ஜெயலலிதா மென்பொருள் நிபுணரானால்...!!!

மேனேஜர்: இந்த ப்ராஜெக்டை நாம ஜாவாலே பண்ணப் போறோம்.

ஜெ: ஜமாய்ச்சிபுடலாம். பிரச்சினையே இல்லை.

மே: கொஞ்ச நாள் முன்னாடி இதையே சொன்னதுக்கு - எனக்கு ஜாவா தெரியாது, அதனால் இதை செய்ய முடியாதுன்னீங்களே?

ஜெ: அது போன மாசம்.

மே: இப்போ எப்படி தெரிஞ்சது உங்களுக்கு ஜாவா?

ஜெ: நேத்து என் நண்பர் ரவி ஜாவா சிடி கொண்டு வந்து காட்டினாரு. அதை ஒரு அரை மணி நேரம் பாத்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். இவ்ளோ நாளா ஜாவா தெரிஞ்சிக்காமே இருந்தது தப்புதான். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க.

மே: சரி. எல்லா வேலையையும் சீக்கிரமா முடிச்சி தர்றேன்னு க்ளையண்டுக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பினீங்க.

ஜெ: அந்த மின்னஞ்சலை நான் அனுப்பலை. என் கணிணியிலேந்து வேறே யாரோ அனுப்பிட்டாங்க.

மே: நேத்திக்கு கேட்டபோது, நாந்தான் அனுப்பினேன்னு சொன்னீங்களே?

ஜெ: நான் அப்படி சொல்லவே இல்லை. உங்களுக்கு "செலக்டிவ் அம்னீஷியா" இருக்கும்னு நினைக்கறேன்.

மே: சரி விடுங்க. இந்த வேலையை சரியா செஞ்சி முடிப்பீங்களா? ராத்திரியெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

ஜெ: எனக்கு குடும்பம் ஒண்ணும் இல்லை. அதனால் அலுவலகமே கதின்னு கிடப்பேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்க.

மே: உங்க குழுவிலே இருக்கறவங்க கிட்டேயும் நிறைய வேலை வாங்க வேண்டியிருக்கும்.

ஜெ: அது என் பிரச்சினை. பெண்டு நிமித்தி வேலை வாங்கறேன்.

மே: அவங்க வேலை செய்யலேன்னா...

ஜெ: ராவோட ராவா எல்லாரையும் வேலையை விட்டு துரத்திடறேன்.

மே: சரி. உங்களையே இந்த ப்ராஜெக்ட் மேனேஜரா போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கே வேலையை ஆரம்பிக்கறோம்.

ஜெ: ப்ராஜெக்ட் என் கைக்கு வந்துடுச்சு இல்லே. இனிமே நான் சொல்றதுதான் இங்கே சட்டம். நீங்க கொஞ்சம் அப்படி சைட்லே உக்காருங்க.

மே: அப்படின்னா...

ஜெ: நாளையிலேந்து நான் மூணு மாசம் லீவ்லே போறேன். திரும்ப வந்தப்பிறகுதான் வேலை ஆரம்பிக்கறோம்.

மே: எதுக்கு இப்ப திடீர்னு லீவ்?

ஜெ: நான் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆயிட்டேன்னா தமிழ்நாடு, கேரளா இங்கேயிருக்கற கோயில்கள்லே வந்து தரிசனம் பண்றதா வேண்டிக்கிட்டிருந்தேன். அதுக்கு ஒரு மாசம். அப்புறம் ஆந்திராலே போய் ஓய்வு எடுத்துக்கறதுக்கு ரெண்டு மாசம். மொத்தம் மூணு மாசம்... வர்ட்டா... பை......

No comments:

Post a Comment