சிறுநீர் மூலம் கார் இயங்கும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

நியூயார்க் : சிறுநீர் மூலம் காரை இயக்கமுடியும், என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள், சிறுநீரிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்கி அதன் மூலம் காரை இயக்க முடியும், என சோதனை செய்துள்ளனர்.

இது குறித்து, இந்த பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஜெரார்டைன் போட் குறிப்பிடுகையில், "சிறுநீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் நிக்கல் எலெக்ரோடு வைத்து மின்சாரத்தை பாய்ச்சினால் அதிலிருந்து ஹைட்ரஜன் கிடைக்கிறது. இந்த முறையில் பேட்டரியை இயக்க முடியும். நாலரை லிட்டர் சிறுநீரை கொண்டு 144 கிலோ மீட்டர் வரை காரை இயக்க முடியும்' என்றார்.ஜார்ஜியா பல்கலைகழக பேராசிரியர் ஜான் ஸ்டிக்னி குறிப்பிடுகையில், "யூரியா மற்றும் சிறுநீரை கொண்டு வேறென்ன செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே, கால்நடை மற்றும் மனித கழிவுகள் விளை நிலங்களில் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் உள்ள அனைத்து கால்நடை மற்றும் மனித கழிவுகளை முழுவதுமாக பயன்படுத்தினாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இந்த கழிவுகளை கொண்டு எரிபொருள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு உபயோகப்படுத்தினால் மனித கழிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விடும்' என்றார்.

No comments:

Post a Comment