சப்பாத்தி மாவும், ஜாவா மென்பொருளாளரும்...

நேத்து சாயந்திரம், வழக்கம் போல போற உணவகத்துக்குப் போய், வழக்கம் போல சாப்பிடுற தோசைய, வழக்கம் போல பிச்சு பிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது, காதுல விழுந்த டயலாக் இது.. மென்பொருளாளருக்கும் (மெ.பொ), அவருடைய நண்பருக்கும்(மெ.பொ.ந), சர்வருக்கும்(சர்) இடையே நடந்த உரையாடல்...

மெ.பொ: சாப்ட என்னண்ணா இருக்கு?

[சர்வர், சப்பாத்தி, தோசைன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே போட ஆரம்பிக்கிறாரு. உடனே மென்பொருளாளனின் நண்பன் குறுக்கிட்டு...]

மெ.பொ.ந: ண்ணா..ண்னா.. நிப்பாட்டுங்க.. இவன் அவ்ளத்தயும் சும்மா கேட்டுட்டு, கடைசியில ரெண்டு சப்பாத்தியோ, தோசையோதான் கேக்கப் போறான். நீங்க அதயே கொண்டு வாங்க.

மெ.பொ: டேய்... சப்பாத்திக்கும், தோசைக்கும் என்னடா பெரிய வித்தியாசம்.. மாவுல கொஞ்சமா தண்ணிய ஊத்தி, பிசைஞ்சு, சுட்டு சப்பாத்தின்னு குருமாவோட கொண்டு வந்து குடுக்குறாங்க.. அதுவே மாவுல கொஞ்சம் தண்ணி அதிகமாயிடுச்சுன்னா, இன்னும் கொஞ்சம் தண்ணிய ஊத்தி, சுட்டு, தோசைன்னு சொல்லி, சட்னியோட கொண்டு வந்து குடுக்குறாய்ங்க... அவ்ளவுதாண்டா!! (எவ்வளவு பெரிய உண்மைய சொல்லிட்டாரு; சரி, இத எதுக்கு இப்ப சொன்னான்!?!

மெ.பொ.ந: !!!!!!!!

சர் : மாவு ஒரே மாவுன்னாலும், செய்றதுல வித்தியாசம் இருக்குல்ல... இப்ப கம்ப்யூட்டர் கம்பெனிகள எடுத்துக்ககுங்க.. ஒரே மாதிரி டி.வி பொட்டிதான் இருக்கு.. ஒரே கீபோர்டுதான்.. எல்லாரும் ஒரே மதிரிதான் தட்டிக்கிட்டு இருக்காங்க... ஆனா, அப்புறம் ஏன் சிலருக்கு அம்பதாயிரமும், சிலருக்கு பத்தாயிரமும் சம்பளம் குடுக்குறாங்க!?

மெ.பொ, மெ.பொ.ந: !!??!!??!

சர்: இதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல..

மெ.பொ.ந: ண்ணா.. நீங்க என்ன வேணும்னாலும் போய் எடுத்துட்டு வாங்கண்ணா.. பில்ல வேணும்னாலும் கூட இப்பவே எடுத்துட்டு வாங்க.. பசிக்குது!!

[ஹி.ஹி.ஹி. மென்பொருள் துறையப் பத்தி நெறய பேரு இப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருக்காங்க..]

No comments:

Post a Comment