காதலை சொல்ல முடியாமல்

அர்த்தமில்லாமல்
அகால வேளையில் பொழிவதாய்
அலுத்து கொள்கிறாய்
இந்த மழையை..

உன்னிடம்
காதலை சொல்ல முடியாமல்
வார்த்தைகளை
மென்று விழுங்கிகொண்டிருக்கும்
எனக்கு

இந்த மழை
வார்த்தைகளை கோர்த்து தருகிறது
என்று சொன்னால்
நீ நம்புவாயா??

No comments:

Post a Comment