நிலவுக்கு ஆளில்லா விண்கலம் : நாஸா அனுப்பியது

நிலவுக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாஸா' அனுப்பியுள்ளது.

நிலவில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்தும், நிலவின் பரப்பை வரையவும் இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

நிலவு குறித்த நாம் அறிந்து இருக்கும் தகவல் மிகவும் குறைவாகவே உள்ளது.நிலவின் பரப்பு குறித்த வரைபடத்தை விட செவ்வாய் கிரகம் குறித்த வரைபடம்தான் நம்மிடம் சிறப்பாக உள்ளது.

எனவேதான் நிலவு குறித்து மேலும் பல தகவல்களை அறிந்து கொள்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டிருப்பதாக நாஸா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நேரப்படி நேற்று மாலை 5.32 மணிக்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம், நிலவின் உள்வட்டப்பாதையில் நுழைய 4 நாட்கள் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment