ஒரு நாள் பார்வையிலே

ஒரு நாள் பார்வையிலே
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவளே
பார்த்தேன் உன்னை சிலநாள்
பழகினேன் உன்னுடன் பலநாள்

தீயாய் மூண்டது நம்காதல்
திரிந்தோம் ஜெயபுரம் வீதியெல்லாம்
திட்டித் தீர்த்தன உன் உறவுகள்
திட்டமின்றி வெளியானோம் வீட்டைவிட்டு

காலை விடிந்தது
அதுவே நம் கல்யாணமானது
என்னை ஏற்கவில்லை உன் உறவுகள்
ஏனெனில் நான் ஏழை என்பதனால்

நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்

நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே...

No comments:

Post a Comment