சூர்யாவுக்கு கதை சொன்ன வெற்றிமாறன்

ஆடுகளம் படத்தை எடுக்க ஏன் இத்தனை நாட்கள்? வெற்றிமாறனிடம் கேட்டதற்கு, ஆடுகளம் மதுரை பின்னணியில் தயாராகும் படம். நான் சென்னை ஆள். மதுரை பாஷை தெ‌ரிந்து படம் எடுக்க வேண்டியிருக்கு. அதுதான் லேட் என்றார்.

மதுரையில் நடக்கும் படப்பிடிப்புக்கு நடுவில் சென்னை வந்த வெற்றிமாறன், சூர்யாவை சந்தித்து அவுட் லைன் ஒன்றை கூறியிருக்கிறார். இந்த அவுட் லைன் சூர்யாவுக்கு பிடித்திருக்கிறது. கதையை டெவலப் செய்யுங்கள் என்று வெற்றிமாறனிடம் அவர் கூறியிருக்கிறார். ஆடுகளத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் இதுவாகவே இருக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தை மாசிலாமணி படத்தை தயா‌ரித்திருக்கும் கல்பாத்தி எஸ் அகோரம் தயா‌ரிப்பார் என்று தெ‌ரிகிறது.

No comments:

Post a Comment