பெண்ணே பேசிவிடாதே !

கவிஞர்கள்
அதிகமாகத்தான்
இருக்கிறார்கள்
ஆனால்
கவிதைகள்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறது

காதலர்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
காதல்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறது

கடவுள்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
மனிதர்கள்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறார்கள்

வார்த்தைகள்
அதிகமாகத்தான்
இருக்கிறது
ஆனால்
காதல்
மௌனமாகத்தான்
இருக்கிறது
உன்னில்...

சில வார்த்தைகள்
பேசப்படும்போது
அழகாக
இருக்கின்றன

சில வார்த்தைகள்
கவிதையாகும்போது
அழகாக
இருக்கின்றன

சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன

உன்
காதலைப்போல்!

No comments:

Post a Comment