Showing posts with label கவுண்டமணி. Show all posts
Showing posts with label கவுண்டமணி. Show all posts

பி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி

பி.வாசு கன்னடத்தில் பொல்லாதவனை எடுக்க போகிறாராம்.

எப்படி வரும்?

1) கன்னட படங்கறதால கொஞ்சம் பட்ஜெட் பார்த்து தான் எடுப்பாரு. அதனால பல்ஸருக்கு பதிலா, பிளாட்டினா.

2) கமர்ஷியலுக்காக ஒரிஜினல்ல இருக்குற தேவையில்லாத சீனை பெரிதாக்குவார். தேவையான சீனை சுருக்கிவிடுவார். அதன்படி, இந்த படத்தில் முதல் பாதி முழுக்க ஹீரோவும், ஹீரோயினும் லவ் பண்ணுவார்கள், நண்பர்கள் காமெடி பண்ணுவார்கள். கிளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி ஹீரோ பைக்க தொலைப்பார்.

3) தொலைந்த பைக்கை ஹீரோ பெங்களூர் ஹார்பரில்(!) போயி தேடுவார்.

4) வில்லனை சுத்தி இருக்குற ரவுடிகளுக்கு வெள்ளை சட்டையும் மடிச்சு கட்டின வேட்டியும் தான் யூனிப்பார்ம்.

5) தனுஷ் அப்பா ஆஸ்பிட்டலில் இருக்கும் போது, “அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே” என்ற அப்பா செண்டிமெண்ட் பாடல் நிச்சயம்.

6) கிஷோர் இறந்தபின் அஞ்சு அழும் காட்சியை, குங்குமம், வளையல், வெள்ளை புடவை என்று இன்னும் மெருக்கேற்றுவார்.

7) பத்து வருஷம் முன்னாடி எடுத்திருந்தாங்கன்னா, செட்டு போட்டு இரண்டு பாட்டும், ஊட்டில ரெண்டு பாட்டு எடுத்திருக்கலாம். அவரோட, தற்போதைய ரேஞ்ச் படி ரெண்டு பாட்டு பாரின்ல தான்.

8) "எங்கேயும், எப்போதும்" ரீ-மிக்ஸ்க்கு பதிலாக ஒரு பழைய ராஜ்குமார் பாடலை ரீ-மிக்ஸ் பண்ணுவார்கள். படம் - வெள்ளி விழாதான். மெஜஸ்டிக் பக்கமிருக்குற ஒரு தியேட்டருல.

இந்த படம் மட்டும் கன்னடத்தில வெற்றியடைஞ்சுதுன்னா, அப்புறம் அதே டீம வச்சி அதே மாதிரி ஒரு படம் எடுப்பாரு. அப்படி இல்லாட்டி, அவர் பையனை அங்க இறக்கி விடுவாரு. அது கண்டிப்பா ஊத்திக்கும்.

இவ்ளோ சொன்னாலும், பி.வாசு படங்களில் இருந்த ஒரு நல்ல விஷயம், அவர் நகைச்சுவை நடிகர்களை பயன்படுத்திய விதம். முக்கியமாக, கவுண்டமணி. இவர் படங்களில் கவுண்டமணி, ஒரு சுதந்திர பறவை. வாசு இயக்கத்தில் கவுண்டமணி பேசிய வசனங்கள் ரொம்ப பிரபலம்.

கவுண்டமணியின் கவுண்டவுன்

கவுண்டமணியின் அடுத்த கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் மூன்றே நாள்... வனவாசத்தை முடித்து திரையில் புதுவசந்தத்தை கொண்டாடப் போகிறார் கவுண்டர்.

சிலரது திரைவாழ்க்கை முதல் இன்னிங்ஸோடு முடிந்துவிடும். சிலருக்கு இரண்டாவது. மூன்றாவது வரை தாக்குப் பிடித்தவர் யாருமில்லை. ஆனால், கவுண்டமணி...?

படங்களே இல்லாமல் இதுவரை ஐந்து முறையாவது பீல்டு அவுட் ஆகியிருப்பார் கவுண்டமணி. ஆனால் ஒவ்வொருமுறையும் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வந்திருப்பது ஆச்ச‌ரியம். மீடியாவின் துணை இல்லாமலே இந்த சாதனையை நிகழ்த்தி‌க் காட்டியவர் அவர் என்பது ஆச்ச‌ரியத்தின் அளவை கூட்டும்.

சமீபகாலமாக கவுண்டமணி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த படம் சத்யரா‌ஜின் தங்கம். அதன் பிறகு பல மாதங்கள் கழித்து, வரும் மூன்றாம் தேதி பொள்ளாச்சி மாப்ளே ‌ரிலீஸாகிறது. சத்யரா‌ஜ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் அட்ரா‌க்சனே கவுண்டர்தான்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விரைவில் வெளிவரயிருக்கும் ஜக்குபாயிலும் கவுண்டர் காமெடி செய்திருக்கிறார். படத்தில் சரத்துக்கு உதவி செய்யும் நண்பராக நடித்திருப்பதாக யூனிட்டிலிருந்து கசிந்த தகவல் சொல்கிறது.

இந்த இரு படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கவுண்ட‌ரின் கொடி உயரப் பறக்க அதிக சாத்தியமுள்ளது. கவுண்ட‌ரின் ரசிகர்களுக்கு இது கற்கண்டு செய்தி.