வேட்டைக்காரனில் ப்ரியாமணியா?

நாமதான் இந்திரன் தோட்டத்து முந்திரின்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது, அதெல்லாம் கிடையாது எந்திரின்னா எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கு ப்ரியாமணி நிலைமை! தமிழ், தெலுங்கு, மலையாளம்னு கலந்து கட்டி அடிக்கிறளவுக்கு திறமை இருக்கு. சிற்பம் மாதிரி ஸ்ட்ரெச்சர் இருக்கு. ஹ§ம், இருந்தும் என்ன பண்ணுறது? விஜய், அஜீத் மாதிரி முன்னணி ஹீரோக்களோட டூயட் பாட முடியலையே? இந்த ஏக்கத்தை போக்க என்னென்னவோ து£து விட்டும், கதை நடக்கல. காரியமும் கைகூடலே. இந்த நேரத்திலேதான் வேட்டைக்காரன் படத்திலே நடிக்க ஒரு அழைப்பு வந்திச்சாம். அதுவும் இரண்டாவது நாயகி கேரக்டருக்கு. படமே எழுபது சதவீதம் முடிஞ்சாச்சு. இனிமேல் எதற்கு இன்னொரு நாயகி? வேறொன்றுமில்லை, இந்த கேரக்டருக்கு முன்னணி நாயகிகளை தேடி அலுத்துப் போனவர்கள், புதுமுகத்தை போட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள்.

அனுஷ்கா ஃபுல் மீல்ஸ். நான் ஆஃப் பாயிலா என்று அலறாத குறையாக வருந்திய ப்ரியாமணி, வேட்டைக்காரனில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாக தகவல். அதனால்தான் இந்த புதுமுக முடிவு. இதற்கிடையில், ஆறுதல் சொல்ல நீள்கிற விரலாக விஷால் வந்து கண்ணீரை துடைத்திருக்கிறார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்கிறாராம் ப்ரியாமணி. முதலில் முடியாது என்று மறுத்தவர்தான் இப்போது சரி என்று சம்மதித்திருக்கிறார். பின்னணியில் என்ன நடந்தது என்பது நமக்கெதுக்கு?

ஆனால், இந்த ரோலும் இவருக்கு நேரடியாக கிடைக்கவில்லை என்பது இன்னொரு ஷாக். முதலில் நடிக்க சம்மதித்திருந்த ரீமாசென், என்னவோ கடைசி நேரத்தில் விலகிக் கொண்டாராம். இதனால் ரீமாசென் ரோலுக்கு செலக்ட் செய்யப்பட்டிருக்கிறார் ப்ரியாமணி.

No comments:

Post a Comment