கழுதை மீது ஏறி 'காமெடி'

உத்தமபாளையம்: கம்பம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கழுதை மீது ஏறி வந்தவர், மூன்று நிமிடம் தாமதமானதால் மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார். தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாவட்ட பொதுச்செயலர் சேகர்ஜீ(44). இவர் கம்பம் தொகுதியில் மனு தாக்கல் செய்ய நேற்று உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு கழுதை மேல் ஏறி வந்தார். தேர்தல் அலுவலர், ""மனு தாக்கல் நேரம் முடிந்துவிட்டது'' என்று கூறினார். கழுதையை மினிடோர் வாகனத்தில் ஏற்றி அனுப்பி விட்டு இவர் பைக்கில் வீடு திரும்பினார்.

No comments:

Post a Comment