அழகிற்கு நிகர்?

காதல் பேசும் கண்கள்--என்னை
கவர்ந்துகொண்டபோது....
உதட்டு ஓரச் சிரிப்பு--என்னை
ஒட்டிக்கொண்டபோது....
கொள்ளை கொண்ட அழகு--என்னை
ஆக்கம்கொண்டபோது...

சிறையாய் ஆனேன்
உனக்குள் நானும்
உறவை வைத்தாய்
எனக்குள் நீயும்
என்னைக் கவர்ந்தாய்
ஏன்தான் பெண்ணே

நிலவே நீ ஏன் நலமா என்றாய்
வார்த்தை கேட்டு சிலையாய் நின்றேன்
கரங்கள் பட்டு காற்றாய் போனேன்
காந்தம் ஆனேன் உந்தன் பக்கம்

உறங்கும் போதும் கனவில் வந்தாய்
விழிக்கும் போதும் நினைவில் வந்தாய்.
அலைகள் அடிக்கும் கடலாய் ஆனேன்
ஆழம் காணா மனசாய் போனாய்
அழகே என்னை கவர்ந்தாய் ஏனோ?

கவர்ந்த உன் விழியில்
காவியம் படைத்தேன்
மலர்ந்த உன் முகத்தில்
ஓவியம் கண்டேன்

நடந்த உன் அழகில்
கவிதைகள் படைத்தேன்
அழகின் படைப்பில் ஏவாள் நீயோ?
அழகே உந்தன் அழகில் யார்?
அதுகும் நீயே நிகரில் நீயே.

No comments:

Post a Comment