்: இவர் படங்களில் அதிகபட்சம் ஒரு வில்லன் தான் இருப்பார். வில்லனிடமிருந்து கதாநாயகியை மீட்க குதிரையிலே துரத்திக்கொண்டு ஓடுவார். அது மட்டுமின்றி அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரையில் ஓடிப்போய் தாவி ஏறிவிடுவார்.
விஜய் : இவர் படம் முழுவதும் வில்லன்கள் தான் உலா வருவார்கள். ஆனால் எல்லோரையும் மிக புத்திசாலித்தனமாக அதாவது எதிரியை முட்டாளாக்கிவிட்டு (நம்மையும் தான்) சமாளித்து தப்பிவிடுவார். கதா நாயகியை மீட்க மோட்டார் படகு,ஹெலிகாப்டரில் துரத்திச்சென்று மீட்டுவருவார். மேலிருந்து தாவி வந்து ஓடும் ரயிலில் சர்வசாதாரணமாக ஏறுவார். உஷ்..,இப்பவே கண்ணக் கட்டுதே!
வித்தியாசம் 5:
எம்ஜிஆர்: தன் அண்ணன் சக்ரபாணியை எப்படியாவது முன்னனி நடிகராக்க வேண்டும் என தன் படங்களில் அவருக்காக சிபாரிசு செய்தார்.அதன் மூலம் அவரும் நிறைய படங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகராக உருவெடுத்தார். அண்ணன் மீது அவ்வளவு பாசம் கொண்டவர் புரட்சித்தலைவர்.
விஜய் : தன் தம்பி நடிக்க வருகிறார் என தெரிந்ததும் எங்கே தனக்கு ஆப்பு விழுந்துவிடுமோ என பயந்தவர். அவரை கவுக்க என்னவெல்லாம் பிரயோகிக்க முடியோமோ அதையெல்லாம் பயன்படுத்தி அவரது முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றிய வள்ளல். அந்த அளவிற்கு அவர் மீது பாசம் கொண்ட வரட்சித் தளபதி.
வித்தியாசம் 6:
எம்ஜிஆர்: இவர் படங்களில் இவருக்கு நண்பர்களாக யாராவது ஒருவர் தான் (சந்திரபாபு, நாகேஷ், தங்கவேல்) வருவார்கள். தலைவர் போடும் சண்டைக்காட்சிகளில் எல்லாம் அவர்களும் சேர்ந்து சண்டை போடுவார்கள்.
விஜய் : இவர் படங்களில் குறைந்தது 4 முதல் 6 நண்பர்கள் கூடவே வருவார்கள். ஆனால் சண்டைக் காட்சிகளில் காணாமல் போய் விடுவார்கள். காதலுக்கு உதவிசெய்யும் கருவேப்பிலை வேலை மட்டும் தான் அவர்களுக்கு.
வித்தியாசம் 7:
எம்ஜிஆர்: தன் ரசிகர்கள் கூட்டத்தில் அல்லது அரசியல் பொதுக்கூட்டங்களில் தன் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களைப் பார்த்து "என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே" என பேச்சைத் துவக்குவார்.
விஜய் : தன் ரசிகர்களை என்றைக்குமே மதிக்காத, கண்டுகொள்ளாத இவர் ரசிக கண்மனிகளைப் பார்த்து "டேய்...., பேசிக்கிட்டிருக்கோம்ல....,சைலன்ஸ்" அப்டின்னு கத்துவார்.
வித்தியாசம் 8:
எம்ஜிஆர்: இவர் படங்களில் எதிரிகளிடம் மாட்டி கொண்டு சிறையிலே அடைக்கப்படுவார்.எதிரிகளின் அகழிகளில் அடைக்கப்பட்டுள்ள‌ சிங்கம்,புலி ஆகியவற்றோடு சண்டையிட்டு அவைகளை அடக்கிவிட்டு தப்பிச்சென்று விடுவார்.
விஜய் : விலங்குகளோடு சண்டையிடுவது மிக சாதாரண விசயம் எனக் கருதியதால் இவர் மிசின்களோடு சண்டையிடுவார். நம்ம அலுவலகங்களில் சாதாரணமாகவே லிப்ட் எங்கயாவது மாட்டிக்கிட்டா கம்பிகளை வெல்டிங் வச்சித்தான் உடைத்து எடுப்பார்கள். ஆனால் தளபதியை லிப்ட்டுக்குள் வைத்து அடைத்து தண்ணீருக்குள் முக்கிவிட்டுச் செல்வார்கள். அந்த சமயத்தில் கூட அதை மிகச் சாதாரணமாக உடைத்துக்கொண்டு வெளியே வந்து பாய்ந்து செல்வார். இன்னும் கொஞ்ச நாளில் ஓடும் டிரைனை ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல அதோடு சண்டையிட்டு நிறுத்துவது மாதிரி சீன் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எப்டித்தான் புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாய்ங்களோ!
வித்தியாசம் 9:
எம்ஜிஆர்: கத்திச் சண்டை, சிலம்பச் சண்டையில் மாவீரன். இவர் படங்களில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். பாடல் காட்சிகளை இரண்டு கைகளை ஆட்டியே ஓட்டிவிடுவார்.
விஜய் : இவர் படங்களில் வாய்ச்சண்டை அதிகமாக இருக்கும். கார்களில் குண்டு வைத்து கும்பலாக வெடிக்கும் போது இவர் மட்டும் அங்கிருந்து கூலாக நடந்து வருவார். கப்பலில் இருந்து கயிறு இல்லாமல் குதிப்பார், பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டே சண்டையிடுவார். இன்னும் கொஞ்சம் நாட்களில் தன்னை தாக்கவரும் ஹெலிகாப்டரின் வாலைப்பிடித்து மலையில் அடிப்பது போன்ற காட்சிகள் வரலாம். பாடல் காட்சிகளில் இரண்டு கையை ஒரு மாதிரி மேலும் கீழும் ஆட்டிக்காட்டுவார். இப்போது ஒரு கையை உதறிக்காட்டுகிறார்.
வித்தியாசம் 10:
எம்ஜிஆர்: இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு எவ்வளவோ மருத்துவ உதவிகள், திருமண உதவிகள் போன்றவற்றை செய்திருக்கிறார். ஆனால் இவர் செய்யும் உதவிகள் எதுவுமே வெளியே வராது.
விஜய் : இவர் 10 ஜோடிகளுக்கு மிக ரகசியமாக இலவசத் திருமணம் செய்து வைப்பார். ஏழைகளுக்கு இலவச தையல் மிசின், இஸ்திரி பொட்டி வழங்கும் நிகழ்சிகளும் மிக ரகசியமாகத் தான் நடக்கும். காரணம் இவருக்கு விளம்பரமே பிடிக்காது என அவர் தந்தை சொல்லுவார். ஆனால் அடுத்த நாள் இந்த செய்தி, படங்கள் மற்றும் “நான் செய்யும் உதவியை வெளியே சொல்லிக்கொள்வதே இல்லை” என்ற இவரது பேட்டியும் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துவிடும்.

மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் வரலாறு

மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கிழக்கு கோபுரத்தின் நடுவில் இருந்து மேற்கு கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத்தின் நடு உச்சி வழியாக போகும். அதேபோல், வடக்கு தெற்கு கோபுரங்களுக்கு கோடிட்டு பார்த்தால் சுவாமி சன்னதியை இரண்டாக பகிர்ந்து செல்லும். இது தமிழக சிற்பக் கலைஞர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.

அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, "என்ன வரம் வேண்டும் கேள்!' என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.

அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.

மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், "மீனாட்சி' என்று பெயர் பெற்றாள்.

இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு "மதுரை' என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சிஅம்மனின் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.

கால் மாறி ஆடியவனின் கருணை: மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.

தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது.

""ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?'' என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.

""பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!'' என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.

சிவன் பாதம் பார்க்க வேண்டுமா: சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

பெரிய மூர்த்தி: பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும் இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.

சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.

காதல் எ‌ன்பது... ச‌ை‌ச்‌சி‌ள் போ‌ன்றது! -

காதல்ங்கறது சைக்கிள் மாதிரி கல்யாணங்கறது கப்பல் மாதிரி!

அது எ‌ப்படிடா ம‌ச்சா‌‌ன்?

நமக்கு சைக்கிள் பிடிக்கல்லேன்னா இறங்கிடலாம், நடுக்கடலுக்கு போன பிறகு கப்பல் பிடிக்கலன்னு இறங்க முடியாது பாரு!

எனக்கு கப்பல் வேண்டாம் சைக்கிள் போதும்.

கடலில் சிக்கிய ஸ்ருதி! லக் படப்பிடிப்பில் திடுக்!

தமிழில் சொன்னால் மோதிரக் கையால் குட்டு. ஆங்கிலத்தில் சொன்னால் லக்! உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதி நடிக்கும் முதல் படத்தின் பெயரே லக்! அப்பாவுக்கு லக் (அதிருஷ்டம்) மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த லக்கை ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறாராம். அமீர்கானின் உறவினரான இம்ரான்கான்தான் ஸ்ருதிக்கு ஜோடியாக நடிக்கிறார். பதினைந்து வருஷத்துக்கு முன்னாடியிலிருந்தே அவரு எனக்கு ஃபிரண்டு. அண்ணா என்றுதான் கூப்பிடுவேன்.

ஆனால், அவரோடு டூயட்ல ஆடணும்ங்கிற போதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்திச்சு என்கிற ஸ்ருதி, இன்னொரு சிரமத்தையும் சொன்னார். இது படப்பிடிப்பில் நடந்த சிரமம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகர் கடலில் லக் படப்பிடிப்பு நடந்ததாம்.

கையிலிருந்த சின்ன சின்ன மீன்களை கடலில் எறிந்து கொண்டிருந்தார்களாம் ஸ்டண்ட் மேன்கள். மீனுக்கு ஆசைப்பட்டு திடீரென சுறா மீன்கள் குவிய ஆரம்பிக்க, நிலை கொள்ளாமல் ஆடியதாம் படகு. தண்ணீரில் தடுமாறி விழுந்த ஸ்ருதியும், இம்ரானும் எப்படியோ மீட்கப்பட்டிருக்கிறார்கள். இம்ரானுக்கு சுறா மீன் வாலால் செம இடியாம்.

இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடித்து ரிஸ்க் எடுக்கக் கூடாதுப்பா என்கிறார் ஸ்ருதி. சுறா மீன்கள் வந்ததே ஸ்ருதியை இடிப்பதற்காக கூட இருக்கலாம்!

அடுத்த படம்? ஹாட் சேல்ஸ் நாயகன் சசிகுமார் பதில்!

சுப்ரமணியபுரத்தில் இயக்குனர், பசங்க படத்தில் தயாரிப்பாளர், நாடோடிகள் படத்தில் ஹீரோ! இப்படி முக்கடலில் குளித்து முத்தெடுத்திருக்கிறார் சசிக்குமார். இந்த ஹாட்ரிக் நாயகன்தான் இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் சேல்ஸ் நாயகனாகவும் ஆகியிருக்கிறார். நான் முழு நேர நடிகனல்ல. இனி நடிப்பதை விட, இயக்குவதில்தான் அதிக கவனம் செலுத்துவேன் என்று சசி பளிச்சென்று கூறிவிட்டாலும், நான் நீ என்று கதை சொல்ல க்யூ கட்டி நிற்கிறார்கள் சசி ஆபிசில். அடுத்தது என்ன? நடிப்பா, டைரக்ஷனா? ஒரு குழப்பமும் வேண்டாம். டைரக்ஷன்தானாம்.

அப்படின்னா முன்னணி ஹீரோக்களை வச்சு எடுப்பாரு போலிருக்கு! இந்த ஐயங்களுக்கு படார் திடீர் என்று பதில் சொல்லி அசத்துகிறார் சசிகுமார். சார், முன்னணி ஹீரோக்களை வச்சு படம் எடுக்கணும்ங்கிற ஆசை எனக்கு இல்லை. நான் கொஞ்சம் அமைதியான டைப். பெரிய ஹீரோக்களோட சேர்ந்து வொர்க் பண்ணனும்னா அவங்களோட மூட் தெரிஞ்சு பேசணும். என்ன நினைப்பாங்களோ, எப்படி எடுத்துப்பாங்களோன்னு அவங்களுக்காக சிந்திக்கணும். வந்தா எழுந்திருச்சு நிக்கணும். இப்படியெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் இருந்தாலே படத்தை பற்றி சிந்திக்கறதை விட்டுட்டு நம்ம கவனம் முழுக்க இதிலேயே போயிரும்.
அதனால...?

“அதனால, புதுமுகத்தை வச்சுதான் சார் நம்ம அடுத்த படமும்!”

ஒத்த வார்த்தை சொன்னாலும் நெத்தியடியா இருக்குங்க சாரு...!

கொடி ரெடி, கொள்கைப் பாடலும் ரெடி

கருப்பு வெள்ளை காலம் முதலாகவே நம் கதாநாயகர்கள் நெஞ்சை விறைத்து, கையை நீட்டியபடி குதிரையிலோ, நடந்து வந்தபடியே சமுதாயத்தில் உள்ள அநியாயங்களை, கொடுமைகளை தட்டிக் கேட்டுக்கொண்டே... தான் வந்திருக்கிறார்கள்.

அந்த வழியில் விஜய்யும் தனது வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலை வைக்க அனுமதித்துள்ளார்.

அரசியல் வரவு பற்றிய சமிஞ்சைகளை தனது ரசிகர்களுக்கு தந்து கொண்டிருக்கும் இந்தப் பாட்டு வரிகள், இப்போது கோடம்பாக்கத்து டாக்காக இருக்கிறது.

விஜய்க்காக பாடலை எழுதியுள்ளவர் கபிலன். வரிகள் இதோ
வறட்டி தட்டும் சுவத்துல வேட்பாளர் முகமடா காத்திருந்து ஓட்டுப் போட்ட கறுத்துப் போச்சு நகமடா புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல நம்ம நாட்டு நடப்புல யாரும் இதை தடுக்கல.

அநேகமாய் வேட்டைக்காரன் வெற்றி விழாவில் கபிலனுக்கு தங்கச் செயின் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்.

வேட்டைக்காரனில் ப்ரியாமணியா?

நாமதான் இந்திரன் தோட்டத்து முந்திரின்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது, அதெல்லாம் கிடையாது எந்திரின்னா எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கு ப்ரியாமணி நிலைமை! தமிழ், தெலுங்கு, மலையாளம்னு கலந்து கட்டி அடிக்கிறளவுக்கு திறமை இருக்கு. சிற்பம் மாதிரி ஸ்ட்ரெச்சர் இருக்கு. ஹ§ம், இருந்தும் என்ன பண்ணுறது? விஜய், அஜீத் மாதிரி முன்னணி ஹீரோக்களோட டூயட் பாட முடியலையே? இந்த ஏக்கத்தை போக்க என்னென்னவோ து£து விட்டும், கதை நடக்கல. காரியமும் கைகூடலே. இந்த நேரத்திலேதான் வேட்டைக்காரன் படத்திலே நடிக்க ஒரு அழைப்பு வந்திச்சாம். அதுவும் இரண்டாவது நாயகி கேரக்டருக்கு. படமே எழுபது சதவீதம் முடிஞ்சாச்சு. இனிமேல் எதற்கு இன்னொரு நாயகி? வேறொன்றுமில்லை, இந்த கேரக்டருக்கு முன்னணி நாயகிகளை தேடி அலுத்துப் போனவர்கள், புதுமுகத்தை போட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள்.

அனுஷ்கா ஃபுல் மீல்ஸ். நான் ஆஃப் பாயிலா என்று அலறாத குறையாக வருந்திய ப்ரியாமணி, வேட்டைக்காரனில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாக தகவல். அதனால்தான் இந்த புதுமுக முடிவு. இதற்கிடையில், ஆறுதல் சொல்ல நீள்கிற விரலாக விஷால் வந்து கண்ணீரை துடைத்திருக்கிறார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்கிறாராம் ப்ரியாமணி. முதலில் முடியாது என்று மறுத்தவர்தான் இப்போது சரி என்று சம்மதித்திருக்கிறார். பின்னணியில் என்ன நடந்தது என்பது நமக்கெதுக்கு?

ஆனால், இந்த ரோலும் இவருக்கு நேரடியாக கிடைக்கவில்லை என்பது இன்னொரு ஷாக். முதலில் நடிக்க சம்மதித்திருந்த ரீமாசென், என்னவோ கடைசி நேரத்தில் விலகிக் கொண்டாராம். இதனால் ரீமாசென் ரோலுக்கு செலக்ட் செய்யப்பட்டிருக்கிறார் ப்ரியாமணி.

காதலை சொல்ல முடியாமல்

அர்த்தமில்லாமல்
அகால வேளையில் பொழிவதாய்
அலுத்து கொள்கிறாய்
இந்த மழையை..

உன்னிடம்
காதலை சொல்ல முடியாமல்
வார்த்தைகளை
மென்று விழுங்கிகொண்டிருக்கும்
எனக்கு

இந்த மழை
வார்த்தைகளை கோர்த்து தருகிறது
என்று சொன்னால்
நீ நம்புவாயா??

விழி படபடக்கும் சப்தம் - அழகிய கவிதை

உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!

புல்லாங்குழல்
அழுவதாகவே இருக்கின்றது;
நீ வரும் நாட்களில் மட்டுமே
அது இசையாய் வழிகிறது!

மலர் பறிக்கையில்
மேல் விழுந்து சிலிர்ப்பூட்டும்
பனித்துளியாய் உன் நினைவு!

கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!

என் பார்வைக்கெதிரே
தளிர் இலையொன்று
பழுத்து வர்ணம்
உதிர்கிறது!
நீ வருகிறாய்
உதிர்ந்திட்ட அவ்விலை
மீளவும் மரம் பொருந்தி
பச்சையாக தொடங்குகிறது!

சில முடிகள் வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன
என்றாலும் என்ன
இப்போதும்
காதலின் குழந்தைகள் நாம்!

காதல் பாதையில்
விழி மூடியபடி
பயணிக்கிறேன்;
வழிகாட்டியபடி
துணைவருகிறது
உந்தன் விழியின் ஒளி!

உன்னைவிட்டு பிரிந்து
நடக்கும் தருணங்களில்
என் சவத்தை
நானே சுமந்து தொடர்கிறேன்!

மரணம் ஒத்த
தூக்கமதிலும்
கேட்டபடியே இருக்கிறது
உந்தன் விழி படபடக்கும் சப்தம்!

கொஞ்சினால் மிஞ்சும்
மிஞ்சினால் கொஞ்சும்
காதலும் குழந்தைதான்!

கவுண்டமணியின் கவுண்டவுன்

கவுண்டமணியின் அடுத்த கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் மூன்றே நாள்... வனவாசத்தை முடித்து திரையில் புதுவசந்தத்தை கொண்டாடப் போகிறார் கவுண்டர்.

சிலரது திரைவாழ்க்கை முதல் இன்னிங்ஸோடு முடிந்துவிடும். சிலருக்கு இரண்டாவது. மூன்றாவது வரை தாக்குப் பிடித்தவர் யாருமில்லை. ஆனால், கவுண்டமணி...?

படங்களே இல்லாமல் இதுவரை ஐந்து முறையாவது பீல்டு அவுட் ஆகியிருப்பார் கவுண்டமணி. ஆனால் ஒவ்வொருமுறையும் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வந்திருப்பது ஆச்ச‌ரியம். மீடியாவின் துணை இல்லாமலே இந்த சாதனையை நிகழ்த்தி‌க் காட்டியவர் அவர் என்பது ஆச்ச‌ரியத்தின் அளவை கூட்டும்.

சமீபகாலமாக கவுண்டமணி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த படம் சத்யரா‌ஜின் தங்கம். அதன் பிறகு பல மாதங்கள் கழித்து, வரும் மூன்றாம் தேதி பொள்ளாச்சி மாப்ளே ‌ரிலீஸாகிறது. சத்யரா‌ஜ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் அட்ரா‌க்சனே கவுண்டர்தான்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விரைவில் வெளிவரயிருக்கும் ஜக்குபாயிலும் கவுண்டர் காமெடி செய்திருக்கிறார். படத்தில் சரத்துக்கு உதவி செய்யும் நண்பராக நடித்திருப்பதாக யூனிட்டிலிருந்து கசிந்த தகவல் சொல்கிறது.

இந்த இரு படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கவுண்ட‌ரின் கொடி உயரப் பறக்க அதிக சாத்தியமுள்ளது. கவுண்ட‌ரின் ரசிகர்களுக்கு இது கற்கண்டு செய்தி.

வால்ட் டிஸ்னி 19 steps படத்திலிருந்து கமல் விலகல்

வால்ட் டிஸ்னி நிறுவனம் இயக்குனர் பரத்பாலாவுடன் இணைந்து தயா‌ரிப்பதாக இருந்த படம் 19 ஸ்டெப்ஸ். கேரளாவின் பாரம்ப‌ரிய தற்காப்பு கலையான கள‌ரியை மையமாக வைத்து தயாராவதாக இருந்த இந்தப் படத்தில் கள‌ரி ஆசானாக கமல் நடிப்பதாக கூறப்பட்டது.

அசின் இளவரசியாகவும், அவர் காதலிக்கும் ஜப்பான் நாட்டு இளைஞராக ஜப்பான் நடிகர் Tadanobu Asano நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்காக கேரளாவில் கள‌ரி பயிற்சி எடுத்துக் கொண்டார் அசின். படத்தின் திரைக்கதையை எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதுவதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.

படக்குழுவினர் ஜப்பான் கிளம்புவதற்கு தயாரான நிலையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், பரத்பாலா படப்பிடிப்பை கேரளாவில் விரைவில் தொடங்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால், 19 ஸ்டெப்ஸ் படமே கைவிடப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் உலவுகின்றன. கள‌ரி ஆசானாக நடிக்க ஒப்புக்கொண்ட கமல் அந்த வேடத்தில் நடிக்க மறுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக படமே கைவிடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கமல் எதுவும் கருத்து தெ‌ரிவிக்காதது போலவே பரத்பாலா தரப்பும் மவுனம் சாதிக்கிறது.

முதல் ஸ்டெப்பே எடுத்து வைக்காத நிலையில் 19 ஸ்டெப்ஸ் கைவிடப்பட்டது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓரின‌ச்சேர்க்கையை வரவே‌ற்‌கு‌‌ம் நடிகை குஷ்பு

ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது எ‌ன்று‌ம் இந்த தீர்ப்பை நான் மனதார வரவேற்கிறேன் எ‌ன்று‌ம் ‌பிரபல த‌மி‌ழ் நடிகை கு‌ஷ்பு கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி வாழும் உரிமை கிடைத்துள்ளது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள கு‌ஷ்பு, இந்த தீர்ப்பு நம்நாட்டில் உள்ள சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மையை மேலும் உயர்த்திக்காட்டுவதாக அமைந்துள்ளது எ‌ன்று கூ‌றினா‌ர்.

சென்னை மக்களும் ஓரினச்சேர்க்கை பற்றி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று தா‌‌ன் நம்புவதாகவு‌ம் பெரும்பாலும் நம் நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மாறுதலை விரும்பமாட்டார்கள் எ‌ன்று‌ம் கு‌ஷ்பு தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

ஆனாலும் நம் நாட்டில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன எ‌ன்று கூ‌றிய கு‌ஷ்பு, இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை எ‌ன்றா‌ர்.

சூர்யாவின் சிவந்த கரங்கள்

கொடுத்து சிவந்த கரங்கள் என்பார்களே... சிவகுமார் மைந்தனுக்கு அது சாலப் பொருந்தும். தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல்வேறு நற்பணிகள் செய்துவரும் சூர்யா, புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிவ் இண்டியா இணையதள‌ம், ஜாய் ஆஃப் கிவ்விங் வீக் என்ற புரோகிராமை சென்னை பார்க் ஹோட்டலில் நடந்த விழாவில் அறிவித்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை ஸ்ரேயா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, தனது அடுத்தப் படத்திலிருந்து சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்கு‌த் தருவேன் என பலத்த கைத்தட்டலுக்கு நடுவே தெ‌ரிவித்தார். இந்த தொகை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழியாக ஏழை எளியவரை சென்றடையும்.

மாதம் ஒருமுறை ஏதேனும் தொண்டு நிறுவனத்துடன் நேரத்தை செலவிடுவதாக முடிவு எடுத்திருப்பதாகவும் கூறினார் சூர்யா.

ஜூலையில் வெளியாகும் படங்கள்

ஒரு டஜன் படங்கள் வரும் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது. இந்த வருடத்தின் தமிழ்‌த் திரையுலகின் லாப நஷ்டத்தை தீர்மானிக்கும் மாதமாக ஜூலை இருக்கும் என்பதே விநியோகஸ்தர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கணிப்பு.

ஜூலை 3ஆ‌ம் தேதி பா.விஜய்யின் ஞாபகங்கள் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து உன்னை கண் தேடுதே, கரண் நடித்திருக்கும் மலையன், பசுபதி, வடிவேலு நடித்திருக்கும் ஏ.‌ஜி.மூர்த்தியின் வெடிகுண்டு முருகேசன், ஜெய்யின் வாமனன், விஜயகாந்தின் எங்கள் ஆசான், சிந்தனை செய், ராசி அழகப்பனின் வண்ணத்துப் பூச்சி ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.

இவற்றுடன் கந்தசாமி உள்பட மேலும் பல படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவன், சதா நடித்திருக்கும் நான் அவள் அது படத்தையும் ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சஞ்சய் ராம் தனது லிங்கம் தியேட்டர்ஸ் சார்பில் எடுத்திருக்கும் பூவா தலையா படத்தையும் ஜூலையில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

ஜூலை 10 எங்கள் ஆசான்

அரசியலில் எப்படியோ. சினிமாவில் டெபாஸிட் இழக்கும் நிலையில் இருக்கிறார் விஜயகாந்த். அதிகம் எதிர்பார்த்த ம‌ரியாதையும் காலைவார, கேப்டனின் இன்றைய நிலை கவலைக்கிடம்.

தனது நண்பர் தங்கராஜுக்காக விஜயகாந்த் நடித்துக் கொடுத்த எங்கள் ஆசான் விற்பனையாகாமல் பல மாதங்களாக பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. ஒருவழியாக அதை தூசு தட்டி வரும் 10ஆ‌ம் தேதி வெளியிடுகிறார்கள்.

ம‌ரியாதையில் இல்லாத அரசியல் அலப்பறை எங்கள் ஆசானில் படம் நெடுக வருகிறது. இதில் வங்கி அதிகா‌ரியாக விஜயகாந்த் நடித்திருக்கிறார். மக்கள் பணத்தை கையாடல் செய்கிறவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்து மக்கள் மன்றத்தில் தோலு‌ரிக்கும் கதாபாத்திரம்.

விஜயகாந்துக்கு ஜோடி அரசியல்வாதியாக வரும் ஷெ‌ரில் பி‌ரிண்டோ. விஜயகாந்தைவிட இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்ப்பவர் நடிகர் விக்ராந்த். செந்தூரப்பாண்டியில் விஜயகாந்துடன் நடித்த பிறகுதான் விக்ராந்தின் அண்ணன் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் கிடைத்தது. இந்தப் படத்தில் விஜயகாந்துடன் நடித்திருப்பதால் தனக்கும் அப்படியொரு ஓபனிங் கிடைக்கும் என நம்புகிறார் விக்ராந்த்.

முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா

க‌ஜினியை தொடர்ந்து மீண்டும் சூர்யா - ஏ.ஆர்.முருகதாஸ் ஒன்றிணைகிறார்கள். இவர்கள் இணையும் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் தயா‌ரிக்கிறது.

இந்தி க‌ஜினிக்குப் பிறகு பாலிவுட்டில் படம் இயக்க முருகதாஸுக்கு ஏகப்பட்ட அழைப்புகள். முருகதாஸும் ‌ஷாருக்கானை சந்தித்து கதை கூறினார். கதை ‌ஷாருக்கிற்கு பிடித்திருந்தாலும் உடனே நடிக்க முடியாத நிலை. கரண் சூஜாஹ‌ரின் மை நேம் இஸ் கான், பர்கான் அக்த‌ரின் டான் இரண்டாம் பாகம் என இரு படங்கள் ‌ஷாருக்கின் கைவசம் உள்ளது. இவற்றை முடித்த பிறகே புதிய படம் குறித்து அவர் யோசிக்க முடியும்.

இந்த இடைவெளியில் வேறு நடிகரை வைத்து படம் இயக்க முருகதாஸ் தீர்மானித்துள்ளார். அனேகமாக அந்த ஹீரோ சூர்யாவாக இருப்பார். தமிழில் தயாராகும் அந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயா‌ரிக்கிறார்.

தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆதவன் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் உதயநிதி ஸ்டாலினே தயா‌ரிப்பது குறிப்பிடத்தக்கது. ஆதவனைத் தொடர்ந்து ஹ‌ரியின் சிங்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் முருகதாஸின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் நியூசிலாந்து நடிகை

மதம் ஒருவ‌ரின் தனிப்பட்ட விஷயம். இந்த மத உணர்வு ஒரு எல்லையை தாண்டும்போது அது தீவிரவாதமாக வெடிக்கிறது. சர்வமத பிரார்த்தனை போலிருக்கும் இந்த வ‌ரிகள்தான் அறிமுக இயக்குனர் மதிவாணனின் அ‌ரிது அ‌ரிது படத்தின் அடிப்படை.

