வாதாட மட்டுமல்ல; விளையாடவும் தெரியும் : வக்கீல்கள் ஆடும் வாலிபால் போட்டி

கோவை: வக்கீல்கள் மட்டும் பங்கேற்கும் மாநில அளவிலான, "பார் அசோசியேஷன் டிராபி' வாலிபால் போட்டி, ஆகஸ்ட் 15ல் கோவையில் நடக்கிறது.கோவை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில், முதன்முதலாக வக்கீல்கள் பங்கேற்கும் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடக்கிறது. போட்டிகளின் துவக்க விழா, ஆக., 15ல், கோர்ட் வளாகத்தில் உள்ள வாலிபால் விளையாட்டு மையத்தில் நடக்கிறது. மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம் தலைமை வகித்து, போட் டியை துவக்கி வைக்கிறார்.ஆக., 16ல், அரையிறுதி போட்டிகள் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடக்கிறது. இறுதி போட்டி மாலை 3.00 மணிக்கு நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கும் விழா, மாலை 5.00 மணிக்கு நடக்கிறது.

வெற்றி பெறும் அணி மற்றும் வீரர்களுக்கு, அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட நீதிபதிகள் சொக்கலிங்கம்(கோவை), முருகன்(நீலகிரி), கலெக்டர் உமாநாத், எம்.பி., நடராஜன் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.வெற்றி பெறும் அணிக்கு சுழல் கோப்பை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது. அடுத்து வரும் அணிக்கு கேடயத்துடன் 10 ஆயிரம் ரூபாயும், மூன் றாவது இடம் பிடிக்கும் அணிக்கு கேடயம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இப் போட்டியை கோவை வக்கீல்கள் வாலிபால் கிளப் நடத்துகிறது.இத்தகவலை கோவை வக்கீல்கள் சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் மாதவன் ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment