கும்மாளம் பொறியியல் கல்லூரி

ஆரம்பம் “கும்மாளம் பொறியியல் கல்லூரி” சிறப்பம்சங்கள்

1. மாணவர்கள் தேர்வுகளில் பிட் அடிக்க அனுமதிக்கப்படுவார்கள்

2. பிட் அடித்து / காப்பி அடித்து / அடுத்தவர் லாக் இன் ஐடியை பயன்படுத்து பிடிபடும் மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காது

3. மாணவர்களும், மாணவிகளும் கூடி கும்மாளம் அடிக்க வசதி செய்தி தரப்படும்

4. ஸ்பெஷல் க்ளாஸ் என்ற பெயரில் மாணவ மாணவியர் இரவு 11 மணிக்கு கூட ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வரலாம்

5. கல்லூரி பேரூந்தில் படியில் தொங்கிக்கொண்டு வர வேண்டும்

இப்படி ஒரு கல்லூரி இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை சேர்ப்பீர்களா அல்லது கீழே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் கல்லூரியில் சேர்ப்பீர்களா

ஒரு கல்லூரியை பற்றி கூறப்படும் “குற்றச்சாட்டுகள்”

“சார் நாங்க மாணவர்களா, கைதிகளான்னு தெரியல. அந்த அளவுக்கு எங்கள இங்க அடக்கி வைக்கிறாங்க. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இங்க பேசிக்கக்கூடாது. சும்மா ஒரு ஹலோ சொன்னா கூட பெற்றோரை உடனே வரச்சொல்லி ஒரு வாரம் அலைய விடுவாங்க. காலேஜ் பஸ்ல படியில நிக்கக்கூடாது.மீறுனா ஒரு வாரத்திற்கு அந்த ஸ்டாப்புல பஸ் நிக்காது. அடுத்த ஸ்டாப்புக்கு போயிதான் ஏறனும்

பிட் அடிக்கிறது தப்புத்தான். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அப்படி செஞ்சா, இண்டர்னல் மார்க் இருபதையும் கட் பண்ணிடுவாங்க. அப்புற்ம் இங்க மாடல் எக்சாம் எழுத முடியாது. நேரடியாக யுனிவர்சிடி எக்சாமைத்தான் எழுதனும். தினம் தினம் செத்து பிழைக்கிறோம் சார்”

No comments:

Post a Comment