தனது முதல் படத்திலேயே வெயிட்டான விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார் மதிவாணன். அதற்கொரு பொக்கே. இன்னொரு பொக்கேயும் இவருக்கு கொடுக்க வேண்டும். அது இவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஹீரோயினுக்காக.

அ‌ரிது அ‌ரிது படத்தின் கதைக்கு நல்ல தமிழ் முகம் தேவைப்பட்டிருக்கிறது. ஆறு கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் அப்படியொரு முகம் சிக்காமல் இறுதியில் நியூசிலர்ந்தைச் சேர்ந்த ருத்ரா என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். வசிப்பது நியூசிலாந்து என்றாலும், ருத்ராவின் பரம்பரை வேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தது.

படத்தின் ஹீரோவும் புதுமுகம்தான். பெயர் ஹ‌ரிஷ். வெயிட்டான கதை, வெளிநாட்டில் டூயட் என களேபரமாக தயாராகி வருகிறது அ‌ரிது அ‌ரிது.

காதல் ஒட்டம் - ஹைக்கூ கவிதை

காதல் ஒட்டம்
வாசல் வழியாக வறுமை
உள்ளே வரும் போது
ஜன்னல் வழியாக ஓடிவிடும் காதல்

வேட்டைக்கு தயாராகும் ‌‌J.K.ரித்தீஷ் M.P

எம்பியாக பதவியேற்ற முதல் நாளே கலக்கல் காஸ்ட்யூமில் சோனியா காந்தியையே யார்யா இது என்று கேட்க வைத்தவர் ஜே.கே.‌‌ரித்தீஷ். சும்மாவே போஸ்டர் அடித்து ஒட்டுகிறவர் சென்ட்ரல் பாலிடிக்ஸில் புகுந்தால் சும்மாயிருப்பாரா? ஒட்டு மொத்த இந்தியாவை கலங்கடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

நாயகன் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிவிட்டவர் அடுத்து வேட்டை புலி என்ற படத்தில் நடிக்கிறார். முன்பென்றால் புலியை உள்ளூ‌‌ரில் மட்டும் உலவவிட்டால் போதும். இப்போதோ எம்பி. இந்தியாவுக்கே தெ‌ரிய வேண்டாமா ஒரு எம்பியின் நடிப்பு திறமை. அதற்கு ச‌ரியான வழி படத்தை இந்தியிலும் எடுப்பதுதான் என ஒரு விசுவாசி எடுத்துக் கொடுக்க அதுபற்றி சீ‌‌ரியஸாக திங்க் பண்ணிக் கொண்டிருக்கிறார் ‌‌ரித்தீஷ்.

அனேகமாக வேட்டை புலி இந்தியிலும் கர்‌ஜிக்கலாம் என்பதுதான் நிலைமை. இதற்காகவே இந்தி டியூசனுக்கு போய் வருகிறாராம். தமிழ் மக்கள்தான் பாவம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் சோகத்தில் பங்குகொள்ள இனி இந்தி பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். நல்ல சேதிதானே இது.

ஒன் டூ த்ரி சொல்லத் தெரிஞ்சா மியூசிக் டைரக்டர் ஆகிடலாம்!

ஒரு பழைய புகைப்படம் தருகிற இனிமையான உணர்வை, அந்த மேடையும் தந்தது. படத்தின் பெயரே புகைப்படம் என்பதால், பேச வரும் விஐபி களுக்கு பொருத்தமாக ஒரு பிளாஷ்பேக் சொல்லி அழைத்தார் சின்னத்திரை நடிகை நீலிமா. (பாக்யராஜ் பேசும் போது இவரை அம்மையார் என்று அழைத்ததெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்) ஆச்சர்யம் என்னவென்றால் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் கங்கை அமரன்.

“ஒன் டூ த்ரி ஃபோர்னு சொல்ல தெரிஞ்சா யாரு வேணா மியூசிக் டைரக்டர் ஆயிடலாம். நான் வந்திட்டேன். இனி யாரும் கவலைப்பட வேணாம். தமிழ்சினிமாவை நான் தாங்கி பிடிச்சிருவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். சும்மாயிருந்த எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. நான் அவங்க கேட்டதை செஞ்சு கொடுத்திருக்கேன். அவ்வளவுதான். இதுவரைக்கும் வராத இசையை கொடுத்திருக்கேன்னு சொல்ல முடியாது. ஏற்கனவே வந்த பாட்டைதான் லேசா சேஞ்ச் பண்ணி கொடுத்திருக்கோம். பாடலை கேட்டால் எங்கேயிருந்து அடிச்சோம்னு தெரியாது. இந்த படத்தோட நூறாவது நாள் விழாவிலே வேணும்னா சொல்றேன், எதுலேர்ந்து எடுத்தோம் என்று!” கங்கை அமரன் இப்படி சொல்ல சொல்ல, அரங்கத்தில் செம க்ளாப்ஸ்!

பின்னாலேயே பேச வந்தார் பாக்யராஜ். இவர் சொன்ன பிளாஷ்பேக் இன்னும் சூப்பர். “உனக்கெல்லாம் மியூசிக்குன்னா என்னன்னு தெரியுமான்னு அமரை வெளியே விரட்டிவிட்டுட்டாங்க. எனக்கும் ஒன்ணும் தெரியாதுன்னு வெளியே அனுப்பிட்டாங்க. ரெண்டு பேரும் லாட்ஜில் தங்கி வெறியோட ட்யூன் போட்டோம். பின்னாளில் அதெல்லாம் பெரிய மியூசிக்கல் ஹிட் ஆச்சு. என்னோட முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள் படத்துக்கெல்லாம் அமர்தான் மியூசிக். அதுக்கு பிறகு நானும் இளையராஜா, விஸ்வநாதன்னு போயிட்டேன்”.

“ஏவிம்எம் ல் முந்தானை முடிச்சு பண்ணும்போது எனக்கு இசையமைப்பாளரா அமரன்தான் இருக்கணும்னு சொல்லிட்டேன். பிறகுதான் அவங்களுக்கு கதையை சொன்னேன். இவ்வளவு நல்ல கதையா இருக்கே, இளைராஜாவை மியூசிக் போட சொல்லலாமேன்னாங்க. நான் அமரிடம் சொல்லிட்டேன். முடியாதுன்னு பிடிவாதமா இருந்தேன். அவங்க என்னை விட்டுட்டு நேரா அமர்கிட்டவே போய் ரிக்வெஸ்ட் பண்ணிட்டாங்க. பிறகு அவரே என்னை கூப்பிட்டு நான் விலகிக்கிறேன்னு சொல்லிட்டாரு”.

“அப்புறம் இளையராஜாகிட்டே போனா அவரு பிகு பண்ணுறாரு. நீ முதலில் எங்கிட்டே வரலியே என்று. அமரன் என்ன வேற ஆளா? நீங்க சொல்றது ரொம்ப அநியாயம்னு அவரை சமாதான படுத்த வேண்டியதாப் போச்சு” என்று பாக்யராஜ் உண்மைய போட்டு உடைக்க, கங்கை அமரன் உள்ளிட்ட அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட இன்னொரு சகாப்தம், தமிழ்சினிமாவை வேறு பாதைக்கு திருப்பிய இயக்குனர் மகேந்திரன். “பழமையை உடைக்கிற இளைஞர்கள் இப்போது வருகிறார்கள். அவர்களை வாழ்த்துகிறேன்” என்றார். முன்னதாக திரையிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் மூன்றும் திகட்டவே திகட்டாத தித்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாபகங்கள்

பாடலாசி‌ரியர் பா.விஜய் கதாநாயகனாகியிருக்கும் படம் ஞாபகங்கள். படத்தின் கதை, வசனம், பாடல்கள், தயா‌ரிப்பு என பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் இவர்.

மயிலு படத்தை இயக்கிய ‌ஜீவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பா.விஜய்யின் ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ரீதேவிகா. விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது.

படத்தின் தொலைக்காட்சி உ‌ரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு இந்த உ‌ரிமை வாங்கப்பட்டதாக தெ‌ரிகிறது.

புதுப்படங்களின் ஒளிபரப்பு உ‌ரிமையை வாங்க சன், கலைஞர், ரா‌ஜ், ஸீ ஆகிய தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டுவதால் ஒளிபரப்பு உ‌ரிமைக்கான தொகை அதிக‌ரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

'குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்...' சிவகுமார் உருக்கம்!

'புத்தகங்களே, புத்தகங்களே, சமர்த்தாக இருங்கள். குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்Õ என்ற அருமையான கவிதையை சொல்லி, நிகழ்ச்சியை தொகுத்தளித்தார் பத்திரிகையாளர் த.செ.ஞானவேல்! சிவகுமார், சூர்யா குடும்பத்தினர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் விழாவில்தான் இந்த அழகான கவிதையை கேட்க முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் சிவகுமார் அறக்கட்டளை மற்றும், அகரம் பவுண்டேஷன் மூலமாக நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த முறையும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர். இந்த வருடத்தில் இன்னும் கூடுதல் பொறுப்பும் வந்திருக்கிறது இவர்களுக்கு. சேவை உள்ளத்தோடு பணியாற்றும் பிற அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில், அவர்கள் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார்கள்.

கடலூரில் இயங்கி வரும் அமைப்பு ஒன்றில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் ஐம்பது பேரை தத்தெடுத்துக் கொண்டது அகரம் பவுண்டேஷன். எல்லா மாணவர்களோடும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டபின் சிவகுமார் பேசியது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. 'இந்த ஆண்டிலிருந்து இலங்கை அகதிகள் முகாமில் படிக்க இயலாமல் தவிக்கும் குழந்தைகளுக்கும் கல்வி தர முடிவு செய்திருக்கிறோம்' என்று அவர் சொல்ல, கூட்டத்திலிருந்து எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.