4500 அடி உயரத்திலிருந்து மயங்கிய நிலையில் விழுந்து உயிர் பிழைத்த நபர்


தரையிலிருந்து 4500 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்த வேளை அவ்விமானத்தின் வால் பகுதியில் அடிபட்டு சுயநினைவிழந்த வான் சாகச நிபுணர் ஒருவர், இலேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பிய அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஜமி ரொபேர்ட்ஸன் என்ற இந்த 57 வயது வான சாகச நிபுணர் மயங்கிய நிலையில் நிலத்தை அண்மித்த வேளை, அவரது பாரசூட் அபூர்வமான முறையில் தானாகவே விரிந்தமை காரணமாகவே அவர் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சுய நினைவுக்கு திரும்பிய ஜமி ரொபேர்ட்ஸனுக்கு, தான் உயிருடன் இருப்பøதப் பார்த்து பெரும் வியப்பு. விமானத்தின் வால் பகுதியில் அடிபட்டு வீசப்பட்ட சமயம் தன்னுடைய கதை அத்துடன் முடிந்தது என்ற உணர்வே தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment