சிதம்பரம் கோயிலுக்கு வரும் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தர உள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிதம்பரம் நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கர்நாடக முதல்வர் எடிïரப்பா நாளை சிதம்பரம் வருகிறார். அங்குள்ள நடராஜர் கோயிலுக்கு சென்று அவர் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அவர் சிதம்பரம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘தமிழகத்திற்கு காவிரிநீர் தர மறுக்கும் எடியூரப்பா திரும்பி போ! இவண் தமிழர் உழவர் முன்னணி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை சிதம்பரத்திற்கு வரும் எடியூரப்பாவை கண்டித்து கறுப்பு கொடி காட்டவும் தமிழர் உழவர் முன்னணியினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து சிதம்பரம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment