எல்லாமே நீதான்...

எந்தன் வாழ்வின் இன்பங்கள் நீயே
எந்தன் வாழ்வின் துன்பங்கள் நீயே
இரண்டையும் எனக்கு தந்தவள் நீயே
உன்னோடு நானும் வாழ்கையில் தானே
எந்தன் வாழ்வின் இன்பத்தை கண்டேன்
நீ என்னை பிரிந்ததன் பின்னே
எந்தன் வாழ்வில் துன்பத்தை உணர்ந்தேன்

எந்தன் வாழ்வின் இன்பங்களெல்லாம்
எனக்கு சொல்லி தந்தவள் நீயே
எந்தன் வாழ்வின் துன்பங்களெல்லாம்
எனக்கு உணர்த்தி சென்றதும் நீயே

பட்டாம் பூச்சி இறக்கையில் என்னை
வானில் பறக்க செய்தவள் நீயே
எந்தன் இறக்கையை பறித்துக்கொண்டு
வானில் பறக்க சொன்னதும் நீயே

உந்தன் செல்ல பேச்சை கேட்க
மணிக்கொருமுறை போண் எடுத்ததும் நானே
உந்தன் குரலே வேண்டாம் என்று எந்தன் போணை
உடைத்தவனும் நானே.....

உன்னை பார்த்த எந்தன் உணர்வை
கம்பன் கூட எழுத மாட்டான்
உன்னை பிரிந்த எந்தன் இதயத்தை படிக்க இங்கு
கவிஞன் எவனும் பிறக்கவும் இல்லை.

No comments:

Post a Comment