சூர்யாவை எரிச்சலூட்டிய ‘ச்சும்மா‘ நடிகர்!

முக்கிய விழாக்களுக்கு போகும் போது சந்தோஷம் வரும். மாலையை போட்டு மாரோட அணைச்சுக்கிட்டா அந்த சந்தோஷம் நீடிக்கும். மாலைக்கு நடுவிலே குண்டூசியை நுழைச்சா, அதே சந்தோஷம் புட்டுக்கும். அப்படிதான் நேர்ந்தது சூர்யாவுக்கு. தனது நண்பர் அருண் விஜயை வாழ்த்த பரந்த மனசோடு மலை மலை ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அருணும் சரி, அவரது குடும்பமும் சரி, அன்போடு வரவேற்று ஆசையோடு மேடையேற்றியது. ஆனால், மேடையில் இருந்த ஒன்றிரண்டு துக்கடா நடிகர்களால் கச்சடா ஆனது சூர்யாவின் மனசு.

அருண் விஜயின் க்ளோஸ் பிரண்டு உதயாவை பேச அழைத்தார்கள். இவரும் ஒரு இளம் ஹீரோதான். ஆனால் நடித்த படங்கள் எதுவும் பெரிசாக ஓடவில்லை. இந்நிலையில் மைக் பிடித்த உதயா, “இந்த விழாவுக்கு சூர்யா வந்திருக்காரு. அவருக்கு ஒரு பாலா கிடைச்சார். ஆனா எங்களுக்கு கிடைக்கலியே? அப்படி கிடைச்சிருந்தா நாங்களும் சூர்யா மாதிரி ஆயிருப்போம். அப்படி ஆகணும்ங்கிற ஆசை எங்களுக்கும் நிறைய இருக்கு. எல்லாரும் சூர்யா சூர்யான்னு பெரிய நடிகரு பக்கமே போனா நாங்க எப்போ சூர்யா ஆகறது? எங்களையும் வச்சு படம் எடுக்கணும்னு பாலாவை போன்ற இயக்குனர்களை கேட்டுக்கிறேன்“ என்றார். தொடர்ந்து,

“அருண் விஜய் மாமாதான் இந்த படத்தை அவருக்காக எடுத்திருக்காரு. என்னையும் வச்சு அவரு படம் எடுக்கணும். நான் வேணா ஃப்ரீயா நடிச்சு தர்றேன்“னு இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே போக, சூர்யா நெளிஞ்சதை பார்க்கணுமே?

No comments:

Post a Comment